பாஜகவினர் செய்த செயல்.. லண்டனில் இருந்து மன்னிப்பு கேட்ட அண்ணாமலை..சீனிவாசனிடமும் வருத்தம்

கோவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் சீனிவாசன் மன்னிப்பு கேட்ட தனிப்பட்ட வீடியோவை பாஜகவினர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டதற்கு மாநிலத்தலைவர் அண்ணாமலை மன்னிப்பு கேட்டுள்ளார்.

Sep 13, 2024 - 14:29
 0
பாஜகவினர் செய்த செயல்.. லண்டனில் இருந்து மன்னிப்பு கேட்ட அண்ணாமலை..சீனிவாசனிடமும்  வருத்தம்
BJP leader Annamalai


கோவையில் தொழில்துறையினருடன் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்  நேற்று முன்தினம் ஜி.எஸ்.டி வரி விதிப்பு தொடர்பாக ஆலோசனை நடத்தினார். அப்போது ஜிஎஸ்டியில் உள்ள குறைபாடுகள் மற்றும் சிக்கல்கள் தொடர்பாக தங்களது பிரச்சனைகளை தெரிவித்தனர். இந்த கூட்டத்தில் பலரும் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கி வந்த நிலையில்  கோவையில் மிகவும் பிரபலமான ஸ்ரீ அன்னபூர்ணா உணவகத்தின் நிர்வாக இயக்குநர் சீனிவாசன் ஜி.எஸ்.டியில் ஏற்படும் பிரச்சனைகளை அமைச்சரிடம் பட்டியலிட்டார். எங்க கடையின் ரெகுலர் கஸ்டமர் தினமும் அவர்கள் சண்டை போடுகிறார்.  

இனிப்புக்கு  5 சதவிகிதமும், காரத்துக்கு 12 சதவிகிதமும் ஜி.எஸ்.டி விதிக்கப்படுது.  இத்தனை வகையான ஜிஎஸ்டி போட்டா கடை நடத்த முடியல மேடம் என கூறியிருந்தார். மேலும் பன்னுக்கு ஒரு விலை பன்னுக்குள் உள்ளே வைக்கின்ற ஜாமுக்கு ஒரு ஜிஎஸ்டி இருப்பதாக கூறியிருந்தார். இதனால் சாப்பிட வரும் கஷ்டமர் பன்னு மட்டு கொடுங்க நாங்களே சீனியை வைத்துக் கொள்கிறோம் என தெரிவிப்பதாவும் நகைச்சுவையாக கூறியிருந்தார். மேலும் தனித்தனி ஜிஎஸ்டி விதிப்பதால் கம்யூட்டரே குழம்பிவிடுவதாக கூறியிருந்தார் சீனிவாசன். இது குறித்த வீடியோ சமூக வலைத்தளத்தில் அதிகம் பகிரப்பட்டது. 

இதனையைடுத்து நேற்று ( செப்டம்பர் 12) அன்னபூர்ணா உணவகத்தின் நிர்வாக இயக்குநர் சீனிவாசன் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாரமனை சந்தித்து மன்னிப்பு கோரினார். அதில் நான் எந்த கட்சியையும் சேர்ந்தவன் இல்லை. நான் தவறாக பேசியிருந்தால் மன்னித்துக்கொள்ளுங்கள் என எழுந்து நின்று கையெடுத்து கும்பிட்டு கேட்ட வீடியோவும் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டது.

 ஹோட்டல் உரிமையாளர் சீனிவாசனை நிர்மலா சீதாராமன் மன்னிப்பு கேட்க வைத்து விட்டதாக பலரும் விமர்சித்து வந்தனர்.அந்த வீடியோவை டெலிட் செய்ய வேண்டும் எனவும், நிர்மலா சீதாராமன் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தனர்.இது தொடர்பாக லோக்சபா எதிர்கட்சித்தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.இந்த நிலையில் இது குறித்து விளக்கம் அளித்த கோவை எம்எல்ஏ வானதி சீனிவாசன், நான் ஜிலேபி சாப்பிட்டதே இல்லை என்று கூறினார். அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சீனிவாசன்தான் நேரம் கேட்டார். அவரை யாரும் மிரட்டவில்லை. வேண்டுமெனில் அவரையே நீங்கள் நேரடியாகக் கேட்கலாம் என்றும் வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

இதனிடையே லண்டனில் உள்ள பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் பாஜகவினர் வீடியோ வெளியிட்டதற்கு மன்னிப்பு கோரியுள்ளார். அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பதிவில், அன்னபூர்ணா உணவக உரிமையாளர் சீனிவாசனுக்கும், மத்திய அமைச்சருக்கும் இடையே நடைபெற்ற தனிப்பட்ட வீடியோவை பாஜக நிர்வாகி வெளியிட்டதற்காக மன்னிப்பு கேட்கிறேன். இந்த விஷயம் தொடர்பாக சீனிவாசனை தொடர்பு கொண்டு பேசி தனது வருத்தத்தை தெரிவித்ததாகவும் கூறியுள்ளார் அண்ணாமலை. தமிழகத்தின் வணிகத்தில் தூணாகவும், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்பையும் சீனிவாசன் அளித்து வருகிறார். எனவே இந்த பிரச்சனையை உரிய மரியாதையோடு முடித்து வைக்குமாறு கேட்டுக்கொள்வதாகவும் அந்த பதிவில் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow