நிபா வைரஸ் பரவல் – அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்

தமிழகத்தில் எந்த மர்மக் காய்ச்சலும் இல்லை என மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்தார்.

Sep 25, 2024 - 09:32
 0

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்ரமணியன், “டெங்குக் காய்ச்சலின் பரவல் குறையத் தொடங்கி தமிழகத்தில் கட்டுக்குள் இருக்கிறது. டெங்கு உயிரிழப்புகளை பொறுத்தவரையில் 2016, 2017ஆம் ஆண்டுகளில் டெங்கு பாதிப்பால் உயிரிழப்புகள் அதிகம் ஏற்பட்டிருந்தன. அந்த நிலை தற்போது இல்லை.

கேரள - தமிழக எல்லைகளான 17 பகுதிகளில் சுகாதாரத்துறையின் நிபா வைரஸ் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எல்லை கடந்து வருபவர்களிடம் வெப்பநிலைமாணி கொண்டு பரிசோதனைகள் செய்யப்படுகின்றன.

இதுதவிர குரங்கம்மை நோய்க்கென தமிழகத்தில் சிறப்பு வார்டுகள் தயார் நிலையில் உள்ளன. தற்போது தமிழகத்தில் எந்த மர்மக் காய்ச்சலும் இல்லை. மழைக்காலம் வருவதால் எங்கும் தண்ணீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன” என்று தெரிவித்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow