ஆளுநர் ஆர்.என்.ரவி தான் அறிவாளி.. ஞானம் இல்லாதவன் பகுத்தறிவுவாதியா?.. ஹெச்.ராஜா அதிரடி

மெத்தப்படித்த அறிவாளியாக ஆளுநர் ஆர்.என்.ரவி இருக்கிறார். அதனால் உண்மைகள் மக்களுக்கு சொல்கிறார் என்று பாஜக ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

Sep 25, 2024 - 10:00
Sep 25, 2024 - 10:04
 0
ஆளுநர் ஆர்.என்.ரவி தான் அறிவாளி.. ஞானம் இல்லாதவன் பகுத்தறிவுவாதியா?.. ஹெச்.ராஜா அதிரடி
மெத்தப்படித்த அறிவாளியாக ஆளுநர் ஆர்.என்.ரவி இருக்கிறார் - ஹெச்.ராஜா

சென்னை தாம்பரம் அடுத்த செம்பாக்கத்தில் பாஜக செங்கல்பட்டு வடக்கு மாவட்டம் சார்பில் உறுப்பினர் சேர்கை இயக்கம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக பாஜகவின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச்.ராஜா கலந்து கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஹெச்.ராஜா, “தமிழகத்தில் திராவிடியன் ஸ்டாக் அரசாங்கத்தின் கீழ் காவல்துறையின் செயல்பாடுகள் நமக்கு கவலை அளிக்க கூடியதாக இருக்கிறது. திரெளபதி படத்தில் இயக்குநர் மோகன் ஜி கைது செய்யப்பட்டார். கைது செய்த காரணத்தை சொல்லவில்லை.

உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி கைதுக்கான காரணத்தை சொல்ல வேண்டும். மோகன் ஜி முறைகேடாக கைது செய்யப்பட்டார். நீதிமன்றம் பெயில் கொடுத்திருக்கிறது. இந்த அரசாங்கம் எங்கே போய்கொண்டு இருக்கிறது.

ஒரு மிகப் பெரிய சட்டவிரோத வன்முறைவாதி, தா.மோ.அன்பரசனை அரசாங்கம் இன்னும் கைது செய்யவில்லை. பிரதமரை பீஸ் பீஸாக ஆக்குவீர்களா? காட்டுமிராண்டித்தனமாக இல்லையா? தமிழ்நாட்டில் அவரை மந்திரியாக வைத்திருக்கிறார் என்றால் ஸ்டாலின் அவருடைய கூற்றுக்கு உடந்தை என்று அர்த்தம். நாகரிகமான முதல்வர் என்றால் நீக்கி இருக்க வேண்டாமா?

தா.மோ.அன்பரசன் மந்திரியாக இருக்க எப்படி முதல்வர் அனுமதிக்கிறார்? பிரதமரை பேசியதை முதல்வர் ஏற்று கொள்கிறாரா? ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மூணாவது எண்கவுண்டர் நடந்துள்ளது. திருவேங்கடத்திற்கு என்ன கதையோ, அதே கதைதான் நடந்தது. காவல்துறை நியாமில்லாமல் ஏவல் துறையாக செயல்படுகிறது.

ஆளுநர் ஆர்.என்.ரவி சரியான உண்மைகளை பொது வெளியில் சொல்லியிருக்கிறார். 1975ஆம் ஆண்டு வரைக்கும் மதச்சார்பின்மை, சோசிலிசம் ஆகியவை சட்டத்தில் கிடையாது, நெருக்கடி நிலையின் போது இடது சாரிகளை, சிறுபான்மையினரை திருப்திபடுத்த இடைசொருகலாக கொண்டு வந்தது.

தமிழ்நாட்டில் அடிப்படை ஞானம் இல்லாதவன் பகுத்தறிவுவாதி என சொல்லி கொண்டிருக்கிறார்கள். மெத்தப்படித்த அறிவாளியாக ஆளுநர் ஆர்.என்.ரவி இருக்கிறார் அதனால் உண்மைகள் மக்களுக்கு சொல்கிறார். பொய்யர்களின் ஆட்சி இந்த ஆட்சி” என பேசினார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow