K U M U D A M   N E W S
Promotional Banner

தமிழ்நாடு

அறிவுரை கூறிய நபர் மீது கொடூர தாக்குதல்.. பிரபல ரவுடியால் பரபரப்பு

ஆலங்குடியில் அறிவுரை கூறியவர் மற்றும் அவரது  இரண்டு மகன்களை  உருட்டுக் கட்டையால் கொடூரமாகத் தாக்கிய பிரபல ரவுடி மற்றும் அவரது கும்பலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சட்ட விரோகமாக இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் பறிமுதல்.. சிறப்பு நுண்ணறிவு பிரிவினர் அதிரடி

சென்னை துறைமுகத்தில் சட்ட விரோகமாக இறக்குமதி செய்யப்பட்ட ரூ.26.4 கோடி ரூபாய் மதிப்புடைய வாசனை திரவியங்கள், காலணிகள், ட்ரோன்கள் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்ய்ப்பட்டுள்ளது. 

பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக மனு.. தமிழக அரசுக்கு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

பரந்தூர் விமான நிலையத்துக்கு ஸ்ரீபெரும்புதூர் தாலுகாவில் உள்ள மகாதேவி மங்கலம் கிராமத்தில் நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்த மனுவுக்கு பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2- வது பொருளாதார மாநிலமாக தமிழ்நாடு வளர்கிறது - அமைச்சர் எ. வ. வேலு

இந்தியாவின் இரண்டாவது பொருளாதார மாநிலமாக தமிழ்நாடு வளர்ந்து வருவதாக சட்டப்பேரவையில் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

மக்களின் பிரச்னைகளை உணர்ந்தவர்கள் அரசியலுக்கு வர வேண்டும் - மதுரை ஆதினம் பேச்சு

அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம் என்பது ஏற்றுக்கொள்ள முடியாது, அரசியல் தெரிந்து பக்குவப்பட்டவர்கள் மட்டுமே அரசியலில் வரவேண்டும் என்று மதுரை ஆதீனம் தெரிவித்துள்ளார்.

ஓடிடி, வெப் சீரிஸ் உள்ளிட்ட தளங்களால் வாய்ப்புகள் அதிகரிக்கிறது - நடிகை மிருணாளினி

திரையுலகை சேர்ந்த பெண்களுக்கு ஆண்களின் இடையூறு ஏற்படாமல் தவிர்க்க, தங்களை தாங்களே பாதுகாத்து கொள்ளும் வகையில் செயல்பட வேண்டும் எனவும் அதுவே தன் அனுபவம் என்று நடிகை மிருணாளினி கருத்து தெரிவித்துள்ளார்.

பெண் வாரிசுகளுக்கு வேலை வழங்கும் அரசாணை அமலில் உள்ளது - தமிழக அரசு நீதிமன்றத்தில் பதில்

கருணை அடிப்படையில் பெண் வாரிசுகளுக்கு மட்டுமே அங்கன்வாடி வேலை வாய்ப்பு வழங்கப்படும் என்ற அரசானை இன்னும் அமலில் தான் உள்ளது என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

முதல்முறையாக வேளாண் விளை பொருட்களுக்கு புவிசார் குறியீடு.. விவசாயிகள் மகிழ்ச்சி

தமிழகத்தில் முதல் முறையாக வேளாண் விளை பொருளான கும்பகோணம் வெற்றிலை மற்றும்  பூ மாலையான  தோவாளை மாணிக்க மாலை ஆகிய இரண்டிற்கும் புவிசார் குறியீடு அங்கீகாரம் கிடைத்துள்ளது.

தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில்  35–38° செல்சியஸ், தமிழக கடலோரப்பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 32–35° செல்சியஸ்,  மலைப் பகுதிகளில்  21–30° செல்சியஸ் பதிவாகியுள்ளது.

டாஸ்மாக் முறைகேடு: தமிழக அரசு வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய அமலாக்கத்துறை பதில்மனு

அமலாக்கத் துறையின் சட்டபூர்வமான விசாரணையை சீர்குலைக்கும் வகையில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ள வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என அமலாக்கத் துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

வழக்கறிஞர் கொலை வழக்கில் 2 பேர் கைது – விசாரணையில் பரபரப்பு வாக்குமூலம்

வழக்கறிஞர் வெங்கடேசன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக்கிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளது.

தினசரி 200 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்... அமைச்சர் கொடுத்த ரிப்போர்ட்

கடந்தாண்டை விட 7 லட்சம் மெட்ரிக் டன் அளவு கூடுதலாக நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

பூங்காவில் வைத்து இளைஞர் வெட்டிக்கொலை- 5 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பெங்கால் பெரவள்ளூரில் இருந்து வீட்டை காலி செய்து விட்டு வேறு இடத்திற்கு குடிபெயர்ந்தது விசாரணையில் தெரியவந்தது.

நீலகிரிக்கு சுற்றுலா போகிறீர்களா....அப்போ இதை கட்டாயம் செய்யுங்கள்

வார விடுமுறை நாட்களில் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்று கிழமைகளில் மட்டும் 8000 வாகனங்கள் அனுமதிக்கப்பட உள்ளன.

சென்னையில் வழக்கறிஞர் கொலை வழக்கு –கொலையாளி சிக்கியது எப்படி?

இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், வெங்கடேஷை கொலை செய்து விட்டு தப்பியுள்ளான் கார்த்திக்.

கல்லால் அடித்துக்கொலை செய்யப்பட்ட காவலர் – மேலும் ஒருவர் கைது

உசிலம்பட்டி அருகே காவலர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த 5வது குற்றவாளியை உசிலம்பட்டி தனிப்படை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

பிரியாணி ஆர்டர் செய்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி...ஊழியர்கள் பதிலால் வேதனை

இதுப்போன்ற சம்பவங்களின் போது கூட திருத்திக்கொள்ள முயற்சிக்காமல் அலட்சியம் காட்டும் இவர்கள் மீது உணவு பாதுகாப்புத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்

இதற்கெல்லாம் முற்றுப் புள்ளி வைக்கப்படும்...முன்னாள் அமைச்சர் ஆவேசம்

மண்ணை விற்பவன் திமுக காரன் அவன் மீது வழக்கு இல்லை, மண்ணை நிரவிய பொக்லைன் ஆபரேட்டர்  அதிமுக காரர்கள்  மீது பொய் வழக்கு போடுகிறார்கள்.

பூங்காவில் வைத்து இளைஞர் வெட்டிக் கொலை....

தகுதி வாய்ந்தவர்களுக்கு மூன்று மாத்தில் மகளிர் உரிமைத்தொகை - அமைச்சர் தங்கம் தென்னரசு

தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை தகுதி வாய்ந்தவர்களுக்கு இன்னும் மூன்று மாத காலத்தில் உரிய விண்ணப்பம் பெறப்பட்டு தகுதியானவர்களுக்கு உரிமைத்தொகை வழங்கப்படும் என தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். 

அறக்கட்டளைக்கு சொந்தமான 4 ஏக்கர் நிலம்.. வேறு நபருக்கு பட்டா!

திருப்பூரில் உள்ள அறக்கட்டளைக்கு சொந்தமான 4 ஏக்கர் நிலத்தை தவறுதலாக வேறு நபருக்கு பட்டா போட்டு கொடுத்து விட்டதாக, தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

யானைகள் இறப்பு எதுவும் நிகழவில்லை.. உயர் நீதிமன்றத்தில் ரயில்வே துறை விளக்கம்

ரயில்வே துறை மேற்கொண்ட பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கையால், கடந்த 27 மாதங்களாக ரயில் மோதி யானைகள் இறப்பு எதுவும் நிகழவில்லை என சென்னை உயர் நீதிமன்றத்தில் ரயில்வே துறை விளக்கமளித்துள்ளது.

நீலகிரியில் நாளை முதல் இ-பாஸ் நடைமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

நீலகிரியில் ஏப்ரல் 1 முதல் ஜூன் 30ஆம் தேதி வரை இ-பாஸ் நடைமுறை அமலில் இருக்கும் என்று மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தன்னேரு அறிவித்துள்ளார். வார நாட்களில் 6,000 வாகனங்களும், வார இறுதியில் 8,000 வாகனங்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், உள்ளூர் பதிவெண் கொண்ட வாகனங்களுக்கு விலக்கு அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட ஆசிரியை.. பின்னணி என்ன?

தனியார் பள்ளி ஆசிரியை 9-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பெண்கள் பெயரில் ‘சாட்டிங்’...89 லட்சத்தை சுருட்டிய 4 பேர் கைது

மேட்ரிமோனியல் எனப்படும், திருமணத்திற்கு வரன் தேடும் இணையதளம் மற்றும் செயலி வாயிலாக, வரன் தேடுவோரை குறி வைத்து, மர்ம கும்பல் பண மோசடியில் ஈடுபட்டு வருகிறது.