K U M U D A M   N E W S
Promotional Banner

தமிழ்நாடு

இறந்தும் உயிர் வாழும் கல்லூரி மாணவர்.. விபத்தில் மூளைசாவு.. உடல் உறுப்பு தானம்..!

இருசக்கர வாகன விபத்தில் மூளை சாவு அடைந்த கல்லூரி மாணவர் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்ட நிலையில், அவரது உடலுக்கு தாசில்தார் தலைமையில் அரசு மரியாதை செலுத்தப்பட்டது. 

இந்தியாவிலேயே முதன் முறையாக உதகையில் அதிநவீன மருத்துவக்கல்லூரி மருத்துவமனை..!

இந்தியாவிலேயே முதன் முறையாக பழங்குடியினர்களுக்கு என 50 படுக்கை வசதிகளுடன் மலை பிரதேசத்தில் அதிநவீன உயர் சிகிச்சையுடன் 700 படுக்கை வசதிகளுடன் 499 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட உதகை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையை எதிர்வரும் ஆறாம் தேதி தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளதாக, மருத்துவ கல்லூரி ஆய்வுக்கு பின் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சூரிய உதயத்தை காண கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்..!

சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் வார விடுமுறையான ஞாயிற்றுக்கிழமையான இன்று சூரிய உதயத்தை காண குவிந்த சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

மேட்டுப்பாளையத்தை குளிர்வித்த கோடைமழை..வெப்பத்தின் தாக்கம் குறைந்ததால் மக்கள் மகிழ்ச்சி

கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் படிப்படியாக உயர்ந்து கடும் வெப்பம் நிலவி வந்த நிலையில் இன்று மாலை பெய்த மழையால் குளிர்ந்த சூழல் நிலவியது

மதுரையில் பச்சிளம் பெண் சிசுவிற்கு நேர்ந்த சோகம்...விசாரணையை தொடங்கிய போலீஸ்

மதுரை மாநகர பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு குழந்தைகள் பெற்ற  தாய்மார்களின் விவரங்கள் குறித்து கேட்டறியப்பட்டுள்ளது.

யாரும் எதிர்பாரத பேச்சு..விமான நிலையம் வரை வருகை..ரேவந்த் ரெட்டியை வழியனுப்பிய ஆ.ராசா

மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுவரையறைக்கு எதிராக கட்சி வேறுபாடுகளை களைந்து போராட வேண்டும் என்றும் வலியுறுத்தினார். 

சென்னையில் மாணவர் மீது சரமாரி தாக்குதல்- உள்ளிருப்பு போராட்டத்தில் இறங்கிய சக மாணவர்கள்

விடுதியில் மேற்பார்வை பணியை ஒதுக்கிய காரணத்திற்காக மருத்துவக்கல்லூரி டீனை கண்டித்து மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பி.எஸ்.4 வாகனங்கள் மோசடியாக பதிவு- தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு

மனுவை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன்  மோசடியாக வாகனங்கள் பதிவு செய்யப்பட்டது குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

தொகுதி மறுசீரமைப்பு: 25 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்க வேண்டும் – தீர்மானம் நிறைவேற்றம்

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு தென் இந்திய மாநிலங்களே பெரிதும் உதவுகின்றன என பிஆர் எஸ் கட்சியை சேர்ந்த கே.டி.ராமாராவ் தெரிவித்தார்

தொகுதி மறுசீரமைப்பு கூட்டம்.. மாநில அரசுகளுக்கு தண்டனை வழங்குவதா? தெலங்கானா முதல்வர் கேள்வி..!

தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் கூட்டு நடவடிக்கைக் குழுவின் கூட்டம் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது. அனைவரையும் கனிமொழி எம்.பி.வரவேற்று பேசினார். இந்த கூட்டத்தில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உடன் பங்கேற்றார்.

இந்தியாவுக்காக ஓரணியில் திரண்டுள்ளோம் - முதல்வர் மு.க. ஸ்டாலின் பேச்சு

மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுவரையறையை ஒரு போதும் ஏற்கக்கூடாது என்றும், இந்தியாவுக்காக ஓரணியில் திரண்டுள்ளோம் என்றும் கூட்டு நடவடிக்கைக்குழு கூட்டத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சாலை விபத்தில் வாலிபர் மூளைச் சாவு..உடல் உறுப்பு தானம்!

சாலை விபத்தில் படுகாயமடைந்து வாலிபர் மூளைச் சாவு அடைந்த நிலையில் அவரது உடல் உறுப்புகள் கோவை அரசு மருத்துவமனையில் தானம் செய்யப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் தொடரும் போதைப்பொருள் விற்பனை.. போலீசார் தீவிர சோதனை..!

சென்னையில் மெத்தபெட்டமைன் விற்பனையில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 

கோடை விடுமுறை எதிரொலி.. விமான நிலையத்தில் செக்-இன் கவுண்டர் அதிகரிப்பு

சென்னை விமான நிலையத்தில் கோடை விடுமுறையையொட்டி பயணிகள் கூட்டம் அதிகரிக்க  தொடங்கியதால், சர்வதேச முனையத்தில் செக்-இன் கவுண்டர்கள் 120 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இலங்கை சிறையில் 11 மீனவர்கள் விடுதலை.. விமானம் மூலம் சென்னை வருகை

இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 11 மீனவர்கள்  இதில் இரண்டு மீனவர்கள் தலா 80 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்திய பின் விடுதலை செய்யப்பட்ட நிலையில் அனைவரும் சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர்.

அனுமதியின்றி போராட்டம் செய்தால் அபராதம் - அரசுக்கு நீதிமன்றம் யோசனை..!

அனுமதியின்றி போராட்டம் நடத்தப்படுவது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்திற்கு சுமை ஏற்படுத்துவதை விடுத்து உடனடி அபராதம் விதிக்கலாமே என சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசு யோசனை தெரிவித்துள்ளது.

கும்பகோணம் ரயில் நிலையம் முற்றிலும் புனரமைப்பு - தென்னக ரயில்வேயின் பொது மேலாளர்  ஆர்.என்.சிங் பேச்சு

கும்பகோணம் ரயில் நிலையம் 100 கோடி ரூபாய் திட்ட மதிப்பில் முற்றிலும் புனரமைக்கப்பட உள்ளதாக தென்னக ரயில்வேயின் பொது மேலாளர்  ஆர்.என்.சிங் இன்று (மார்ச்.21) கும்பகோணத்தில் ரயில் நிலையத்தை ஆய்வு செய்தவர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

யானைகளை இடமாற்றம் செய்தால் இவ்வளவு பிரச்னையா..? வெளியான ஷாக் ரிப்போர்ட்

ஒரு பகுதியை எல்லையை நிர்ணயித்து வாழும் யானை உள்ளிட்ட வன விலங்குகளை, வேறு இடங்களுக்கு இடமாற்றம் செய்தால், அச்சூழலில் அவை பிழைக்க வாய்ப்பு குறைவு என்று மாவட்ட உதவி வன பாதுகாவலர் விஜயகுமார் தெரிவித்துள்ளார். 

கத்தி முனையில் வழக்கறிஞர் கடத்தல்.. முன்னாள் ரானுவ வீரர் உட்பட 4 பேர் கைது..

மதுரையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே மக்கள் நடமாட்டம் உள்ள சாலையில் வழக்கறிஞரை காரில் கத்தி முனையில் கடத்தி சென்ற கும்பலில் தொடர்புடைய வழக்கறிஞரின் உறவினரான முன்னாள் ராணுவ வீரர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நெற்கொள்முதல் நிலையத்தில் முறைகேடு.. மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீர் மல்க புகார்!

மதுரை நெற்கொள்முதல் நிலையத்தில் நிலைய அலுவலர் முறைகேடு செய்ததால், நெற்பயிர்கள் முளைத்தும், வெடித்தும் வீணாகி சேதம் அடைந்துள்ளதாக மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீர் மல்க புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

முன்னாள் அமைச்சர் மீதான வழக்கை ரத்து செய்த உயர்நீதிமன்றம்..!

முன்னாள் மத்திய அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா மீதான  வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராணிப்பேட்டையில் பேரிடர் மீட்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி!

ராணிப்பேட்டையில் பேரிடர் காலத்தில் இடிபாடுகளில் சிக்கியவர்களை எவ்வாறு மீட்பது என்பது குறித்து தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள் தத்ரூபமாக செய்து காட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

சீமான் வழக்கு தள்ளுபடி.. ஆவணங்களை சமர்பிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு..!

நீதித்துறையை அவமதிக்கும் வகையில் பேசிய நாம் தமிழர் கட்சி சீமான் மீதான வழக்கை  எழும்பூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது தொடர்பான ஆவணங்களை சமர்ப்பிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பழமையான கோவில் பிரகாரத்திற்குள் திமுக கொடியுடன் கார்... ஆகம விதிமுறை மீறலா..? பொங்கிய பக்தர்கள்

இந்து அறநிலையத்துறை அதிகாரிகள், சம்பந்தப்பட்ட கோவில் அறநிலையத்துறை அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தி.மலையில் ஏரி மண் கடத்தி பதுக்கிய பாமக மா.செ... எச்சரிக்கை விடுத்த வட்டாட்சியர்

தங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்ததின் பெயரில் அங்கிருந்து பாமக மாவட்ட செயலாளர் செய்வதறியாது சென்று விட்டார்.