தென்மேற்கு பருவமழை காரணமாக, கர்நாடக மாநில காவிரி நீர் பிடிப்பு பகுதிகளின் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. கடந்த சில நாட்களாக, மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 18 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டிருந்தது.
காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 119 அடியாக இருந்து நிலையில், அணைக்கான நீர்வரத்து தற்போது அதிகரித்துள்ளது. நடப்பாண்டில் மேட்டூர் அணை 3வது முறையாக அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியிருக்கிறது.
மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 28 ஆயிரத்து 784 கன அடியிலிருந்து 31 ஆயிரத்து 500 கன அடியாக அதிகரித்து வருகிறது. நீர்மட்டம் 120 அடியாக உள்ளது. நீர் இருப்பு 93.47 டி.எம்.சி.யாக உள்ளது. அணை நிரம்பியதையடுத்து, 16 கண் மதகுகள் வழியாக உபரிநீர் திறக்கபட்டுள்ளது. இதனால், காவிரி கரையோரம் வசிக்கும் பொது மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு வருவாய் துறை சார்பில் ஒலிப்பெருக்கி மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே, மேட்டூர் அணையிலிருந்து உபரிநீர் திறக்கப்பட்ட நிலையில், வெள்ளத்தில் முதியவர் ஒருவர் அடித்துச் செல்லப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பெரியார் நகர் கால்வாயில் நீர் வந்தபோது, வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட முதியவர் சடையானை, அங்கிருந்து மீனவர்கள் மீட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வெள்ள அபாய எச்சரிக்கை விடுவதற்கு முன்பாகவே நீர் திறக்கப்பட்டதால் முதியவர் அடித்துச் செல்லப்பட்டதாக அங்குள்ள பொதுமக்கள் குற்றச்சாட்டி இருக்கின்றனர்.
காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 119 அடியாக இருந்து நிலையில், அணைக்கான நீர்வரத்து தற்போது அதிகரித்துள்ளது. நடப்பாண்டில் மேட்டூர் அணை 3வது முறையாக அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியிருக்கிறது.
மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 28 ஆயிரத்து 784 கன அடியிலிருந்து 31 ஆயிரத்து 500 கன அடியாக அதிகரித்து வருகிறது. நீர்மட்டம் 120 அடியாக உள்ளது. நீர் இருப்பு 93.47 டி.எம்.சி.யாக உள்ளது. அணை நிரம்பியதையடுத்து, 16 கண் மதகுகள் வழியாக உபரிநீர் திறக்கபட்டுள்ளது. இதனால், காவிரி கரையோரம் வசிக்கும் பொது மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு வருவாய் துறை சார்பில் ஒலிப்பெருக்கி மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே, மேட்டூர் அணையிலிருந்து உபரிநீர் திறக்கப்பட்ட நிலையில், வெள்ளத்தில் முதியவர் ஒருவர் அடித்துச் செல்லப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பெரியார் நகர் கால்வாயில் நீர் வந்தபோது, வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட முதியவர் சடையானை, அங்கிருந்து மீனவர்கள் மீட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வெள்ள அபாய எச்சரிக்கை விடுவதற்கு முன்பாகவே நீர் திறக்கப்பட்டதால் முதியவர் அடித்துச் செல்லப்பட்டதாக அங்குள்ள பொதுமக்கள் குற்றச்சாட்டி இருக்கின்றனர்.