K U M U D A M   N E W S

இந்தியா

14 நாள் தனிமைப்படுத்தப்பட்ட இந்திய விண்வெளி வீரர்.. நாசா கொடுத்த முக்கிய அப்டேட்..!

சர்வதேச விண்வெளி நிலையம் செல்லும் முதல் இந்திய வீரர் ஷுபான்ஷு சுக்லா, 14 நாள் தனிமைக்கு அனுப்பப்பட்டுள்ளார். விண்வெளி செல்லும் 3 வீரர்களையும், நாசா குழுவினர் உடல்நிலையை தகுதிப்படுத்தும் குவாரண்டைனுக்கு அனுப்பிவைத்து வாழ்த்து தெரிவித்தனர்.

’ஆபரேஷன் சிந்தூர்’ லோகோவினை வடிவமைத்த வீரர்கள் இவர்கள் தானா?

ஒரு சில வாரங்களுக்கு முன்பு இந்தியா முழுவதும் அதிகம் முணுமுணுக்கப்பட்ட வார்த்தையாக இருந்தது “ஆபரேஷன் சிந்தூர்”. அதன் லோகோ உணர்வுப்பூர்வமாக வடிவமைக்கப்பட்டிருந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர் லோகோவினை வடிவமைத்த வீரர்களின் பெயர்கள் இணையத்தில் தற்போது வெளியாகியுள்ளன.

யூடியூபரிடம் ரூ.50 லட்சம் கேட்கும் ANI.. உரிமையா? மீறலா?

இந்தியாவின் முன்னணி செய்தி முகமைகளில் ஒன்றான ஏசியன் நியூஸ் இன்டர்நேஷனல் (ANI) மீது பதிப்புரிமை மீறல் மற்றும் முறைகேடான வழியில் பணம் பறிப்பு (extortion) தொடர்பான குற்றச்சாட்டுகளை சுயாதீன யூடியூபர்கள் (Independent creators) எழுப்பியுள்ள சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளன.

UPSC தேர்வு: கவனத்தை ஈர்த்த பெரியார்- குகேஷ் குறித்த கேள்விகள்

நேற்று நடைப்பெற்ற UPSC முதல்நிலை தேர்வில் பெரியார் தொடர்பான கேள்வியொன்று சர்சைக்குள்ளான நிலையில், செஸ் விளையாட்டில் வரலாற்று சாதனை படைத்த டி.குகேஷ் குறித்த கேள்வியும் இடம்பெற்றிருந்தது அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்தியாவின் முதல் புல்லட் ரயில்- பாஜக அமைச்சர் கொடுத்த சூப்பர் அப்டேட்

இந்திய ரயில்வேத் துறையின் கனவுத் திட்டமான மும்பை - அகமதாபாத் இடையேயான அதிவேக புல்லட் ரயில் திட்டப் பணிகள் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை எட்டியுள்ளதாக குஜராத் மாநிலத்தை சேர்ந்த அமைச்சர் தெரிவித்துள்ளார். இதுத்தொடர்பாக சில புகைப்படங்களையும் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.

ஆப்ரேஷன் சிந்தூர்: புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது- பிரதமர் மோடி

உலக அளவில் பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் ஆப்ரேஷன் சிந்தூர் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் கொட்டித்தீர்த்த கனமழை.. இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

தலைநகர் டெல்லியில் விடிய விடிய கனமழை பெய்ததால், நகரின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் தலைநகரின் இயல்புநிலை கடும் பாதிப்புக்குள்ளானது.

நடுரோட்டில் பெண்ணுடன் உடலுறவு.. பாஜக ஆதரவாளர் மீது வழக்குப்பதிவு

நடுரோட்டில் ஒரு பெண்ணுடன் நபர் ஒருவர் உடலுறவு மேற்கொள்ளும் காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வைரலாகிய நிலையில், அவர் பாஜகவுடன் தொடர்புடைய நபர் என கண்டறியப்பட்டுள்ளது.அவர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் தேடி வருகின்றனர்.

தொழிலாளர்களுக்கு குட் நியூஸ்.. 8.25% EPF வட்டி விகிதத்திற்கு ஒப்புதல்!

பிப்ரவரியில் நடைபெற்ற மத்திய அறங்காவலர் குழுவின் கூட்டத்தில், EPFO ​​போன நிதியாண்டில் வழங்கிய 8.25% வட்டி விகிதத்தை, எவ்வித குறைவும் இல்லாமல் இந்த நிதியாண்டும் தொடர முன்மொழிந்தது. தற்போது முன்மொழிவானது நிதி அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் முன்கூட்டியே தொடங்கும் பருவமழை: 24 மணி நேரத்திற்குள் தொடங்க வாய்ப்பு!

கேரளாவில் அடுத்த 24 மணி நேரத்திற்குள் தென்மேற்குப் பருவ மழை தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

'வளர்ந்த பாரதத்துக்கான இந்திய அணி 2047' - பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம்!

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அனைத்து மாநில முதலமைச்சர்கள் பங்கேற்கும் நிதி ஆயோக் நிர்வாகக் குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது. 2047ம் ஆண்டு இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றும் இலக்கில் மாநிலங்களின் பங்களிப்பு குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இனி மைசூர் பாக் இல்ல.. மைசூர் ஸ்ரீ தான்.. பெயர் மாற்றத்திற்கு காரணம் என்ன?

மைசூர் பாக்கில் உள்ள 'பாக்' என்ற வார்த்தை பாகிஸ்தானை குறிப்பதால், ஆப்ரேஷன் சிந்தூர்-க்கு ஆதரவு அளிக்கும் வகையில் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், இந்தியா - பாகிஸ்தான் பதற்றத்தின் இடையே மைசூர் பாக் இனிப்பின் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியில் பேசியதால் பார்க்கிங் மறுப்பு: வைரலாகும் கூகுள் ஊழியரின் பதிவு

’நான் இந்தி மொழியில் வழிவிடுமாறு கேட்டதற்காக எனக்கு பார்க்கிங் மறுக்கப்பட்டது’, என பெங்களூரிலுள்ள கூகுள் நிறுவனத்தில் பணிபுரியும் அர்பித் பாயா தனது லிங்க்ட் இன் தளத்தில் பதிவிட்டுள்ளார். பெங்களூரில் ஏற்கெனவே இந்தி தொடர்பான பிரச்சினை விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் இவரது பதிவு வைரலாக தொடங்கியுள்ளது.

கனிமொழி தலைமையில் எம்.பி.க்கள் குழு இன்று ரஷ்யா பயணம்

பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியாவின் நிலைப்பாடு குறித்து கனிமொழி தலைமையிலான எம்.பி.க்கள் குழு ரஷ்யாவிடம் விளக்க உள்ளது.

ஆலங்கட்டி மழையில் சிக்கிய விமானம் - நடுவானில் அலறிய பயணிகளால் பரபரப்பு

நடுவானில் விமானம் குலுங்கிய போது, பயணிகள் அலறிய வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது

வடமாநிலங்களில் கொட்டித் தீர்த்த கனமழை- இயல்பு வாழ்க்கை பாதிப்பு

டெல்லி, உத்தரப்பிரதேசம் உள்பட வடமாநிலங்களில் கொட்டித் தீர்த்த கனமழையால் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.

வங்கதேசத்திற்கும் உளவு பார்த்தாரா யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா...விசாரணையில் சிக்கிய புதிய ஆதாரம்

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்டுள்ள யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா விரைவில் வங்கதேசத்திற்கு பயணம் செய்ய திட்டமிட்டிருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

நகைக்கடனுக்கு இப்படி ஒரு சிக்கலா? RBI அறிவித்த 9 புதிய விதிகள்!

தங்க நகைக்கடன் தொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கி (RBI) தற்போது புதிய விதிகள் தொடர்பாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஆழ்த்தியுள்ளது.

மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா..மகாராஷ்டிராவில் 2 பேர் உயிரிழப்பு

கொரோனாவில் பாதிப்பு நிலவரங்களை மத்திய சுகாதாரத்துறை கண்காணித்து வருவதாக கூறப்பட்டுள்ளது.

பொங்கி எழுந்த சீக்கியர்கள்.. வீடியோ டெலிட் செய்த துருவ் ராட்டி: என்ன பிரச்சினை?

துருவ் ராட்டி யூடியூப் தளத்தில் பதிவிட்ட "முகலாயர்களை அச்சுறுத்திய சீக்கிய வீரன்" (The Sikh Warrior Who Terrified the Mughals) என்ற தலைப்பிலான AI-மூலம் உருவாக்கிய வீடியோ சர்ச்சைகளை கிளப்பிய நிலையில், அந்த வீடியோவினை டெலிட் செய்துள்ளார்.

வக்ஃபு திருத்த சட்டத்துக்கு எதிரான மனுக்கள்.. உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணை!

வக்ஃபு திருத்த சட்டத்துக்கு எதிரான மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் இன்று (மே.20) மீண்டும் விசாரணைக்கு வருகிறது. வக்ஃப் திருத்தச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க தடை தொடரும் நிலையில், இன்று விசாரணை நடைபெறவுள்ளது.

இந்தியா-பாகிஸ்தான் சண்டை நிறுத்தம்.. அமெரிக்காவுக்கு பங்கில்லை -விக்ரம் மிஸ்ரி விளக்கம்

இந்தியா-பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தத்தில் அமெரிக்காவுக்கு எந்தவிதமான பங்கும் இல்லை என்று வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி விளக்கமளித்துள்ளார்.

மீண்டும் மீண்டுமா? நாடு முழுவதும் 257 பேருக்கு கொரோனா சிகிச்சை..!

நாட்டில் கடந்த சில வாரங்களாக மீண்டும் கொரோனா தொற்றின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்துவரும் நிலையில், தற்போது 257 பேர் கொரோனா வைரஸ் பாதிப்புக்காக சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆபரேஷன் சிந்தூர்: கைது செய்யப்பட்ட பேராசிரியர்.. கேள்விக்குள்ளாகும் கருத்துரிமை?

'ஆபரேஷன் சிந்தூர்' குறித்து தனது சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவிட்ட அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் அலி கான் மஹ்முதாபாத் கைது செய்யப்பட்ட சம்பவம் இந்தியாவில் கருத்துரிமை குறித்த விவாதங்களை கிளப்பியுள்ளது. இதனிடையே, பேராசிரியர் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் அவசர வழக்காக விசாரிக்க ஒப்புக்கொண்டுள்ளது.

அரசியல் அமைப்பை பாதுகாக்க முன் வாருங்கள்.. 8 மாநில முதல்வர்களுக்கு ஸ்டாலின் கடிதம்!

மசோதா கால நிர்ணயம் தொடர்பாக உச்சநீதிமன்றத்திடம் குடியரசுத் தலைவர் விளக்கம் கேட்ட விவகாரத்தில் அரசியல் அமைப்பை பாதுகாக்க அனைவரும் முன்வர வேண்டும் என கேரளா, மேற்குவங்கம் உள்ளிட்ட 8 மாநில முதல்வர்களுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பி வைத்துள்ளார்.