பீகார் மாநிலச் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதியை இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் இன்று அறிவித்தார். மாநிலத்தில் உள்ள 243 தொகுதிகளுக்கும் இரு கட்டங்களாக நவம்பர் 6 மற்றும் 11ஆம் தேதிகளில் வாக்குப் பதிவு நடைபெறும் என்றும், நவம்பர் 14ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பீகாரில் உள்ள 243 சட்டப்பேரவைத் தொகுதிகளின் பதவிக் காலம் வரும் நவம்பர் 22-ஆம் தேதியுடன் முடிவடைவதைத் தொடர்ந்து, தேர்தல் ஆணையம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புகளுக்கு மத்தியில், கடந்த ஜூன் 24-ல் தொடங்கப்பட்ட வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் குறித்தப் பணிகளும் குறிப்பிட்ட காலவரையறைக்குள் முடிக்கப்பட்டுப் புதிய பட்டியல் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தேர்தல் குறித்த முக்கிய விவரங்கள்
டெல்லியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், பீகார் தேர்தல் குறித்த முக்கிய விவரங்களைப் பகிர்ந்து கொண்டார்.
பீகாரில் மொத்தம் 243 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. அவற்றில் 2 தொகுதிகள் எஸ்.டி. பிரிவினருக்கும், 38 தொகுதிகள் எஸ்.சி. பிரிவினருக்கும் ஒதுக்கப்பட்ட தனித் தொகுதிகளாகும்.
வாக்காளர் எண்ணிக்கை குறித்து அவர் பேசுகையில், மாநிலத்தில் மொத்தம் 7.43 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 3.92 கோடி ஆண்கள், 3.50 கோடி பெண்கள், மற்றும் 1,725 மூன்றாம் பாலினத்தவர்கள் அடங்குவர். மாநிலத்தில் மொத்தம் 90,712 வாக்குச் சாவடிகள் அமைக்கப்படவுள்ளன.
மேலும், 243 தொகுதிகளுக்கும் பார்வையாளர்கள் நியமிக்கப்படவுள்ளனர். தேர்தல் அலுவலர்கள், காவல்துறையினர், வாக்கு எண்ணிக்கை அலுவலர்கள் என தேர்தல் பணிக்காக மொத்தம் 8.5 லட்சம் பேர் பணிபுரியவுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.
தேர்தல் கால அட்டவணை
பீகார் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது. முதல் கட்ட வாக்குப் பதிவு நவம்பர் 6-ஆம் தேதியும், இரண்டாம் கட்ட வாக்குப் பதிவு நவம்பர் 11-ஆம் தேதியும் நடைபெறவுள்ளன.
வேட்புமனுத் தாக்கல் தேதிகள் பின்வருமாறு:
முதல் கட்டத் தேர்தலுக்கு அக்டோபர் 10-ஆம் தேதி வேட்புமனுத் தாக்கல் தொடங்கி, அக்டோபர் 17-ஆம் தேதி கடைசி நாளாகும். இரண்டாம் கட்டத் தேர்தலுக்கு அக்டோபர் 13-ஆம் தேதி வேட்புமனுத் தாக்கல் தொடங்கி, அக்டோபர் 20-ஆம் தேதி கடைசி நாளாகும்.
வாக்குப் பதிவுக்குப் பிறகு, நவம்பர் 14-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் அறிவித்தார்.
பீகாரில் உள்ள 243 சட்டப்பேரவைத் தொகுதிகளின் பதவிக் காலம் வரும் நவம்பர் 22-ஆம் தேதியுடன் முடிவடைவதைத் தொடர்ந்து, தேர்தல் ஆணையம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புகளுக்கு மத்தியில், கடந்த ஜூன் 24-ல் தொடங்கப்பட்ட வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் குறித்தப் பணிகளும் குறிப்பிட்ட காலவரையறைக்குள் முடிக்கப்பட்டுப் புதிய பட்டியல் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தேர்தல் குறித்த முக்கிய விவரங்கள்
டெல்லியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், பீகார் தேர்தல் குறித்த முக்கிய விவரங்களைப் பகிர்ந்து கொண்டார்.
பீகாரில் மொத்தம் 243 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. அவற்றில் 2 தொகுதிகள் எஸ்.டி. பிரிவினருக்கும், 38 தொகுதிகள் எஸ்.சி. பிரிவினருக்கும் ஒதுக்கப்பட்ட தனித் தொகுதிகளாகும்.
வாக்காளர் எண்ணிக்கை குறித்து அவர் பேசுகையில், மாநிலத்தில் மொத்தம் 7.43 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 3.92 கோடி ஆண்கள், 3.50 கோடி பெண்கள், மற்றும் 1,725 மூன்றாம் பாலினத்தவர்கள் அடங்குவர். மாநிலத்தில் மொத்தம் 90,712 வாக்குச் சாவடிகள் அமைக்கப்படவுள்ளன.
மேலும், 243 தொகுதிகளுக்கும் பார்வையாளர்கள் நியமிக்கப்படவுள்ளனர். தேர்தல் அலுவலர்கள், காவல்துறையினர், வாக்கு எண்ணிக்கை அலுவலர்கள் என தேர்தல் பணிக்காக மொத்தம் 8.5 லட்சம் பேர் பணிபுரியவுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.
தேர்தல் கால அட்டவணை
பீகார் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது. முதல் கட்ட வாக்குப் பதிவு நவம்பர் 6-ஆம் தேதியும், இரண்டாம் கட்ட வாக்குப் பதிவு நவம்பர் 11-ஆம் தேதியும் நடைபெறவுள்ளன.
வேட்புமனுத் தாக்கல் தேதிகள் பின்வருமாறு:
முதல் கட்டத் தேர்தலுக்கு அக்டோபர் 10-ஆம் தேதி வேட்புமனுத் தாக்கல் தொடங்கி, அக்டோபர் 17-ஆம் தேதி கடைசி நாளாகும். இரண்டாம் கட்டத் தேர்தலுக்கு அக்டோபர் 13-ஆம் தேதி வேட்புமனுத் தாக்கல் தொடங்கி, அக்டோபர் 20-ஆம் தேதி கடைசி நாளாகும்.
வாக்குப் பதிவுக்குப் பிறகு, நவம்பர் 14-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் அறிவித்தார்.