K U M U D A M   N E W S
Advertisement

தமிழ்நாடு

கோவைப் பெரிய கடை வீதியில் நடுரோட்டில் தள்ளுவண்டி கடை: போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி!

கோவைப் பெரிய கடை வீதியில், சாலையின் நடுவே தள்ளுவண்டிக் கடை ஆக்கிரமிப்பால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. 'நோ பார்க்கிங்' விதிமீறலுக்கு அபராதம் விதிக்கும் காவல்துறை, சாலையை மறித்துக் கடை அமைப்பவருக்கு மட்டும் எப்படி அனுமதி எனக் பொதுமக்கள் சிசிடிவி காட்சிகளுடன் புகார் அளித்துள்ளனர்.

மாசுபட்ட இருமல் மருந்து மரணங்கள்: 6 மாநில உற்பத்தி அலகுகளில் CDSCO ஆய்வு; தமிழகத்தில் விற்பனைக்குத் தடை!

குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, CDSCO அமைப்பு 6 மாநில மருந்து உற்பத்தி அலகுகளில் ஆய்வு தொடங்கியுள்ளது. தமிழகத்தில் 'கோல்ட்ரிஃப்' (Coldrif) இருமல் சிரப் மாதிரிகளில் டைஎதிலீன் கிளைக்கால் (DEG) அளவு அதிகமாக இருந்ததால், அதன் விற்பனைக்கு உடனடியாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கரூர் கூட்ட நெரிசல்: தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உட்பட இருவர் உச்ச நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மேல்முறையீடு!

கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த வழக்கில், தலைமறைவாக உள்ள தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் இணைச் செயலாளர் நிர்மல் குமார் ஆகியோர், உயர் நீதிமன்றம் மனுவைத் தள்ளுபடி செய்த நிலையில், தற்போது உச்ச நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மேல்முறையீடு செய்துள்ளனர்.

80கள், 90கள் நட்சத்திரங்கள் ரீயூனியன்: சென்னையில் இந்திய நடிகர்கள் சங்கமம் - சிரஞ்சீவி உணர்ச்சிப்பூர்வமான பதிவு!

தமிழ், தெலுங்கு, இந்தி உட்படப் பல்வேறு மொழிகளைச் சேர்ந்த 1980கள் மற்றும் 90களின் 31 முன்னணி நட்சத்திரங்கள் தங்கள் நட்பைக் கொண்டாட நேற்று (அக். 4) சென்னையில் 'நட்சத்திர ரீயூனியனில்' ஒன்று கூடினர். சிரஞ்சீவி, சரத்குமார், குஷ்பூ, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்ட இந்தச் சந்திப்பின் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

காசா அமைதி ஒப்பந்தம்: ஹமாஸுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் இறுதி எச்சரிக்கை!

காசாவில் அமைதி நிலவ, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஹமாஸுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், இன்று (அக். 5) மாலைக்குள் அமைதி ஒப்பந்தத்தை ஏற்று, பணயக்கைதிகளை விடுவிக்க வேண்டும். தவறினால் இதுவரை இல்லாத அளவுக்குக் கடுமையான அடி கிடைக்கும்" என்று டிரம்ப் பதிவிட்டுள்ளார்.

கரூர் விபத்து: வாகனத்தை ஏன் பறிமுதல் செய்யவில்லை? நீதிமன்றக் கேள்விக்குப் பின் - விஜய் பரப்புரை வாகன ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு!

கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தின் கண்டனத்தைத் தொடர்ந்து, விஜய்யின் பரப்புரை வாகன ஓட்டுநர் மீது வேலாயுதபாளையம் போலீசார் மனித உயிருக்கு ஆபத்தை விளைவித்ததாக புதிதாக வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

சென்னையில் மேலும் 10 இடங்களில் ஸ்மார்ட் வாட்டர் ஏடிஎம்கள் வரவு - மெரினா, பெசன்ட் நகர் கடற்கரைகளிலும் விரிவாக்கம்!

பொதுமக்களுக்குச் சுத்தமான குடிநீர் வழங்கும் நோக்கில், சென்னை மெட்ரோ வாட்டர், மேலும் 10 புதிய இடங்களில் திறன்மிகு தானியங்கி குடிநீர் வழங்கும் இயந்திரங்களை (Smart Water ATM) அமைக்கத் திட்டமிட்டுள்ளது.

"ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டாமல் தீர்வை நோக்கிப் பயணிப்போம்"- முதல்வர் ஸ்டாலின்

"துடைக்க முடியாத இந்தத் துயரச் சம்பவத்தின் பின்னணியில் அரசியல் நோக்கோடு ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டாமல் ஒரு நீண்டகாலத் தீர்வை நோக்கிப் பயணிப்போம்" என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

எம்.பி. கனிமொழி வீடு உட்பட 3 இடங்களில் வெடிகுண்டு மிரட்டல்!

எம்.பி. கனிமொழி, ஆடிட்டர் குருமூர்த்தி மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ. நட்ராஜ் ஆகியோரின் வீடுகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

தங்கம் விலை மீண்டும் புதிய உச்சம்.. சவரனுக்கு ரூ.400 அதிகரிப்பு!

தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.400 உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது.