தமிழ்நாட்டில் உள்ள உருது வழி தொடக்க நடுநிலைப் பள்ளிகளை ஆய்வு செய்வதற்காக ஆங்கிலேயர் காலத்தில் இருந்து செயல்பட்டு வந்த மூன்று உருது சரகங்கள் கடந்த ஆட்சியில் முன் அறிவிப்பின்றி கலைக்கப்பட்டது. திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின்பு கலைக்கப்பட்ட உருது சரகங்களை இரட்டிப்பாக்கியது. தற்போது சென்னை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி என 6 உருது சரகங்கள் செயல்பட்டு வருகிறது. உருது மொழியை பாதுகாத்து இஸ்லாமிய சிறுபான்மை மக்களின் அரணாக திகழும் தமிழக முதலமைச்சர் அவர்களுக்கும் தமிழக அரசுக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த மாநாட்டில் தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ஓசூர் MLA ஒய் பிரகாஷ், மாநகர மேயர் எஸ்.ஏ.சத்யா மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த உருது பள்ளி ஆசிரியைகள் என ஆயிரக்கணக்கானோர் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர்.
இந்த மாநாட்டுக்கு பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, இந்த மாநாட்டின் வாயிலாக நாங்கள், ஆசிரியர்களிடம் நல்ல அறிவு சார்ந்த சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என வேண்டுகோள் வைத்துள்ளோம். நம்முடைய திராவிட மாடல் அரசு பார்த்து பார்த்து எதை எல்லாம் செய்து கொடுக்க வேண்டுமோ? அதை எல்லாம் நம்முடைய முதல்வர் செய்து கொடுத்து வருகிறார்.
அரசு பள்ளிகளில் குழந்தைகள் தண்ணீர் அருந்துவதை உறுதி செய்யும் வாட்டர் பெல் திட்டத்தை கொண்டு வர தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா என எழுப்பிய கேள்விக்கு, ”இது ஒரு நல்ல திட்டம். கேரளாவில் இந்த திட்டம் நடைமுறையில் உள்ளது. சுகாதாரம், உடல் நலம் என்று வரும்போது நமது தமிழக அரசு காலை உணவு திட்டத்தை கொண்டு வந்து மாணவர்களின் நலனில் அக்கறை செலுத்தியுள்ளது. அதே நேரத்தில் இந்த வாட்டர் பெல் திட்டத்தை அரசு பள்ளிகளில் செயல்படுத்தவும் சுற்றறிக்கை விரைவில் அனுப்பப்படும்” என்றார்.
மேலும், ”தமிழ்நாட்டில் 2,381-க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகளில் எல்கேஜி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. ஏராளமான பள்ளிகளில் ஆசிரியர்கள் தன்னார்வத்துடன் எல்கேஜி வகுப்புகளை எடுத்து வருகின்றனர். ஓசூரில் பன்மொழி பேசக்கூடிய மக்கள் இருப்பதால் இந்த பகுதியில், தனிக் கவனம் செலுத்தி அனைத்து பள்ளிகளிலும் எல்கேஜி வகுப்புகள் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் விரைவில் எடுக்கப்படும்” என்றார்.
இந்த மாநாட்டில் தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ஓசூர் MLA ஒய் பிரகாஷ், மாநகர மேயர் எஸ்.ஏ.சத்யா மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த உருது பள்ளி ஆசிரியைகள் என ஆயிரக்கணக்கானோர் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர்.
இந்த மாநாட்டுக்கு பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, இந்த மாநாட்டின் வாயிலாக நாங்கள், ஆசிரியர்களிடம் நல்ல அறிவு சார்ந்த சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என வேண்டுகோள் வைத்துள்ளோம். நம்முடைய திராவிட மாடல் அரசு பார்த்து பார்த்து எதை எல்லாம் செய்து கொடுக்க வேண்டுமோ? அதை எல்லாம் நம்முடைய முதல்வர் செய்து கொடுத்து வருகிறார்.
அரசு பள்ளிகளில் குழந்தைகள் தண்ணீர் அருந்துவதை உறுதி செய்யும் வாட்டர் பெல் திட்டத்தை கொண்டு வர தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா என எழுப்பிய கேள்விக்கு, ”இது ஒரு நல்ல திட்டம். கேரளாவில் இந்த திட்டம் நடைமுறையில் உள்ளது. சுகாதாரம், உடல் நலம் என்று வரும்போது நமது தமிழக அரசு காலை உணவு திட்டத்தை கொண்டு வந்து மாணவர்களின் நலனில் அக்கறை செலுத்தியுள்ளது. அதே நேரத்தில் இந்த வாட்டர் பெல் திட்டத்தை அரசு பள்ளிகளில் செயல்படுத்தவும் சுற்றறிக்கை விரைவில் அனுப்பப்படும்” என்றார்.
மேலும், ”தமிழ்நாட்டில் 2,381-க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகளில் எல்கேஜி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. ஏராளமான பள்ளிகளில் ஆசிரியர்கள் தன்னார்வத்துடன் எல்கேஜி வகுப்புகளை எடுத்து வருகின்றனர். ஓசூரில் பன்மொழி பேசக்கூடிய மக்கள் இருப்பதால் இந்த பகுதியில், தனிக் கவனம் செலுத்தி அனைத்து பள்ளிகளிலும் எல்கேஜி வகுப்புகள் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் விரைவில் எடுக்கப்படும்” என்றார்.