K U M U D A M   N E W S
Advertisement

தமிழ்நாடு

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்: தமிழகத்தில் 14 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை!

வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால், இன்று (அக். 3) சென்னை உட்பட 14 மாவட்டங்களுக்குக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இது இன்று இரவுக்குள் ஒடிசா - ஆந்திரா கடலோரப் பகுதியில் புயலாகக் கரையை கடக்க வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

விஜய்க்குத் தலைமைப் பண்பு இல்லை; மக்களைக் கைவிட்டு பொறுப்பற்ற முறையில் வெளியேறினார் - நீதிபதிகள் காட்டம்!

கரூர் கூட்ட நெரிசல் வழக்கில், நீதிபதிகள் தவெக தலைவர் விஜய் தலைமைப் பண்பின்றிச் செயல்பட்டதாகக் கடுமையாகச் சாடினர். நாமக்கல் மாவட்டச் செயலாளர் சதீஷ் குமாரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

கரூர் கூட்ட நெரிசல்: தவெக மாவட்டச் செயலாளரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி!

கரூர் பொதுக்கூட்ட நெரிசல் வழக்கில், நாமக்கல் தவெக மாவட்டச் செயலாளர் சதீஷ் குமார் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவைச் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

கரூர் உயிரிழப்புக்கு விஜய்யே பொறுப்பு; அவர் ரஜினிகாந்த் போல அரசியலில் இருந்து பின்வாங்கி விடுவார் - எஸ்.வி.சேகர் குற்றச்சாட்டு!

"விஜய் எம்ஜிஆராக முடியாது; அரசியலில் பக்குவம் இல்லை" அவர் ரஜினிகாந்த் போல அரசியலில் இருந்து பின்வாங்கி விடுவார் என்று எஸ்.வி. சேகர் பகிரங்கமாகக் கருத்து தெரிவித்தார்.

காஞ்சிபுரம் வரதராஜர் கோவில் தகராறு: வடகலை பிரிவினரை கோவில் E.O. தாக்கியதாகப் புகார்!

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவிலில், தீர்த்தம் மற்றும் சடாரி வழங்குவதில் ஏற்பட்ட மோதலின்போது, கோவில் நிர்வாக அதிகாரி ராஜலட்சுமி, வடகலை பிரிவைச் சேர்ந்த 65 வயது முதியவர் ரமேஷைத் தாக்கியதாகப் புகார் எழுந்துள்ளது

கரூர் கூட்ட நெரிசல் விவகாரம்: சிபிஐ விசாரணைக்கு மறுப்பு தெரிவித்த உயர் நீதிமன்றம்!

கரூர் தவெக கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரிய மனுக்களைச் சென்னை உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் வெறிச்செயல்: ரவுடியுடன் சேர்ந்து மனைவியை கத்தியால் வெட்ட முயன்ற கணவன் கைது!

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில், கணவன் தினகரன், பிரபல ரவுடி 'காக்கா தீனா' மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோருடன் சேர்ந்து தனது மனைவி துர்காவைத் தாக்கிக் கத்தியால் வெட்ட முயன்ற வழக்கில், சிஎம்பிடி போலீசார் மூவரையும் கைது செய்தனர்.

"தமிழ்நாட்டை வஞ்சிப்பது பாஜகவின் வாடிக்கை": ராமநாதபுரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் குற்றச்சாட்டு!

மத்திய பாஜக அரசு தமிழ்நாட்டிற்கு நிதிப் பகிர்வு மற்றும் பள்ளிக் கல்வித் திட்டங்களில் ஓரவஞ்சனை செய்வதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ராமநாதபுரத்தில் குற்றம் சாட்டினார்.

பெண்ணின் காதை கடித்த 4 பாக்ஸர் நாய்கள்.. அலட்சியத்தில் உரிமையாளர்.. பாதிக்கப்பட்ட பெண் போலீசில் புகார்!

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில், வீட்டு வேலை செய்யும் பெண்ணை நான்கு 'பாக்ஸர்' வகை நாய்கள் கடித்ததில், அவரது காது கிழிந்ததுடன், பலத்த காயங்களும் ஏற்பட்டன. நாய்களை அதன் உரிமையாளர் கண்டுகொள்ளவில்லை என உஷா வேதனையுடன் புகார் அளித்த நிலையில், அபிராமபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம்; 50 சவரன் வரதட்சணை கேட்டு மிரட்டல்; திருமங்கலம் போலீசார் நடவடிக்கை!

இன்ஸ்டாகிராம் மூலம் பழகி, திருமணம் செய்ய உறுதியளித்த இளைஞர் ஆதித்யன், நிச்சயத்திற்குப் பிறகு 50 சவரன் தங்க நகைகள் வரதட்சணையாகக் கேட்டுத் திருமணம் செய்ய மறுத்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில், திருமங்கலம் அனைத்து மகளிர் போலீசார் ஆதித்யனைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.