K U M U D A M   N E W S

தமிழ்நாடு

அருணாச்சலேஸ்வரர் கோயிலில் பரபரப்பு.. கொளுத்தும் வெயிலில் தரிசனத்திற்காக காத்திருக்கும் பக்தர்கள்!

கொளுத்தும் வெயிலில் நீண்ட வரிசையில் அருணாச்சலேஸ்வரரை தரிசிக்க காத்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காத்திருக்கின்றனர். நீண்ட வரிசையில் காத்திருந்த ஆந்திர மாநில பக்தர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ளும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர் மழை காரணமாக திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு.. சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை!

பருவமழை தீவிரமடைந்துள்ளதால், தொடர் மழை காரணமாக நெல்லை பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், சுற்றுலாப் பயணிகள் குளிக்க பேரூராட்சி நிர்வாகம் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

காதலால் வந்த வினை.. சுசீந்திரனின் உதவி இயக்குனரை கடத்திய கும்பல்

அரும்பாக்கம் பகுதியல் உதவி இயக்குனரை காரில் கடத்தி, மிரட்டிய 5 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் திரையுலக வட்டாரத்தில் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. கைதாகியுள்ள நபர்களிடமிருந்து ரூ.29,000/- ரொக்கம், 2 இருசக்கர வாகனங்கள், 7 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

பதற்றம் வேண்டாம்.. முககவசம் கட்டாயமில்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள், வயதானவர்கள் முகக்கவசம் அணிவது நல்லது. வெவ்வேறு பெயர்களால் வரக்கூடிய கொரோனா பாதிப்புகளால் பெரிய அளவிலான பாதிப்புகள் ஏற்படுவதில்லை, தற்போது பரவி வரும் கொரோனாவால் பொதுமக்கள் யாரும் பதற்றப்பட வேண்டியதில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டியளித்துள்ளார்.

குன்றக்குடி KVK சார்பில் வேளாண் வளர்ச்சிக்கான பிரச்சாரம்- திரளான விவசாயிகள் பங்கேற்பு

"வளமான விவசாயி நாட்டின் பெருமை" தலைப்பில் வேளாண் வளர்ச்சிக்கான பிரச்சாரம் குன்றக்குடி வேளாண் அறிவியல் மையம் மூலமாக ஓ.சிறுவயல் கிராமத்தில் நடைபெற்றது.

சோசியல் மீடியாவில் லாக் போடாத பெண்கள் தான் டார்கெட்- வசமாக சிக்கிய நபர்

பாதுகாப்பில்லாமல் சமூக வலைதள கணக்குகளை பராமரித்து வரும் பெண்களை குறி வைத்து பாலியல் தொந்தரவு அளித்த நபரை கைது செய்துள்ளது சைபர் கிரைம் போலீசார்.

மதுரைக்கு வந்த சோதனை.. பெட்ரோல் நிறத்தில் வரும் நிலத்தடி நீர்

மதுரையில் தெப்பக்குளம் பகுதி அருகே போர்வெல்களில் இருந்து பெட்ரோல் நிறத்தில் ரசாயனம் கலந்து வரும் நீரினால் குடியிருப்புவாசிகள் அச்சமடைந்துள்ளனர். கட்டிடப் பணிகளுக்கு கூட பயன்படுத்த முடியாத நிலையில் நீரின் நிலை உள்ளதாக ஆய்வக அறிக்கையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

என் அப்பாவின் கடைசி ஆசை இது.. எவரெஸ்டில் ஏறிய சிறுவன் ஆசிஷ் உருக்கம்..!

என் அப்பாவின் கடைசி ஆசை நிறைவேற்றுவதற்காக எவரெஸ்டில் ஏறிய சிறுவன் ஆசிஷ் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

கோலடி திட்டத்தை மாற்றம் செய்ய முதலமைச்சரால் மட்டுமே முடியும் - திருமாவளவன்

திருவேற்காடு கோளடி கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் திட்டத்தை மாற்றம் செய்வதற்காக முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்து இடமாற்றம் செய்யப்படும் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.

ரிசர்வ் வங்கியின் நகைக்கடன் புதிய விதிகள்.. முழுமையாக நிறுத்தி வைக்க சு.வெங்கடேசன் வலியுறுத்தல்!

நகைக் கடன்கள் குறித்து ரிசர்வ் வங்கியின் வெளியிட்டி புதிய விதிகளின் அறிவிப்பை, முழுமையாக நிறுத்தி வைக்க வேண்டும் என மதுரையில் சு.வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார்.

இந்த 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்- வானிலை மையம் எச்சரிக்கை

தென்மேற்கு பருவமழை கேரளாவில் வேகமெடுத்து வரும் நிலையில், அதன் தாக்கம் கேரளா ஒட்டிய தமிழக மாவட்டங்களிலும் எதிரொலிக்கிறது. அந்த வகையில் இன்று 6 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான வாய்ப்புள்ளதால் ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம்.

’வளமான விவசாயி நாட்டின் பெருமை’ - சிவகங்கையில் வேளாண் வளர்ச்சிக்கான பிரச்சாரம் தொடக்கம்

நேற்றைய தினம் சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள பிரான்மலையில் ’வளமான விவசாயி நாட்டின் பெருமை’ என்கிற தலைப்பில் வேளாண் வளர்ச்சிக்கான பிரச்சாரம் நிகழ்வு தொடங்கியது.

7 வருட வாஷிங்மெஷின்.. மொத்தமாக போட்ட துணி.. பற்றி எரிந்த வீடு

சென்னை கோடம்பாக்கத்தில் வாஷிங் மிஷின் வெடித்ததால் வீடு தீப்பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிகமான துணி போட்டு வாஷிங் மெஷினை பயன்படுத்தியதால் தான் தீ விபத்து நடந்துள்ளது என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

7வது மாநில நிதி ஆணையம் அமைப்பு.. அரசாணை வெளியீடு!

தமிழ்நாட்டின் நிதிப் பகிர்வு குறித்துப் பரிந்துரைகளை வழங்குவதற்காக 7-வது மாநில நிதி ஆணையத்தை அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

போலி ஆதார் அட்டை.. இந்திய பாஸ்போர்ட் பெற்று வெளிநாடுகளுக்கு தப்ப முயன்ற 7 பேர் கைது!

போலி ஆதார் அட்டைகளை தயாரித்து இந்திய பாஸ்போர்ட் பெற்று வெளிநாடுகளுக்கு செல்ல முயன்ற 7 பேரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

வேலை வாங்கி தருவதாக கூறி 1.65 கோடி மோசடி.. தலைமறைவாக இருந்தவர் கைது!

இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் கழகத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ. 1.65 கோடி ஏமாற்ற விட்டு தலைமறைவாக இருந்தவரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

ஆண்டுதோறும் பேருந்து கட்டணத்தை உயர்த்த முடிவு? கருத்து கேட்கும் தமிழக அரசு

தனியார் பேருந்து உரிமையாளர்கள் கூட்டமைப்பு தொடர்ந்த வழக்கினைத் தொடர்ந்து ஆண்டுதோறும் தனியார் பேருந்துகளின் கட்டணத்தை உயர்த்துவது தொடர்பாக பொதுமக்களின் கருத்துகளை கேட்க குழு அமைத்துள்ளது தமிழக அரசு.

பாலம் கட்டும் பணியால் பாதிப்பு: 141 மரங்களுக்கு மறுவாழ்வளிக்கும் முயற்சி தீவிரம்

தஞ்சை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வெட்ட கணக்கெடுக்கப்பட்ட 141 மரங்களுக்கு மறுவாழ்வு அளிக்கப்படுகிறது. இதற்காக மரங்கள் வேரோடு பிடுங்கிவேறு இடத்தில் நடும் பணி தொடங்கி உள்ளது.

பொள்ளாச்சி வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தலா ரூ.25 லட்சம் நிவாரணம்

பொள்ளாச்சி வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தலா ரூ.25 லட்சத்தை வங்கி கணக்கில் தமிழக அரசு வரவு வைத்துள்ளது.

சோளிங்கரில் 10ம் வகுப்பு மாணவி குத்திக்கொலை-படுகாயத்துடன் மற்றொரு மாணவி அனுமதி

சோளிங்கரில் வீட்டில் இருந்த 10ம் வகுப்பு மாணவி ஒருவர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மூத்த மொழி தமிழ் தான்- அன்புமணி ராமதாஸ்

மூத்த மொழி அன்னை தமிழ் தான். தமிழில் இருந்தும் தான் பிற திராவிட மொழிகள் பிறந்தன என்பது மொழி ஆராய்ச்சியாளர்களால் நிரூபிக்கப்பட்ட உண்மை என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட மாணவிக்கு தீர்ப்பு நீதியாக இருக்க வேண்டும் – சீமான்

மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு நடக்கும் அதே நேரத்தில் ஆடு, மாடுகள் மாநாடு வைத்திருக்கிறேன் அதில் கலந்து கொள்வேன் சீமான் பேட்டி

சென்னை மெரினாவில் ரோப் கார் வசதி....மேயர் கொடுத்த அப்டேட்

சென்னை மெரினா கடற்கரையில் ரோப் கார் வசதி குறித்து சாத்தியக்கூறு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது என சென்னை மேயர் பிரியா விளக்கம்

ஐடி ஊழியரின் திருமணத்தை நிறுத்திய ஆசிரியை...ஷாக்கான பெண் வீட்டார்

பெண் ஆசிரியை அழைத்து வந்த வழக்கறிஞர்களை பார்த்து பெண் வீட்டார்கள் உங்களை எங்கள் குலதெய்வம் தான் அனுப்பி வைத்து என் மகள் வாழ்க்கையை காப்பாற்றி இருக்கிறது என கண்ணீர் மல்க பேசினர்

தீர்ப்பு ஒகே.. யார் அந்த சாருக்கு பதில் எங்கே? EPS சூளுரை

”அண்ணா பல்கலை. பாலியல் வழக்கில் மூலக் கேள்வியான யார் அந்த சாருக்கான பதில் இன்னும் கிடைக்கவில்லை. அதிமுக ஆட்சி அமையும் போது அந்த SIR "யாராக இருந்தாலும்", கூண்டேற்றட்டப்படுவார்” என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.