விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே வேளானூரணி ஊராட்சிக்கு உட்பட்ட உடையசேர்வைகாரன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராமர்(65). குடும்பத்துடன் விவசாயம் செய்து வரும் ராமர் தனது மகன்கள், மருமகள்கள், பேரன்-பேத்திகள் என 50-க்கும் மேற்பட்டோருடன் ஒரே பகுதியில் வசித்து வருகிறார். இவரது வீட்டிற்கு அருகே வளையப்பட்டி கிராமத்திலிருந்து குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.
அதேபோல ராமர் குடும்பத்தின் பட்டா நிலத்தின் வழியாக அவரது விளைநிலங்களுக்கு செல்லும் பாதை இருந்தது. வளையபட்டியில் இருந்து பிரதான சாலைக்கு செல்ல சரியான வழி இல்லாததால், ராமர் குடும்பத்தின் பட்டா நிலத்தை பாதையாக அந்த பகுதி மக்கள் பயன்படுத்தி வந்துள்ளனர்.
இந்த நிலையில், ராமர் அதிமுக ஆதரவாளர் என்பதால், அரசியல் காழ்புணர்ச்சி காரணமாக, திமுகவினர் சிலரின் அழுத்தத்தால் அவரது வீட்டிற்கு வழங்கப்பட்ட குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த விவசாயி ராமர், ‘எனக்கு குடிநீர் வழங்காத நிலையில், நான் மட்டும் ஏன் பட்டா நிலத்தில் வழி விட வேண்டும்’ என்று பாதையை அடைத்துள்ளார்.
மேலும், குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் கடந்த மூன்று ஆண்டுகளாக நீண்ட தூரம் சென்று ராமர் குடும்பத்தினர் குடிநீர் எடுத்துவருவதாக தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், ராமரின் பட்டா நிலத்தில் மக்கள் செல்ல பாதை விடவேண்டும் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு உதவியாளர் பாலகுரு தூண்டுதலின் பேரில் அதிகாரிகள் மிரட்டுவதாக ராமர் குடும்பத்தினர் புகார் தெரிவித்துள்ளனர். அனைவரும் ஒற்றுமையாக இருந்த நேரத்தில் தேவையில்லாமல் குடிநீர் இணைப்பை துண்டித்து அமைச்சரின் உதவியாளர் பிரிவினையை தூண்டுவதாக அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதனால், தங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியர் தான் இந்த பிரச்சனையில் தலையிட்டு தீர்வு காண வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதேபோல ராமர் குடும்பத்தின் பட்டா நிலத்தின் வழியாக அவரது விளைநிலங்களுக்கு செல்லும் பாதை இருந்தது. வளையபட்டியில் இருந்து பிரதான சாலைக்கு செல்ல சரியான வழி இல்லாததால், ராமர் குடும்பத்தின் பட்டா நிலத்தை பாதையாக அந்த பகுதி மக்கள் பயன்படுத்தி வந்துள்ளனர்.
இந்த நிலையில், ராமர் அதிமுக ஆதரவாளர் என்பதால், அரசியல் காழ்புணர்ச்சி காரணமாக, திமுகவினர் சிலரின் அழுத்தத்தால் அவரது வீட்டிற்கு வழங்கப்பட்ட குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த விவசாயி ராமர், ‘எனக்கு குடிநீர் வழங்காத நிலையில், நான் மட்டும் ஏன் பட்டா நிலத்தில் வழி விட வேண்டும்’ என்று பாதையை அடைத்துள்ளார்.
மேலும், குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் கடந்த மூன்று ஆண்டுகளாக நீண்ட தூரம் சென்று ராமர் குடும்பத்தினர் குடிநீர் எடுத்துவருவதாக தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், ராமரின் பட்டா நிலத்தில் மக்கள் செல்ல பாதை விடவேண்டும் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு உதவியாளர் பாலகுரு தூண்டுதலின் பேரில் அதிகாரிகள் மிரட்டுவதாக ராமர் குடும்பத்தினர் புகார் தெரிவித்துள்ளனர். அனைவரும் ஒற்றுமையாக இருந்த நேரத்தில் தேவையில்லாமல் குடிநீர் இணைப்பை துண்டித்து அமைச்சரின் உதவியாளர் பிரிவினையை தூண்டுவதாக அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதனால், தங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியர் தான் இந்த பிரச்சனையில் தலையிட்டு தீர்வு காண வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.