K U M U D A M   N E W S
Promotional Banner

தமிழ்நாடு

காவல்துறையினர் அழுத்தத்தின் காரணமாக ஞானசேகரனை சிறையில் அடைத்துள்ளனர்.. நீதிமன்றத்தில் மனு

காவல்துறையினர் ஏதோ ஒரு அழுத்தத்தின் காரணமாக தான் தனது மகனை குண்டர்  தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்துள்ளதாக ஞானசேகரன் தாயார் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அரசு தற்காலிக பணியாளர்களுக்கு பறிபோகும் வேலை.. நீதிமன்ற உத்தரவால் பரபரப்பு

கடந்த 2020-ஆம் ஆண்டுக்கு பிறகு தமிழக அரசு துறைகளில் நியமிக்கப்பட்டுள்ள தற்காலிக பணியாளர்களை நீக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அண்ணா பல்கலைக்கழக வழக்கு.. மகிளா நீதிமன்றத்திற்கு மாற்றம் 

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு மகிளா நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

சுழற்சி முறையில் பல்கலைக்கழக துறைத்தலைவர் நியமனம்.. நீதிமன்றம் உத்தரவு

சென்னை பல்கலைக் கழகத்தில் துறை தலைவர்கள் நியமனம், தகுதி, திறமை அடிப்படையில் சுழற்சி முறையில் நியமனம் செய்வது தொடர்பாக கொண்டுவரப்பட்ட திருத்தத்தை உறுதி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குற்றவாளி ஞானசேகரனை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த உள்ள சிறப்பு புலனாய்வு குழு

பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரனை சிறப்பு புலனாய்வு குழுவினர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த உள்ளனர்.

மூன்றாவது மொழியை கட்டாயப்படுத்துவதை தமிழர்கள் ஒருபொழுதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் - வைரமுத்து

"மூன்றாவது மொழியை கட்டாயப்படுத்துவதை தமிழர்கள் ஒருபொழுதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள், மொழி திணிப்பாகவே கருதுவார்கள் எங்களுக்கு மொழி திணிப்பு வேண்டாம் என்று கவிஞர் வைரமுத்து ஆவேசம்...."

சீமான் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசத்திட்டம்... தந்தை பெரியார் திராவிட கழகத்தைச் சேர்ந்த 10 பேர் கைது..

பெரியார் குறித்து  கொச்சைப்படுத்தும் விதமாக பேசி வரும் சீமானை கண்டிப்பதற்காக பெட்ரோல் குண்டு வீச திட்டமிட்டதாக தகவல் வெளியானது. இதனைத்தொடர்ந்து, சீமான் வீட்டில் பெட்ரோல் குண்டு தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக தந்தை பெரியார் திராவிட கழகத்தைச் சேர்ந்த 10 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கொளத்தூர் சோமநாத சுவாமி கோவில் நிலம் குத்தகை வழக்கு தள்ளுபடி - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் சார்பில் கல்லூரி அமைக்க, கொளத்தூர் சோமநாத சுவாமி கோவிலுக்கு சொந்தமான நிலத்தை குத்தகைக்கு வழங்குவதை எதிர்த்த வழக்கை சென்னை  உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

வாக்குறுதிகளை நிறைவேற்றாத தமிழக அரசு.. தற்செயல் விடுப்பு போராட்டம் நடத்தும் அரசு ஊழியர்கள்..!

2021 சட்டமன்றத் தேர்தல் வாக்குறுதி படி அரசு ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றாத திமுக அரசை வலியுறுத்தி ஒட்டுமொத்த தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தினர் தற்செயல் விடுப்பு போராட்டம் நடத்தி நடத்தி வருகின்றனர்.

சட்டம் இங்கே..பாதுகாப்பு எங்கே? அதிகரிக்கும் பாலியல் குற்றங்கள்.. அதிர்ச்சியளிக்கும் புள்ளி விவரம்!

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் இதனை தடுக்கக்கூடிய சட்டத்தின் தற்போதைய நிலை என்ன? பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகும் மாணவர்களின் நிலை என்ன? என்பது குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.....

"இந்தி கவிதை சொல்லு” சிறுவனை அடிவெளுத்த டீச்சர்! பெற்றோர்கள் செய்த சம்பவம்!

தமிழ்நாட்டில் மும்மொழிக்கொள்கை விவகாரம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில், இந்தியில் கவிதை சொல்லவில்லை எனக்கூறி சிறுவனை ஆசிரியை அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறுவனின் நிலை அறிந்து பெற்றோர் செய்தது என்ன? பள்ளி நிர்வாகம் எடுத்த நடவடிக்கை என்ன? பார்க்கலாம் இந்த தொகுப்பில்....

தேர்தலில் களமிறங்கும் சசிகலா..? ஜெ., பிறந்தநாளில் புதிய வியூகம்..! எந்த தொகுதியில் போட்டி?

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு தேர்தல் அரசியலில் களமிறங்குவது குறித்த வியூகத்தை சசிகலா முன்னெடுக்க உள்ளதாக வெளியாகி இருக்கும் தகவல் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. தேர்தலில் களமிறங்கிறாரா சசிகலா? எந்த தொகுதியில் போட்டியிட இருக்கிறார்? இதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.

ஜெயலலிதா பிறந்தநாள்... வேதா இல்லத்தில் ரஜினி! திடீர் விசிட்... என்ன காரணம்..?

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 77வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்ற ரஜினிகாந்த், ஜெ-வின் புகைப்படத்துக்கு மரியாதை செலுத்தியுள்ளார்.

ஆன்லைன் மோசடி..! பணத்தை இழந்த நடிகர்! அழுவதா? சிரிப்பதா?

எவ்வளவு தான் நாம நெறய படிச்சி உலக அறிவோட இருக்கோம்னு நினச்சாலும், ஒருத்தன் ஆன்லைன் மோசடி பண்ணிட்டு போய்ட்டான் என வேதனை தெரிவித்து பிரபல சின்னத்திரை நடிகர் வெளியிட்டுள்ள வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாதக-வில் இருந்து Exit! எம்.பி. ஆஃபர் தரும் திமுக? பனையூரா? அறிவாலயமா?

நாதக-வில் இருந்து வெளியேறியுள்ள காளியம்மாள், திமுகவில் ஐக்கியமாகப் போவதாக பரபரப்பாக பேசப்பட்டுவரும் நிலையில், திமுகவிடம் காளியம்மாள் ஒரு முக்கிய டிமாண்டை வைத்ததாகவும், அதற்கு அறிவாலயமும் ஓகே சொல்லிவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அப்படி காளியம்மாள் வைத்த டிமாண்ட் என்ன? அறிவாலயம் இந்த டிமாண்டிற்கு ஒகே சொன்னதன் பின்னணி என்ன? என்பன குறித்து விரிவாக பார்ப்போம்.

15 காவல்துறை அதிகாரிகளை இடமாற்றம் செய்த தமிழக அரசு.. வெளியான அதிரடி உத்தரவு

தமிழ்நாடு முழுவதும்  15 காவல்துறை அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள்.. ரஜினி மரியாதை

சென்னை போயஸ் கார்டனில் உள்ள வேதா நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் திருவுருவ படத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தில் காலியாக உள்ள பதவிகளை 3 மாதத்தில் நிரப்ப வேண்டும்- நீதிமன்றம் கெடு

தமிழகத்தில் மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தில் காலியாக உள்ள தலைவர், உறுப்பினர் பதவிகளை மூன்று மாதங்களில் நிரப்ப வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

10-ஆம் வகுப்பு மாணவியை கழுத்தை அறுத்த மாணவன்.. வெளியான திடுக்கிடும் தகவல்

கரூர் மாவட்டம் கடவூர் அருகே பள்ளி மாணவியை கழுத்தை அறுத்த விவகாரத்தில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவனை போலீசார் கைது செய்துள்ள நிலையில் பல திடுக்கிடும் தகவல் வெளியானது. 

தடம் புரண்ட சரக்கு ரயில்.. திருவாரூரில் பரபரப்பு

திருவாரூரில் சரக்கு ரயில் இன்ஜின் தடம் புரண்டு ரயில் பாதையை விட்டு கீழே இறங்கி ஜல்லி கற்களில் சிறிது தூரம் தூரம் ஓடி நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை - ஜாக்டோ-ஜியோ விளக்கம்

சென்னை தலைமை செயலகத்தில் ஜாக்டோ-ஜியோ அமைப்புடன் அமைச்சர்கள் குழு ஆலோசனை

ரயிலில் துணை நடிகையிடம் திருடிய காவலர்... ரயில்வே போலீசார் விசாரனை

ஓடும் ரயிலில்  தூங்கிக்கொண்டிருந்த பெண்ணிடம் ஆறு லட்சம் நகைகள் அடங்கிய கைப்பையை திருடிய காவலரை கைது செய்து ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உளவுத்துறை காவலரை தாக்கிய நுண்ணறிவு பிரிவு காவலர்கள்.. போலீசில் புகார்

மாநில உளவுத்துறை காவலரை தாக்கியதாக சென்னை நுண்ணறிவு பிரிவு காவலர், உதவி ஆய்வாளர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இரு காவலர்கள் சேர்ந்து உளவுத்துறை காவலரை சரமாரி தாக்கியதில் கால் எலும்பு முறிவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

15 ஆயிரம் கோடி கொடுத்தால் மும்மொழிக்கொள்கையை ஏற்றுக் கொள்வீர்களா? முதலமைச்சருக்கு டி. ஜெயக்குமார் கேள்வி

பத்தாயிரம் கோடி ரூபாயை கொடுத்தால் கூட மும்மொழிக் கொள்கையை ஏற்க மாட்டோம் என கூறும் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், 15 ஆயிரம் கோடி ரூபாய் கொடுத்தால் ஏற்றுக் கொள்வாரா? என்று முன்னாள் அமைச்சர் டி.  ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

நிதி நிறுவன கடன் தொல்லையால் இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை..! 

நிதி நிறுவன கடன் தொல்லையால், தன்னுடைய சாவுக்கு காரணம் இவர்கள் தான் என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.