அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகநாதனின் மகன் ராஜா என்பவர் தூத்துக்குடி மாநகராட்சியில் 59 வது வார்டு அதிமுக கவுன்சிலராக பதவி வகித்து வருகிறார். இந்த நிலையில்,வேளச்சேரியில் தனது குடும்பத்தோடு வசித்து வரும் ராஜாவின் சகோதரியும் அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகநாதனின் மகளுமான பொன்னரசி(38) என்பவர் சில தினங்களுக்கு முன் சென்னை மத்திய குற்றப்பிரிவு - மோசடி தடுப்பு புலனாய்வு பிரிவு போலீசாரிடம் புகார் ஒன்றை அளித்தார்.
அதில், தனது தம்பியும் தூத்துக்குடி மாநகராட்சி 59 வது வார்டு அதிமுக கவுன்சிலருமான ராஜா மற்றும் அவரது மனைவி அனுஷா ஆகியோர் தன்னையும் தனது கணவரையும் ஏமாற்றி ரூ.17 கோடி மதிப்புள்ள இரண்டு ஏக்கர் நிலம் மற்றும் 300 சவரன் நகை ஆகியவற்றை மோசடி செய்ததாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படியும் புகாரில் தெரிவித்திருந்தார்.
குறிப்பாக, Omeena Pharma Distributors Pvt. Ltd., நிறுவனத்தில் முதலீடு செய்தால் 16% பங்குகள் தருவதாக கூறி தனது கணவருக்கு சொந்தமான ஸ்ரீபெரும்புதூர் நத்தம்பாக்கத்தில் உள்ள இரண்டு ஏக்கர் நிலத்துக்கான சொத்து பத்திரங்களை அடமானமாக வைத்து, அதன் பேரில் தங்களுக்கு தெரியாமல் ரூ.11 கோடி கடன் வாங்கியதாகவும், கடன் வாங்கிய பணத்தையும் தனது தம்பியான ராஜா பெயரில் உள்ள Ashun Exim என்ற நிறுவனத்திற்கு மாற்றி மோசடி செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த மோசடி விவகாரங்களை தன்னிடம் இருந்து மறைத்து தூத்துக்குடி மாவட்டத்தில் தான் புதிதாக உருவாக்க உள்ள Golden Blue Metals Pvt. Ltd என்ற நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக பங்குகள் தருவதாக ஆசை வார்த்தைகள் கூறி தன்னிடமிருந்து 300 சவரன் நகைகளை பெற்று அதனையும் மோசடி செய்ததாக புகாரில் தெரிவித்துள்ளார்.
தனது தம்பியும் அதிமுக கவுன்சிலுருமான ராஜா மற்றும் அவரது மனைவி அனுஷா ஆகிய இருவரும் கூட்டு சேர்ந்து ரூ.17 கோடி மதிப்புள்ள இரண்டு ஏக்கர் நிலம் மற்றும் 300 சவரன் நகை ஆகியவற்றை தன்னுடைய கையெழுத்தை போலியாக பயன்படுத்தி மோசடி செய்துள்ளதாகவும், எனவே, தனது தம்பி ராஜா மற்றும் அவரது மனைவி அனுஷா ஆகிய இருவர் மீதும் நடவடிக்கை எடுத்து தனது சொத்துக்களை மீட்டு தரும்படியும் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து மத்திய குற்றப்பிரிவு மோசடி புலனாய்வு தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டதில், ரூ.17 கோடி மதிப்புள்ள நிலம் மற்றும் 300 சவரன் நகை ஆகியவற்றை பொன்னரசியின் கையெழுத்தை போலீயாக பயன்படுத்தி மோசடி செய்திருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகநாதனின் மகனும் தூத்துக்குடி மாநகராட்சி 59 வது வார்டு கவுன்சிலருமான ராஜா மற்றும் அவரது மனைவி அனுஷா ஆகிய இருவர் மீதும் மத்திய குற்றப்பிரிவு மோசடி தடுப்பு புலனாய்வு பிரிவு அதிகாரிகள் மோசடி நம்பிக்கை மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து இருவரையும் தேடி வந்தனர்.
இந்த நிலையில், போலீசார் தன் மீது வழக்கு பதிவு செய்த விவரங்களை அறிந்த ராஜா தலைமறைவாக இருந்து கொண்டு வெளிநாடு தப்பிச் செல்ல முற்பட்டது போலீசாருக்கு தெரியவந்தது. இதனால், ராஜா மற்றும் அவரது மனைவி அனுஷா ஆகிய இருவர் மீதும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் லுக் அவுட் நோட்டீஸ் (Look Out Circular) பிறப்பித்திருந்தனர்.
இந்த நிலையில், அதிமுக கவுன்சிலரும் அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகநாதனின் மகனுமான ராஜா மலேசியா தப்பிச் செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்தபோது லுக் அவுட் நோட்டீஸ் காரணமாக விமான நிலைய அதிகாரிகள் ராஜாவை பிடித்து சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இதனையடுத்து ராஜாவை கைது செய்த மத்திய குற்றப்பிரிவு போலீசார், அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவரை சிறையில் அடைத்தனர். மேலும், தலைமறைவாக உள்ள அவரது மனைவி அனுஷா என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.
தனது அக்காவிடமே ரூ.17 கோடி மதிப்புள்ள நிலம் மற்றும் நகைகளை வாங்கிக் கொண்டு மோசடி செய்த விவகாரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகநாதனின் மகனும் அதிமுக தூத்துக்குடி மாநகராட்சி கவுன்சிலருமான ராஜா கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
அதில், தனது தம்பியும் தூத்துக்குடி மாநகராட்சி 59 வது வார்டு அதிமுக கவுன்சிலருமான ராஜா மற்றும் அவரது மனைவி அனுஷா ஆகியோர் தன்னையும் தனது கணவரையும் ஏமாற்றி ரூ.17 கோடி மதிப்புள்ள இரண்டு ஏக்கர் நிலம் மற்றும் 300 சவரன் நகை ஆகியவற்றை மோசடி செய்ததாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படியும் புகாரில் தெரிவித்திருந்தார்.
குறிப்பாக, Omeena Pharma Distributors Pvt. Ltd., நிறுவனத்தில் முதலீடு செய்தால் 16% பங்குகள் தருவதாக கூறி தனது கணவருக்கு சொந்தமான ஸ்ரீபெரும்புதூர் நத்தம்பாக்கத்தில் உள்ள இரண்டு ஏக்கர் நிலத்துக்கான சொத்து பத்திரங்களை அடமானமாக வைத்து, அதன் பேரில் தங்களுக்கு தெரியாமல் ரூ.11 கோடி கடன் வாங்கியதாகவும், கடன் வாங்கிய பணத்தையும் தனது தம்பியான ராஜா பெயரில் உள்ள Ashun Exim என்ற நிறுவனத்திற்கு மாற்றி மோசடி செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த மோசடி விவகாரங்களை தன்னிடம் இருந்து மறைத்து தூத்துக்குடி மாவட்டத்தில் தான் புதிதாக உருவாக்க உள்ள Golden Blue Metals Pvt. Ltd என்ற நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக பங்குகள் தருவதாக ஆசை வார்த்தைகள் கூறி தன்னிடமிருந்து 300 சவரன் நகைகளை பெற்று அதனையும் மோசடி செய்ததாக புகாரில் தெரிவித்துள்ளார்.
தனது தம்பியும் அதிமுக கவுன்சிலுருமான ராஜா மற்றும் அவரது மனைவி அனுஷா ஆகிய இருவரும் கூட்டு சேர்ந்து ரூ.17 கோடி மதிப்புள்ள இரண்டு ஏக்கர் நிலம் மற்றும் 300 சவரன் நகை ஆகியவற்றை தன்னுடைய கையெழுத்தை போலியாக பயன்படுத்தி மோசடி செய்துள்ளதாகவும், எனவே, தனது தம்பி ராஜா மற்றும் அவரது மனைவி அனுஷா ஆகிய இருவர் மீதும் நடவடிக்கை எடுத்து தனது சொத்துக்களை மீட்டு தரும்படியும் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து மத்திய குற்றப்பிரிவு மோசடி புலனாய்வு தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டதில், ரூ.17 கோடி மதிப்புள்ள நிலம் மற்றும் 300 சவரன் நகை ஆகியவற்றை பொன்னரசியின் கையெழுத்தை போலீயாக பயன்படுத்தி மோசடி செய்திருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகநாதனின் மகனும் தூத்துக்குடி மாநகராட்சி 59 வது வார்டு கவுன்சிலருமான ராஜா மற்றும் அவரது மனைவி அனுஷா ஆகிய இருவர் மீதும் மத்திய குற்றப்பிரிவு மோசடி தடுப்பு புலனாய்வு பிரிவு அதிகாரிகள் மோசடி நம்பிக்கை மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து இருவரையும் தேடி வந்தனர்.
இந்த நிலையில், போலீசார் தன் மீது வழக்கு பதிவு செய்த விவரங்களை அறிந்த ராஜா தலைமறைவாக இருந்து கொண்டு வெளிநாடு தப்பிச் செல்ல முற்பட்டது போலீசாருக்கு தெரியவந்தது. இதனால், ராஜா மற்றும் அவரது மனைவி அனுஷா ஆகிய இருவர் மீதும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் லுக் அவுட் நோட்டீஸ் (Look Out Circular) பிறப்பித்திருந்தனர்.
இந்த நிலையில், அதிமுக கவுன்சிலரும் அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகநாதனின் மகனுமான ராஜா மலேசியா தப்பிச் செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்தபோது லுக் அவுட் நோட்டீஸ் காரணமாக விமான நிலைய அதிகாரிகள் ராஜாவை பிடித்து சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இதனையடுத்து ராஜாவை கைது செய்த மத்திய குற்றப்பிரிவு போலீசார், அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவரை சிறையில் அடைத்தனர். மேலும், தலைமறைவாக உள்ள அவரது மனைவி அனுஷா என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.
தனது அக்காவிடமே ரூ.17 கோடி மதிப்புள்ள நிலம் மற்றும் நகைகளை வாங்கிக் கொண்டு மோசடி செய்த விவகாரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகநாதனின் மகனும் அதிமுக தூத்துக்குடி மாநகராட்சி கவுன்சிலருமான ராஜா கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.