அரியலூர் அருகே ஓட்டக்கோவில் கிராமத்தில் அமைந்துள்ள டால்மியா சிமெண்ட் ஆலை எதிரே பழமையான காமாட்சி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் ஓட்டக்கோவில் கிராம மக்களுக்கு குலதெய்வமாகவும் உள்ளது, இக்கோவிலில் சுற்றுசுவர் இல்லாத காரணத்தால் சிமெண்ட் ஆலைக்கு வரக்கூடிய ஓட்டுநர்கள் கழிவறையாகவும், குளிப்பதற்கும், சீட்டு விளையாடுவது உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
சிமெண்ட் ஆலை நிர்வாகம் கோவிலுக்கு சுற்றுச்சுவர் கட்டி தர வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கடந்த மாதம் சிமெண்ட் ஆலையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது ஆலை நிர்வாகம் அவகாசம் கேட்டதாக கூறப்பட்ட நிலையில், 20 நாட்கள் கடந்து ஆலை நிர்வாகம் அமைதியாக இருப்பதால் ஆத்திரமடைந்த கிராம பொதுமக்கள் இன்று மீண்டும் சிமெண்ட் ஆலையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால், இருபுறமும் உள்ள கேட் மூடப்பட்டதால் பணிக்கு செல்லும் தொழிலாளர்கள் பணிக்கு செல்ல முடியாமலும் பணி முடித்தவர்கள் வெளியே வர முடியாமல் ஆங்காங்கே நின்றிருந்தனர். அதாவது, பொதுமக்கள் இந்த போராட்டத்தால், தொழிற்சாலை நிர்வாகம் ஆலையின் கேட்டை மூடியதால், தொழிலாளர்கள் பணிக்கு செல்ல முடியாமலும், தொழிற்சாலையில் இருந்து பணி முடிந்தவர்கள் வெளியே வர முடியாத சூழல் ஏற்பட்டது.

அப்போது பாதுகாப்பிற்கு நின்றிருந்த காவல் ஆய்வாளர், சிமெண்ட் ஆலையை உங்களது கோரிக்கையை செய்ய வேண்டும் என வலியுறுத்த முடியாது என கூறியதால் ஆத்திரமடைந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
எங்கள் நிலங்களை வாங்கிக் கொண்டு எங்கள் பகுதியில் உள்ள சிமெண்ட் ஆலை அதன் தன் விருப்ப நிதியிலிருந்து செய்ய வேண்டி கேட்க எங்களுக்கு உரிமை உண்டு என தொடர்ந்து கூச்சலிட்டதால் சிறிது நேரம் பரபரப்பான சூழல் காணப்பட்டது.
சிமெண்ட் ஆலை நிர்வாகம் கோவிலுக்கு சுற்றுச்சுவர் கட்டி தர வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கடந்த மாதம் சிமெண்ட் ஆலையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது ஆலை நிர்வாகம் அவகாசம் கேட்டதாக கூறப்பட்ட நிலையில், 20 நாட்கள் கடந்து ஆலை நிர்வாகம் அமைதியாக இருப்பதால் ஆத்திரமடைந்த கிராம பொதுமக்கள் இன்று மீண்டும் சிமெண்ட் ஆலையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால், இருபுறமும் உள்ள கேட் மூடப்பட்டதால் பணிக்கு செல்லும் தொழிலாளர்கள் பணிக்கு செல்ல முடியாமலும் பணி முடித்தவர்கள் வெளியே வர முடியாமல் ஆங்காங்கே நின்றிருந்தனர். அதாவது, பொதுமக்கள் இந்த போராட்டத்தால், தொழிற்சாலை நிர்வாகம் ஆலையின் கேட்டை மூடியதால், தொழிலாளர்கள் பணிக்கு செல்ல முடியாமலும், தொழிற்சாலையில் இருந்து பணி முடிந்தவர்கள் வெளியே வர முடியாத சூழல் ஏற்பட்டது.

அப்போது பாதுகாப்பிற்கு நின்றிருந்த காவல் ஆய்வாளர், சிமெண்ட் ஆலையை உங்களது கோரிக்கையை செய்ய வேண்டும் என வலியுறுத்த முடியாது என கூறியதால் ஆத்திரமடைந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
எங்கள் நிலங்களை வாங்கிக் கொண்டு எங்கள் பகுதியில் உள்ள சிமெண்ட் ஆலை அதன் தன் விருப்ப நிதியிலிருந்து செய்ய வேண்டி கேட்க எங்களுக்கு உரிமை உண்டு என தொடர்ந்து கூச்சலிட்டதால் சிறிது நேரம் பரபரப்பான சூழல் காணப்பட்டது.