கோவை திருச்சி தேசிய நெடுஞ்சாலை பல்லடம் நால் ரோடு பகுதியில் கண்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. சாலையோரம் நின்று இருந்த மூன்று பெண்கள் மீது கண்டெய்னர் கவிழ்ந்ததால் மிட்கும் பணி தீவிரமடைந்துள்ளது.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் நால் ரோடு பகுதியில் கோவை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கோவையிலிருந்து பல்லடம் நோக்கி லோடு ஏற்றி வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென யாஅரும் எதிர்பார்க்காத தருணத்தில் கண்டெய்னர் லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து வலது புறமாக திரும்பியது. இதில் அதிக பாரத்துடன் இருந்த கண்டைனர் பெட்டி தனியாக பிரிந்து கவிழ்ந்ததவுடன் லாரியும் சேர்ந்து கவிழ்ந்தது. இதில் சாலையோரம் நின்று கொண்டிருந்த மூன்று பெண்கள் கன்டெய்னர் அடியில் சிக்கியதாக கூறப்படுகிறது. இந்த கண்டெய்னர் லாரி கவிழ்ந்த விபத்தில், 2 பேர் பரிதாப சம்பவ இடத்திலேயெ உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து மூன்று கிரேன் உதவியுடன் கண்டெய்னரை தூக்கி அடியில் சிக்கி உள்ளவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.
மதிய நேரத்தில் நடைபெற்ற இந்த சாலை விபத்தில், 3 பெண்கள் கண்டெய்னர் லாரியில் சிக்கியது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் லாரியில் நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட பாரம் ஏற்றி வந்ததால் தான் லாரி கவிந்து விபத்து ஏற்பட்டதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் நால் ரோடு பகுதியில் கோவை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கோவையிலிருந்து பல்லடம் நோக்கி லோடு ஏற்றி வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென யாஅரும் எதிர்பார்க்காத தருணத்தில் கண்டெய்னர் லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து வலது புறமாக திரும்பியது. இதில் அதிக பாரத்துடன் இருந்த கண்டைனர் பெட்டி தனியாக பிரிந்து கவிழ்ந்ததவுடன் லாரியும் சேர்ந்து கவிழ்ந்தது. இதில் சாலையோரம் நின்று கொண்டிருந்த மூன்று பெண்கள் கன்டெய்னர் அடியில் சிக்கியதாக கூறப்படுகிறது. இந்த கண்டெய்னர் லாரி கவிழ்ந்த விபத்தில், 2 பேர் பரிதாப சம்பவ இடத்திலேயெ உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து மூன்று கிரேன் உதவியுடன் கண்டெய்னரை தூக்கி அடியில் சிக்கி உள்ளவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.
மதிய நேரத்தில் நடைபெற்ற இந்த சாலை விபத்தில், 3 பெண்கள் கண்டெய்னர் லாரியில் சிக்கியது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் லாரியில் நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட பாரம் ஏற்றி வந்ததால் தான் லாரி கவிந்து விபத்து ஏற்பட்டதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.