லைஃப்ஸ்டைல்

உங்க பெட்ரூமில் இந்த 3 பொருட்கள் இருக்கா?.. உடனே தூக்கி போடுங்க

படுக்கையறையில் தினசரி பயன்படுத்தும் தலையணைகள், மெத்தைகள், ஏர் ஃப்ரெஷ்னர் உள்ளிட்டவைகளில் மனித ஆரோக்கியத்தை பாதிக்கும் பல்வேறு ஆபத்துகள் உள்ளதாக கலிஃபோர்னியாவைச் சேர்ந்த மருத்துவர் எச்சரித்துள்ளார்.

உங்க பெட்ரூமில் இந்த 3 பொருட்கள் இருக்கா?.. உடனே தூக்கி போடுங்க
3 Toxic Items in bedroom
கலிஃபோர்னியாவைச் சேர்ந்த பிரபல மருத்துவரான சவுரப் சேத்தி, படுக்கையறையில் உள்ள மூன்று பொருட்கள் மனித ஆரோக்கியத்தை பாதிக்கும் என்று தெரிவித்துள்ளார். அதன்படி, பழைய தலையணைகள், செயற்கை வாசனை தெளிப்பான் (Air freshner), நீண்ட நாள் பயன்படுத்தப்பட்ட அல்லது தேய்ந்து போன மெத்தைகள் உள்ளிட்டவைகளில் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பாதிக்கும் பல்வேறு ஆபத்துகள் உள்ளது என்று எச்சரித்துள்ளார்.

பழைய தலையணைகள்:

"நாம் தினசரி பயன்படுத்தும் தலையணைகள் உடலில் உள்ள எண்ணெய், வியர்வை, உமிழ்நீர் மற்றும் தோல் செதில்களுக்கு கணிசமான அளவில் ஈர்த்துக்கொள்ளும். இவைகள், காலப்போக்கில் தலையணைகளில் பூஞ்சை, கிருமிகள், தூசிப் பூச்சிகள் உள்ளிட்டவைகள் குவிகின்றன.

இந்தத் தலையணைகள், குறிப்பாக வியர்வை மற்றும் உமிழ்நீரிலிருந்து வரும் ஈரப்பத்திற்கு வெளிப்படும் போது, பாக்டீரியாக்களின் இனப்பெருக்க இடமாக மாறுகின்றன. இது உங்கள் சருமம், சைனஸ் மற்றும் தூக்கத்தின் தரத்தை பாதிக்கலாம். ஒரு தலையணை வெளிப்புறத்தில் சுத்தமாக இருப்பது போல் தெரிந்தாலும், அதன் உட்புறம் நுண்ணிய கிருமிகளுக்கு ஒரு இனப்பெருக்க இடமாக மாறும். அதிகபட்சம் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறையாவது தலையணைகளை மாற்றவும், அவற்றை அவ்வப்போது சுத்தம் செய்ய வேண்டும்" என்று மருத்துவர் சேத்தி தெரிவித்தார்.

செயற்கை வாசனைத் தெளிப்பான்கள் (Synthetic Air Fresheners)

"படுக்கையறையை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கவும், நாற்றங்களை வெளியேற்றவும் ஏர் ஃப்ரெஷ்னர் பயன்படுத்துவது வழக்கமானது. இருப்பினும், ரசாயனங்களால் தயாரிக்கப்படும் இந்தத் ஏர் ஃப்ரெஷ்னர்கள் நீண்ட காலத்திற்கு மனித ஆரோக்கியத்தைப் பாதிக்கலாம். மேலும் இது, ஹார்மோன் சீர்குலைவுகள் மற்றும் ஆஸ்துமா உள்ளிட்ட பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்.

பல ஏர் ஃப்ரெஷ்னர் ஆவியாகும் கரிம சேர்மங்களை வெளியிடுகின்றன. இவை சுவாசப் பிரச்சினைகள் மற்றும் தலைவலியை ஏற்படுத்தக்கூடும். இவைகளை நீண்ட காலமாகப் பயன்படுத்துவது இதய செயல்பாட்டைப் பாதிக்கிறது. குறிப்பாக நுரையீரல் பிரச்சனைகள் கொண்டவர்களுக்கு இது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்" என்றார்.

தேய்ந்த மெத்தைகள்:

"மெத்தைகள் படுக்கையறையில் அதிகம் பயன்படுத்தப்படும் பொருளாக இருந்தாலும், அவை நீண்ட காலத்துக்கு பயன்படுத்துவதன் மூலம் தூக்கமின்மை, முதுகுப் பிரச்சினைகள் மற்றும் சுவாச சுகாதாரப் பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

7-10 வருடங்களுக்கு மேல் பழமையான எந்தவொரு மெத்தையும் காலப்போக்கில் சிதைந்து, தூசி, பூச்சிகள், பூஞ்சை, வியர்வை உள்ளிட்டவைகள் ஈர்த்துக்கொள்ளும். இவை அனைத்தும் தூக்கத்தின் தரத்தை கடுமையாகப் பாதிப்பதுடன், நாள்பட்ட முதுகுவலி அல்லது முதுகெலும்புப் பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். எனவே, தேய்ந்து போன மெத்தைகள் அகற்றிவிட்டு, புதிய மெத்தை வாங்குவது அவசியம். ஏனெனில் நல்ல மெத்தைகள் உடல் ஆரோக்கியத்தையும், புத்துணர்ச்சியூட்டும் தூக்கத்தையும் பராமரிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது" என மருத்துவர் சேத்தி தெரிவித்தார்.