கன்னியாகுமரி மாவட்டம், அருமனையை அடுத்த குதிரைவட்டன் கால குலவிளையை சார்ந்தவர் வினிஷா (32). இவருக்கும் மதீஷ் என்பவருக்கும் திருமணமாகி 8 வயதில் மியா என்ற மூன்றாம் வகுப்பில் படிக்கும் பெண் குழந்தை ஒன்று உள்ளது.
சிறுமி மீது சரமாரி தாக்குதல்
இந்த நிலையில் கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு வினிஷா தனது கணவரை பிரிந்து பெற்றோர் வீட்டிற்கு வந்துள்ளார். வினிஷாவுக்கு இரண்டு அண்ணன்கள். அதில் ஒரு அண்ணன் கல்யாணம் முடிந்த கையோடு வெளியூரில் தங்கி இருக்கிறார். மற்றொரு அண்ணன் திருமணம் முடிந்து தாய், தந்தையுடன் குடும்ப வீட்டில் வசித்து வருகிறார்.
இதற்கிடையே கணவனை பிரிந்து வந்த வினிஷா தாய் தந்தையுடன் வீட்டில் வசித்து வரும் நிலையில், இவர்களை வீட்டை விட்டு துரத்தும் நோக்கில் அண்ணன் மனைவி நிஷா (28) தினசரி வினிஷாவின் குழந்தையான மியா என்ற பெண் குழந்தையை தினசரி தாக்கி வந்ததாக கூறப்படுகிறது.
வீடியோ வைரல்
கணவரை பிரிந்து வந்த வினிஷா அருகிலுள்ள முந்திரி தொழிற்சாலையில் தினசரி வேலைக்கு சென்று வருகிறார். இந்த நேரத்தில் அண்ணன் மனைவியான நிஷா கண்மூடித்தனமாக மியாவை தாக்கி வந்ததாக கூறப்படுகிறது. இதேபோல் கடந்த இரு நாட்களுக்கு முன்பு அனைவரும் வீட்டில் இருக்கும் நேரத்தில் 8 வயதான பெண் குழந்தையை தாக்கி தூக்கி எறிந்துள்ளார். இதன் காட்சிகள் நேற்று சமூகவலைதளங்களில் வெளியாகின.
இதில் பலத்த காயமடைந்த மூன்றாவது வகுப்பு படிக்கும் பெண் குழந்தையான மியா குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து பெண் குழந்தையின் தாய் அருமனை காவல் நிலையத்தில் புகார் அளித்தும் போலீசார் இரு நாட்களாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
பெண் கைது
இந்த நிலையில் 8 வயது பெண் குழந்தை கொடூரமாக தாக்கப்படும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானதை தொடர்ந்து குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் உத்தரவின்பேரில் இன்று அருமனை போலீசார் குழந்தையை தாக்கிய நிஷா மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
சிறுமி மீது சரமாரி தாக்குதல்
இந்த நிலையில் கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு வினிஷா தனது கணவரை பிரிந்து பெற்றோர் வீட்டிற்கு வந்துள்ளார். வினிஷாவுக்கு இரண்டு அண்ணன்கள். அதில் ஒரு அண்ணன் கல்யாணம் முடிந்த கையோடு வெளியூரில் தங்கி இருக்கிறார். மற்றொரு அண்ணன் திருமணம் முடிந்து தாய், தந்தையுடன் குடும்ப வீட்டில் வசித்து வருகிறார்.
இதற்கிடையே கணவனை பிரிந்து வந்த வினிஷா தாய் தந்தையுடன் வீட்டில் வசித்து வரும் நிலையில், இவர்களை வீட்டை விட்டு துரத்தும் நோக்கில் அண்ணன் மனைவி நிஷா (28) தினசரி வினிஷாவின் குழந்தையான மியா என்ற பெண் குழந்தையை தினசரி தாக்கி வந்ததாக கூறப்படுகிறது.
வீடியோ வைரல்
கணவரை பிரிந்து வந்த வினிஷா அருகிலுள்ள முந்திரி தொழிற்சாலையில் தினசரி வேலைக்கு சென்று வருகிறார். இந்த நேரத்தில் அண்ணன் மனைவியான நிஷா கண்மூடித்தனமாக மியாவை தாக்கி வந்ததாக கூறப்படுகிறது. இதேபோல் கடந்த இரு நாட்களுக்கு முன்பு அனைவரும் வீட்டில் இருக்கும் நேரத்தில் 8 வயதான பெண் குழந்தையை தாக்கி தூக்கி எறிந்துள்ளார். இதன் காட்சிகள் நேற்று சமூகவலைதளங்களில் வெளியாகின.
இதில் பலத்த காயமடைந்த மூன்றாவது வகுப்பு படிக்கும் பெண் குழந்தையான மியா குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து பெண் குழந்தையின் தாய் அருமனை காவல் நிலையத்தில் புகார் அளித்தும் போலீசார் இரு நாட்களாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
பெண் கைது
இந்த நிலையில் 8 வயது பெண் குழந்தை கொடூரமாக தாக்கப்படும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானதை தொடர்ந்து குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் உத்தரவின்பேரில் இன்று அருமனை போலீசார் குழந்தையை தாக்கிய நிஷா மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.