சென்னை காவல் ஆணையாளர் அருண் உத்தரவின்பேரில், 12 காவல் மாவட்டங்களில் காவல் துணை ஆணையாளர்கள் தனிப்படையினர் மற்றும் போதை பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு தனிப்படையினரும் இணைந்து போதைப்பொருட்களுக்கு எதிரான நடவடிக்கைகளை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். மேலும், குற்றவாளிகளை கண்டறிந்து கைது செய்து, சென்னையில் போதைப்பொருள் பயன்பாட்டை முழுவதுமாக அகற்றிட தனிப்படைகள் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக திருவல்லிக்கேணி காவல் மாவட்ட துணை ஆணையாளர் தலைமையிலான சென்னை போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு தனிப்படையினர் மற்றும் நுங்கம்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் ஒருங்கிணைந்து, கடந்த 17.06.2025 இரவு, நுங்கம்பாக்கம், வானிலை ஆராய்ச்சி மையம், பேருந்து நிறுத்தம் அருகே கண்காணித்தபோது, அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த ஒரு நபரை விசாரணை செய்தபோது, அவர் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தனர்.
மேலும் விசாரணையில் அவர் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது, விற்பனைக்காக கொக்கைன் போதைப்பொருள் வைத்திருந்தது தெரியவந்தது. அதன்பேரில், கொக்கைன் போதைப்பொருளை விற்பனைக்காக வைத்திருந்த சேலத்தைச் சேர்ந்த பிரதீப்குமார் (எ) பிரடோ என்பவரை கைது செய்தனர்.
மேலும் கைதானவர் கொடுத்த தகவலின்பேரில், கொக்கைன் போதைப்பொருள் வழக்கில் தொடர்புடைய மேற்கு ஆப்பிரிக்கா நாட்டைச் சேர்ந்த சேர்ந்த ஜான் என்பவரை தனிப்படை போலீசார் ஓசூர் சென்று கடந்த ஜூன் 18 ஆம் தேதி கைது செய்து, சென்னைக்கு அழைத்து வந்தனர். அவர்களிடமிருந்து மொத்தம் 11 கிராம் எடை கொண்ட கொக்கைன், பணம் ரூ.40,000 மற்றும் 2 செல்போன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. கைதான இருவரையும் போலீசார் சிறையில் அடைத்துள்ளனர்.
போதைப்பொருள் வழக்கில் தொடர்புடைய மற்ற தலைமறைவாக இருக்கும் நபர்களை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். முன்னதாக இந்த வழக்கில், முன்னாள் அதிமுக பிரமுகரான பிரசாத்திற்கு கொகைன் போதைப்பொருள் சப்ளை செய்தது இந்த பிரதீப் குமார் தான் என்பது தெரிய வந்தது.
இதையடுத்து பிரதீப் குமாரை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தப்பட்டது. அதில் பல்வேறு அதிர்ச்சி தகவல்களை தெரிவித்ததாக கூறப்படுகிறது. நடிகர் ஸ்ரீகாந்த்திற்கும் முன்னாள் அதிமுக பிரமுகர் பிரசாத் மூலம் தான் கொகைன் போதைப்பொருள் சப்ளை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார். ஏற்கனவே முன்னாள் அதிமுக பிரமுகர் பிரசாத் கைது செய்யப்பட்ட நிலையில், அவர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரசாத் "தீங்கரை" என்ற திரைப்படத்தை தயாரித்து வந்தார். இந்த படத்தில் ஹீரோவாக ஸ்ரீகாந்த் நடித்துள்ளார். நெருங்கிய நண்பர்களாக இருந்த வந்த இருவரும் போதைப்பொருள் பயன்படுத்தும் வழக்கம் ஏற்பட்டுள்ளது. பிரதீப் குமார் பெங்களூருவில் இருந்து கொகைன் போதைப்பொருள் வாங்கி வந்து பிரசாத்திற்கு லட்சக்கணக்கிலான ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
பிரதீப் குமார் தனியார் கல்லூரி ஊழியர் லிங்கேஸ்வரன் மூலம் போதைப்பொருட்கள் பயன்படுத்தும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பிரதீப் குமார் நண்பர்களுடன் சேர்ந்து பப் மற்றும் பாரில் வைத்து கஞ்சா, OG கஞ்சா மற்றும் கொகைன் ஆகியவற்றை பயன்படுத்தியுள்ளார். 2020 ஆம் ஆண்டு தான் முதன் முதலில் பிரதீப் குமார் பெங்ளூரூக்கு சென்று கொகைன் போதைப்பொருளை வாங்கி வந்து சென்னையில் உள்ள நண்பர்களுக்கு விற்று பணம் பார்த்துள்ளார். பெங்களூருக்கு செல்லும் போது தான் ஆப்ரிக்க நாட்டைச் சேர்ந்த ஜான் பழக்கமாகி அவர் மூலமாக அதிக அளவில் கொகைன் போதைப்பொருளை வாங்கி இருப்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. இவர் கொகைன் போதைப்பொருளை ரூ. 7 ஆயிரத்திற்கு வாங்கி வந்து 12 ஆயிரத்திற்கு பிரசாத்திற்கு விற்பனை செய்ததாக கைதான பிரதீப் குமார் வாக்குமூலம் அளித்துள்ளார்.
மேலும் பிரதீப் குமார் 3 ஆண்டுகளாக முன்னாள் அதிமுக பிரமுகரான பிரசாத்துடன் நண்பர்களாக பழகி வந்துள்ளார். கொகைன் போதைப்பொருள் பிரசாத்திற்கு சப்ளை செய்யும் போது நடிகர் ஸ்ரீகாந்திற்கு வேண்டும் என்று வாங்கியிருப்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. நடிகர் ஸ்ரீகாந்த்திற்காக பலமுறை பிரதீப் குமார் பிரசாத் மூலம் கொகைன் சப்ளை செய்துள்ளார் என்பதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த நிலையில் பிரசாத் பார்ட்டி ஒன்றை ஏற்பாடு செய்த நிலையில், அந்த பார்ட்டிக்கு பிரதீப் குமார் கொகைன் போதைப்பொருளை சப்ளை செய்துள்ளார். அதில் நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் கொகைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக கைதான பிரதீப் குமார் வாக்குமூலம் அளித்துள்ளார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே நடிகர் ஸ்ரீகாந்த் தற்போது காவல் விசாரணை வளையத்திற்குள் சிக்கி கொண்டுள்ளார்.
முன்னாள் அதிமுக பிரமுகர் பிரசாத்திற்கு மட்டும் 2023 ம் ஆண்டிலிருந்து சுமார் 40 முறைக்குமேல் கொகனை பிரதீப் குமார் விற்று ரூ. 4,72,000 சம்பாதித்துள்ளதாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. தற்போது நடிகர் ஸ்ரீகாந்தை நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அவர் போதைப்பொருள் உட்கொண்டாரா? என்பதனை கண்டறிய ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை எடுக்கப்பட்டுள்ளது. அதில் அவர் போதைப்பொருள் உட்கொண்டது உறுதியாகி உள்ளதாக காவல்துறை தரப்பில் கூறப்படும் நிலையில், ஸ்ரீகாந்தை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் நடிகர் கிருஷ்ணாவிடமும் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இதன் தொடர்ச்சியாக திருவல்லிக்கேணி காவல் மாவட்ட துணை ஆணையாளர் தலைமையிலான சென்னை போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு தனிப்படையினர் மற்றும் நுங்கம்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் ஒருங்கிணைந்து, கடந்த 17.06.2025 இரவு, நுங்கம்பாக்கம், வானிலை ஆராய்ச்சி மையம், பேருந்து நிறுத்தம் அருகே கண்காணித்தபோது, அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த ஒரு நபரை விசாரணை செய்தபோது, அவர் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தனர்.
மேலும் விசாரணையில் அவர் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது, விற்பனைக்காக கொக்கைன் போதைப்பொருள் வைத்திருந்தது தெரியவந்தது. அதன்பேரில், கொக்கைன் போதைப்பொருளை விற்பனைக்காக வைத்திருந்த சேலத்தைச் சேர்ந்த பிரதீப்குமார் (எ) பிரடோ என்பவரை கைது செய்தனர்.
மேலும் கைதானவர் கொடுத்த தகவலின்பேரில், கொக்கைன் போதைப்பொருள் வழக்கில் தொடர்புடைய மேற்கு ஆப்பிரிக்கா நாட்டைச் சேர்ந்த சேர்ந்த ஜான் என்பவரை தனிப்படை போலீசார் ஓசூர் சென்று கடந்த ஜூன் 18 ஆம் தேதி கைது செய்து, சென்னைக்கு அழைத்து வந்தனர். அவர்களிடமிருந்து மொத்தம் 11 கிராம் எடை கொண்ட கொக்கைன், பணம் ரூ.40,000 மற்றும் 2 செல்போன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. கைதான இருவரையும் போலீசார் சிறையில் அடைத்துள்ளனர்.
போதைப்பொருள் வழக்கில் தொடர்புடைய மற்ற தலைமறைவாக இருக்கும் நபர்களை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். முன்னதாக இந்த வழக்கில், முன்னாள் அதிமுக பிரமுகரான பிரசாத்திற்கு கொகைன் போதைப்பொருள் சப்ளை செய்தது இந்த பிரதீப் குமார் தான் என்பது தெரிய வந்தது.
இதையடுத்து பிரதீப் குமாரை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தப்பட்டது. அதில் பல்வேறு அதிர்ச்சி தகவல்களை தெரிவித்ததாக கூறப்படுகிறது. நடிகர் ஸ்ரீகாந்த்திற்கும் முன்னாள் அதிமுக பிரமுகர் பிரசாத் மூலம் தான் கொகைன் போதைப்பொருள் சப்ளை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார். ஏற்கனவே முன்னாள் அதிமுக பிரமுகர் பிரசாத் கைது செய்யப்பட்ட நிலையில், அவர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரசாத் "தீங்கரை" என்ற திரைப்படத்தை தயாரித்து வந்தார். இந்த படத்தில் ஹீரோவாக ஸ்ரீகாந்த் நடித்துள்ளார். நெருங்கிய நண்பர்களாக இருந்த வந்த இருவரும் போதைப்பொருள் பயன்படுத்தும் வழக்கம் ஏற்பட்டுள்ளது. பிரதீப் குமார் பெங்களூருவில் இருந்து கொகைன் போதைப்பொருள் வாங்கி வந்து பிரசாத்திற்கு லட்சக்கணக்கிலான ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
பிரதீப் குமார் தனியார் கல்லூரி ஊழியர் லிங்கேஸ்வரன் மூலம் போதைப்பொருட்கள் பயன்படுத்தும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பிரதீப் குமார் நண்பர்களுடன் சேர்ந்து பப் மற்றும் பாரில் வைத்து கஞ்சா, OG கஞ்சா மற்றும் கொகைன் ஆகியவற்றை பயன்படுத்தியுள்ளார். 2020 ஆம் ஆண்டு தான் முதன் முதலில் பிரதீப் குமார் பெங்ளூரூக்கு சென்று கொகைன் போதைப்பொருளை வாங்கி வந்து சென்னையில் உள்ள நண்பர்களுக்கு விற்று பணம் பார்த்துள்ளார். பெங்களூருக்கு செல்லும் போது தான் ஆப்ரிக்க நாட்டைச் சேர்ந்த ஜான் பழக்கமாகி அவர் மூலமாக அதிக அளவில் கொகைன் போதைப்பொருளை வாங்கி இருப்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. இவர் கொகைன் போதைப்பொருளை ரூ. 7 ஆயிரத்திற்கு வாங்கி வந்து 12 ஆயிரத்திற்கு பிரசாத்திற்கு விற்பனை செய்ததாக கைதான பிரதீப் குமார் வாக்குமூலம் அளித்துள்ளார்.
மேலும் பிரதீப் குமார் 3 ஆண்டுகளாக முன்னாள் அதிமுக பிரமுகரான பிரசாத்துடன் நண்பர்களாக பழகி வந்துள்ளார். கொகைன் போதைப்பொருள் பிரசாத்திற்கு சப்ளை செய்யும் போது நடிகர் ஸ்ரீகாந்திற்கு வேண்டும் என்று வாங்கியிருப்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. நடிகர் ஸ்ரீகாந்த்திற்காக பலமுறை பிரதீப் குமார் பிரசாத் மூலம் கொகைன் சப்ளை செய்துள்ளார் என்பதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த நிலையில் பிரசாத் பார்ட்டி ஒன்றை ஏற்பாடு செய்த நிலையில், அந்த பார்ட்டிக்கு பிரதீப் குமார் கொகைன் போதைப்பொருளை சப்ளை செய்துள்ளார். அதில் நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் கொகைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக கைதான பிரதீப் குமார் வாக்குமூலம் அளித்துள்ளார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே நடிகர் ஸ்ரீகாந்த் தற்போது காவல் விசாரணை வளையத்திற்குள் சிக்கி கொண்டுள்ளார்.
முன்னாள் அதிமுக பிரமுகர் பிரசாத்திற்கு மட்டும் 2023 ம் ஆண்டிலிருந்து சுமார் 40 முறைக்குமேல் கொகனை பிரதீப் குமார் விற்று ரூ. 4,72,000 சம்பாதித்துள்ளதாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. தற்போது நடிகர் ஸ்ரீகாந்தை நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அவர் போதைப்பொருள் உட்கொண்டாரா? என்பதனை கண்டறிய ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை எடுக்கப்பட்டுள்ளது. அதில் அவர் போதைப்பொருள் உட்கொண்டது உறுதியாகி உள்ளதாக காவல்துறை தரப்பில் கூறப்படும் நிலையில், ஸ்ரீகாந்தை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் நடிகர் கிருஷ்ணாவிடமும் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.