தமிழ்நாடு

2 மகன்களை கொன்ற கொடூர தந்தை.. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

மது போதையில் இரண்டு குழந்தைகளை கழுத்தை நெரித்து கொலை செய்த தந்தைக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருவள்ளூர் மகிளா நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

2 மகன்களை கொன்ற கொடூர தந்தை.. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
மகன்களை கொன்ற தந்தைக்கு 12 ஆண்டுகள் சிறை
திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் அடுத்த சிற்றம்பாக்கம் கிராமத்தில் பஜனை கோவில் தெருவில் வசித்து வந்தவர் கூலி தொழிலாளி அன்பு (வயது 48). இவரது மனைவி அமுலு. இந்த தம்பதியினருக்கு வீரமணி என்கின்ற கோகுல் (வயது-7), லோகேஷ் (வயது-5) என்கின்ற இரண்டு மகன்கள் இருந்தனர்.

இந்தநிலை, அன்பு சரிவர வேலைக்கு செல்லாமல் தினமும் குடிக்க பணம் கேட்டு மனைவியுடன் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக கணவன் - மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

ஒரு கட்டத்தில் அன்பு அப்பகுதியில் உள்ளவர்களிடம் கடன் வாங்கி அந்த பணத்தை கொண்டு மது அருந்தி வந்ததாக தெரிகிறது. மேலும், பணத்தைக் கொடுத்தவர்கள் தங்களது பணத்தை திருப்பிதருமாறு அன்புவிடம் தகராது செய்துள்ளனர்.

இதன் காரணமாக கணவன் மனைவிக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த அன்பு மதுபோதையில் தனது இரண்டு மகன்களையும் காலால் மிதித்தும், கழுத்தை நெரித்தும் படுகொலை செய்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து அவரது மனைவி அமலு 2015 ஆம் ஆண்டு கடம்பத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பின்னர் போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கு கடந்த 10 ஆண்டுகளாக திருவள்ளூர் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கின் இறுதி விசாரணை மகிளா நீதிமன்ற நீதிபதி ரேவதி முன் நேற்று விசாரணைக்கு வந்தது.

வாழ்க்கை விசாரித்த நீதிபதி இரண்டு குழந்தைகளை கொடூரமாக கொலை செய்ததற்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், மனைவியை கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்ததற்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை என 12 ஆண்டுகள் சிறை தண்டனையும், இவற்றை அவர் ஏகபோக காலத்திற்கும் அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பு அளித்தார். இதைத் தொடர்ந்து அன்பு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.