K U M U D A M   N E W S
Kumudam Ad

கொலை

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் வெறிச்செயல்: ரவுடியுடன் சேர்ந்து மனைவியை கத்தியால் வெட்ட முயன்ற கணவன் கைது!

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில், கணவன் தினகரன், பிரபல ரவுடி 'காக்கா தீனா' மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோருடன் சேர்ந்து தனது மனைவி துர்காவைத் தாக்கிக் கத்தியால் வெட்ட முயன்ற வழக்கில், சிஎம்பிடி போலீசார் மூவரையும் கைது செய்தனர்.

வடசென்னைப் பிரபல ரவுடி நாகேந்திரன் உடல்நிலை மோசம்: ஸ்டான்லி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!

வடசென்னையின் பிரபல தாதாவும், ஆயுள் தண்டனைக் கைதியுமான நாகேந்திரன் (ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு A1) கல்லீரல் பாதிப்பு காரணமாக உடல்நிலை மோசமடைந்துள்ளது. அவர் தற்போதுச் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையின் சிறைக் கைதிகள் வார்டில் தீவிர சிகிச்சைப் பெற்று வருகிறார்.

விஜய்க்கு எதிராகப் போஸ்டர் ஒட்டிய இளைஞர் தற்கொலை: த.வெ.க. நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு!

கரூர் கூட்ட நெரிசலைக் கண்டித்து போஸ்டர் ஒட்டிய நாகப்பட்டினத்தைச் சேர்ந்த பரத்வாஜ் என்பவர் தற்கொலை செய்துகொண்டார். தன்னை மிரட்டிய திவாகர் உள்ளிட்ட 4 தவெக நிர்வாகிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கள்ளக்காதல் விவகாரம்: ஓனரின் மனைவியுடன் பழகிய இளைஞர் கத்தியால் குத்திக் கொலை!

பெங்களூரு மிச்சர் கம்பெனி ஓனர் அல்போன்ஸின் மனைவியுடன் கள்ளக்காதல் வைத்திருந்த 19 வயது இளைஞர் பவன்குமார், திருப்பத்தூரில் உள்ள அவரது பாட்டி வீட்டில், ஓனர் அல்போன்ஸ் மற்றும் 3 நண்பர்களால் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கொலையாளிகளைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

திமுக ஒன்றிய செயலாளர் மீது ரூ.85 லட்சம் மோசடி புகார்: நண்பர் எஸ்பி அலுவலகத்தில் மனு!

தருமபுரி, காரிமங்கலம் திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் அன்பழகன் மீது, நண்பரிடம் வாங்கிய ₹85 லட்சம் பணத்தைத் திருப்பித் தராமல் ஏமாற்றியதுடன், கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறி மருந்தக உரிமையாளர் பாலச்சந்திரன் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.

கிருஷ்ணகிரி அருகே இரட்டைக் கொலை: தாய், 13 வயது மகள் கழுத்தறுத்து படுகொலை!

கிருஷ்ணகிரி, பாஞ்சாலியூர் யாசின் நகரில் தாய் எல்லம்மாள் மற்றும் அவரது 13 வயது மகள் யாசிதா இருவரும் கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்டனர். பள்ளி முடிந்து திரும்பிய மகன் கண்டு அளித்த தகவலின் பேரில், மாவட்ட எஸ்.பி. தங்கதுரை தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

30 ஆண்டுகளுக்கு முன் பாலியல் வன்கொடுமை: காத்திருந்து பழிவாங்கிய இந்திய வம்சாவளி இளைஞர்!

அமெரிக்காவில் 30 ஆண்டுகளுக்கு முன் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தண்டனை பெற்ற முதியவரை, வருண் சுரேஷ் என்ற இந்திய வம்சாவளி இளைஞர் கழுத்தறுத்துக் கொலை செய்தார். பாலியல் குற்றவாளிகளைக் கொல்வது தனது கடமை என அவர் திடுக்கிடும் வாக்குமூலம் அளித்துள்ளார்.

ஜெபத்திற்கு சென்றவர்கள் மீது தாக்குதல்: நெற்றியில் குங்குமம் பூசி மிரட்டல் - பா.ஜ.க, இந்து முன்னணி நிர்வாகிகள் மீது வழக்கு!

திருநெல்வேலி அருகே ஜெபத்திற்கு சென்றவர்களை வழிமறித்து, குங்குமம் பூசி, கொலை மிரட்டல் விடுத்த இந்து முன்னணி மற்றும் பா.ஜ.க நிர்வாகிகள் 3 பேர் மீது இந்திய நியாய சன்ஹிதா (INS) சட்டப் பிரிவுகளின் கீழ் சுத்தமல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

வாடிக்கையாளரைத் தாக்கி கத்தியைக் காட்டி மிரட்டிய வங்கி மேலாளர்.. பீளமேட்டில் செல்போன் வீடியோவால் பரபரப்பு!

கோவையில், தனது வங்கி கணக்கு முடக்கப்பட்டதற்குக் கேள்வி கேட்ட தொழிலதிபர் பிரஜித்குமார் மீது, தனியார் வங்கி மேலாளர் ஆட்களை ஏவி நடத்திய கொலைவெறித் தாக்குதல் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போடிநாயக்கனூரில் பெண் மரணத்தில் திடீர் திருப்பம் – மகளை கொன்று தந்தை நாடகமாடியது அம்பலம்

மகளை கொன்று நாடகமாடி தந்தையை 24 மணி நேரத்தில் போலீசார் கைது செய்தனர்