தமிழ்நாடு

ஓசூரில் த.வா.க நிர்வாகி ஓட ஓட வெட்டிக்கொலை – விசாரணையில் இறங்கிய போலீஸ்

ஓசூர் அருகே த.வா.க ஒன்றிய நிர்வாகி ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை

ஓசூரில் த.வா.க நிர்வாகி ஓட ஓட வெட்டிக்கொலை – விசாரணையில் இறங்கிய போலீஸ்
ஓசூர் அருகே த.வா.க நிர்வாகி ஓட ஓட வெட்டிக்கொலை
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த சொங்கோடசிங்கனள்ளி கிராமத்தை சேர்ந்த ரவிசங்கர்(35) என்பவர் பன்றிகளை வளர்க்கும் தொழிலை மேற்கொண்டு வருகிறார்.மேலும், ரவிசங்கர் தமிழக வாழ்வுரிமை கட்சியின் கெலமங்கலம் கிழக்கு ஒன்றிய பொருளாளராக பொறுப்பு வகித்து வருகிறார்.

த.வா.க நிர்வாகி வெட்டிக்கொலை

இந்த நிலையில், அஞ்சாளம் கிராமத்தில் த.வா.க நிர்வாகி ரவிசங்கரை மர்ம நபர்கள் இருவர் ஓட, ஓட விரட்டி அரிவாளால் கை, முதுகு, தலை பகுதியில் வெட்டினர். இதனால் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த ரவிசங்கரை அப்பகுதியினர் மீட்டு இராயக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்குள் ரவிசங்கர் பரிதாபமாக உயிரிழந்தார்.

பட்டப்பகலில் நடந்த கொடூரக்கொலை தொடர்பாக சூளகிரி போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், ரவிசங்கர் தொழில் போட்டி காரணமாக கொலை செய்யப்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் கொலையாளிகள் யார்? என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் ஓசூர் சுற்றியுள்ள பகுதிகளில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.