K U M U D A M   N E W S

நீதிமன்றம்

இந்தியா தர்மசத்திரமா? உச்சநீதிமன்றத்தின் கருத்துக்கு திருமாவளவன் ஆட்சேபனை

உலக நாடுகளில் இருந்து மக்கள் வந்து குடியேற 'இந்தியா' தர்மசத்திரம் கிடையாது. ஏற்கனவே 140 கோடி மக்கள் உள்ளனர் என உச்ச நீதிமன்றம் இன்று தெரிவித்துள்ள கருத்து மனிதாபிமானத்திற்கு புறம்பாக உள்ளது. உச்ச நீதிமன்றமே இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளது அதிர்ச்சி அளிப்பதாக விசிக தலைவரும்., எம்.பி-யுமான முனைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

விவசாய தம்பதியர் இரட்டைகொலை வழக்கு.. 4 பேர் கைது!

ஈரோடு மாவட்டம் சிவகிரியில் வயதான விவசாய தம்பதியினர் இரட்டை கொலை வழக்கில் நகைகளை உருக்கி கொடுத்த நகை வியாபாரி கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், இவ்வழக்கில் இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ஜூன் 2 வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

துணைவேந்தர்கள் நியமனம் - மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

தமிழகத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர்களை அரசே நியமிக்கும் வகையில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தை எதிர்த்து வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Pollachi Judgement: பொள்ளாச்சி வழக்கில் குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு விவரம்!

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகளான 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்கி, கோவை கூடுதல் மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினி தேவி தீர்ப்பளித்துள்ளார்.

பொள்ளாச்சி வழக்கு: 9 பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை...விஜய் வரவேற்பு

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகள் 9 பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது வரவேற்கத்தக்கது என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

பொள்ளாச்சி வழக்கு: 9 பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை... தீர்ப்பை பட்டாசு வெடித்து திமுகவினர் வரவேற்பு

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பை வால்பாறை திமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு...9 பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை...நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகள் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து கோவை மகளிர் நீதிமன்றம் பரப்பு தீர்ப்பளித்துள்ளது.

பொள்ளாச்சி வழக்கு...சாகும் வரை ஆயுள் தண்டனை...அரசு தரப்பு கோரிக்கை

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகளுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்க அரசு தரப்பு கோரிக்கை வைத்துள்ளது.

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்...கோவை மகளிர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் 9 பேரும் குற்றவாளிகள் என கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தண்டனை விவரம் மதியம் 12 மணிக்கு வெளியாகும் என அறிவிப்பு

தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் இன்று தீர்ப்பு

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட உள்ள நிலையில் நீதிமன்றத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

‘டிடி ரிட்டன்ஸ் நெக்ஸ்ட் லெவல்’ திரைப்படத்திற்கு தடை?- நடிகர் ஆர்யாவுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு

நடிகர் சந்தானம் நடித்துள்ள "டிடி ரிட்டன்ஸ் நெக்ஸ்ட் லெவல்" திரைப்படத்தை வெளியிட தடை விதிக்க கோரிய மனுவுக்கு படத்தயாரிப்பாளர் நடிகர் ஆர்யா உள்பட இருவர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சித்திரை முழு நிலவு மாநாடு...பாமகவுக்கு சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு

மாநாட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகள் கண்டிப்புடன் பின்பற்றப்படும் என்று வடக்கு மண்டல ஐஜி-யிடம் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என பாமகவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சித்திரை முழு நிலவு பெருவிழாவுக்கு எதிராக மனு...நாளை விசாரணை

பாமக சார்பில் நடத்தவுள்ள சித்திரை முழு நிலவு இளைஞர் பெருவிழாவுக்கு அனுமதி வழங்கக்கூடாது என சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு நாளை விசாரணைக்கு வர உள்ளது.

பணமோசடி வழக்கு...துபாயில் சிறையில் அடைக்கப்பட்ட இந்திய கோடீஸ்வரர்

துபாயில் பணமோசடியில் ஈடுபட்டதாக இந்திய வம்சாவளியை சேர்ந்த கோடீஸ்வரருக்கு நீதிமன்றம் சிறை தண்டனை விதித்துள்ளது.

யூடியூபர் டிடிஎஃப் வாசன் மீதான வழக்கு- காவல்துறைக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு

யூடியூபர் டிடிஎஃப் வாசன் மீது இதுவரை பதிவு செய்யப்பட்ட வழக்கு விவரங்களை தாக்கல் செய்ய தமிழக காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பி.எஸ்.4 வாகன மோசடி: அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தில் 2020 ஆம் ஆண்டுக்கு பின், பி.எஸ்.4 வாகனங்கள் மோசடியாக பதிவு செய்யப்பட்ட விவகாரத்தில் தவறு செய்த அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

'சர்பத் ஜிகாத்' சர்ச்சை: பாபா ராம்தேவை கடுமையாக சாடிய உயர்நீதிமன்றம்!

ரூஹ் அஃப்சாவுக்கு எதிரான சர்பத்-ஜிஹாத் தொடர்பாக கருத்து தெரிவித்த பாபா ராம்தேவ் வகுப்புவாத அவதூறுகளைப் பயன்படுத்தக் கூடாது என்று டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விசாரணைக்கு பின்னரே சாதிச்சான்றிதழ்கள் வழங்கவேண்டும் - தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு

முழுமையான விசாராணைக்கு பிறகே சாதிச்சான்றிதழ்கள் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அண்ணா பல்கலை வழக்கு.. சிபிஐ-க்கு மாற்றக்கோரிய மனு ஜூன்12ல் விசாரணை!

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் இதுவரை 13 சாட்சிகள் மகிளா நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டுள்ளதாக தமிழக டிஜிபி சென்னை உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தீர்மானம் செல்லாது - உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்!

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தற்போதைய நிர்வாகிகளின் பதவிக்காலத்தை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை செல்லாது என அறிவித்து, உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதியை ஆணையராக நியமித்து தேர்தல் நடத்த உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை கோயிலின் அறங்காவலர் குழு தலைவர் நியமனம் ரத்து!

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் அறங்காவலர் குழு தலைவராக ஜீவானந்தம் நியமிக்கப்பட்டதை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காமன்வெல்த் ஊழல் சுரேஷ் கல்மாடிக்கு எதிரான வழக்கை முடித்துவைத்த அமலாக்கத் துறை!

2010 ஆம் ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் ஊழலில், சுரேஷ் கல்மாடி உள்ளிட்டோருக்கு எதிரான பணமுறைகேடு வழக்கை முடித்துவைக்குமாறு அமலாக்கத் துறையின் அறிக்கையை, தில்லி நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.

சுற்றுலா வாகனங்களுக்கு 8 ஆண்டுகளுக்கு மட்டுமே வழங்கப்படும் - சென்னை உயர்நீதிமன்றம்

சுற்றுலா வாகனங்களுக்கான அகில இந்திய உரிமம் 8 ஆண்டுகளுக்கு மட்டுமே வழங்கப்படும் என்ற தமிழக போக்குவரத்து துறையின் முடிவில் தலையிட முடியாது சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திரைப்பட தயாரிப்பாளர் சங்க வழக்கு.. ஃபெப்சி உள்ளிட்ட திரைத்துறை சங்கங்கள் பதிலளிக்க உத்தரவு

படப்பிடிப்பு மற்றும் பட தயாரிப்பு பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க மறுப்பதை எதிர்த்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் தொடர்ந்த வழக்கில், ஃபெப்சி உள்ளிட்ட திரைத்துறை சங்கங்கள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பெகாசஸ் வழக்கு: சேதவிரோதிகள் செல்போனை ஒட்டுகேட்பதில் தவறில்லை - உச்சநீதிமன்றம்

தனிநபர்களின் உரிமையை பாதிக்காதவரை தேசத்தின் பாதுகாப்புக்காக மத்திய அரசு உளவு மென்பொருளை பயன்படுத்துவதில் தவறில்லை என பெகாசஸ் வழக்கில் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.