தனது முன்னாள் மேலாளர் விபின் குமாரை தாக்கியதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில், மலையாள நடிகர் உன்னி முகுந்தனுக்கு காக்கநாடு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. இந்த வழக்கில் அக்டோபர் 27-ஆம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகுமாறு அந்த சம்மனில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வழக்கின் பின்னணி
நடிகர் உன்னி முகுந்தனின் முன்னாள் மேலாளரான விபின் குமார், சமூக ஊடகத்தில் நடிகர் டொவினோ தாமஸின் 'நரிவேட்டா' என்ற திரைப்படத்தைப் பாராட்டி ஒரு பதிவை வெளியிட்டார்.
இந்த பதிவு உன்னி முகுந்தனுக்கு கோபத்தை ஏற்படுத்தியதாகவும், அதன் விளைவாக ஏற்பட்ட வாக்குவாதத்தின்போது, அவர் தன்னைத் தாக்கி, ஆபாசமான வார்த்தைகளால் திட்டியதாகவும் விபின் குமார் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, எர்ணாகுளம் மாவட்ட நீதிமன்றத்தில் உன்னி முகுந்தன் முன்ஜாமின் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். அப்போது, காவல்துறையினர் ஜாமின் பெறக்கூடிய பிரிவுகளின் கீழ் மட்டுமே வழக்குப்பதிவு செய்துள்ளதாக நீதிமன்றம் குறிப்பிட்டது. மேலும், காவல்துறை விசாரணையைத் தொடரலாம் என்றும் அனுமதி அளித்தது.
உன்னி முகுந்தனுக்கு சம்மன்
விபின் குமார், உன்னி முகுந்தனின் 'மார்கோ' திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறாததால் அவர் மன அழுத்தத்தில் இருந்ததாகவும், அதனால் தன்னைப்போன்றவர்களிடம் தனது விரக்தியைக் காட்டியதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்த வழக்கு தொடர்பான விசாரணையை காவல்துறை நடத்தி, நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்துள்ளது. அதன் தொடர்ச்சியாக, நீதிமன்றம் தற்போது உன்னி முகுந்தன் நேரில் ஆஜராகுமாறு உத்தரவிட்டுள்ளது.
பிரதமர் கதாபாத்திரத்தில் உன்னி முகுந்தன்
சமீபத்தில், 'மா வந்தே' என்ற புதிய திரைப்படத்தில் பிரதமர் நரேந்திர மோடி கதாபாத்திரத்தில் உன்னி முகுந்தன் நடிக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியானது. இந்த சூழலில், அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த விவகாரம் குறித்து உன்னி முகுந்தன் இதுவரை எந்தவிதமான அறிக்கையையும் வெளியிடவில்லை.
வழக்கின் பின்னணி
நடிகர் உன்னி முகுந்தனின் முன்னாள் மேலாளரான விபின் குமார், சமூக ஊடகத்தில் நடிகர் டொவினோ தாமஸின் 'நரிவேட்டா' என்ற திரைப்படத்தைப் பாராட்டி ஒரு பதிவை வெளியிட்டார்.
இந்த பதிவு உன்னி முகுந்தனுக்கு கோபத்தை ஏற்படுத்தியதாகவும், அதன் விளைவாக ஏற்பட்ட வாக்குவாதத்தின்போது, அவர் தன்னைத் தாக்கி, ஆபாசமான வார்த்தைகளால் திட்டியதாகவும் விபின் குமார் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, எர்ணாகுளம் மாவட்ட நீதிமன்றத்தில் உன்னி முகுந்தன் முன்ஜாமின் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். அப்போது, காவல்துறையினர் ஜாமின் பெறக்கூடிய பிரிவுகளின் கீழ் மட்டுமே வழக்குப்பதிவு செய்துள்ளதாக நீதிமன்றம் குறிப்பிட்டது. மேலும், காவல்துறை விசாரணையைத் தொடரலாம் என்றும் அனுமதி அளித்தது.
உன்னி முகுந்தனுக்கு சம்மன்
விபின் குமார், உன்னி முகுந்தனின் 'மார்கோ' திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறாததால் அவர் மன அழுத்தத்தில் இருந்ததாகவும், அதனால் தன்னைப்போன்றவர்களிடம் தனது விரக்தியைக் காட்டியதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்த வழக்கு தொடர்பான விசாரணையை காவல்துறை நடத்தி, நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்துள்ளது. அதன் தொடர்ச்சியாக, நீதிமன்றம் தற்போது உன்னி முகுந்தன் நேரில் ஆஜராகுமாறு உத்தரவிட்டுள்ளது.
பிரதமர் கதாபாத்திரத்தில் உன்னி முகுந்தன்
சமீபத்தில், 'மா வந்தே' என்ற புதிய திரைப்படத்தில் பிரதமர் நரேந்திர மோடி கதாபாத்திரத்தில் உன்னி முகுந்தன் நடிக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியானது. இந்த சூழலில், அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த விவகாரம் குறித்து உன்னி முகுந்தன் இதுவரை எந்தவிதமான அறிக்கையையும் வெளியிடவில்லை.