சென்னை காவல்துறையினர் அந்த குற்றச்சாட்டுகளை நிரூபிக்கும் வகையில் கொகைன் போதைப்பொருள் பார்ட்டிகளில் பயன்படுத்திய நடிகர் ஸ்ரீகாந்த்தை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். நடிகர் ஸ்ரீகாந்த் 2002 ஆம் ஆண்டு வெளியான "ரோஜாக் கூட்டம்" படத்தின் தமிழ் திரை உலகிற்கு அறிமுகமானார். இந்த படத்திற்கு முன்பே மாடலிங் மூலம் பிரபலமானார்.
பெண்ணை ஏமாற்றியதாக சர்ச்சை
அந்த படத்தின் மூலம் தமிழக அரசின் சிறந்த அறிமுக நடிகருக்கான விருதை பெற்றவர் தான் இந்த ஸ்ரீகாந்த். இதற்கு அடுத்து வெளியான படங்கள் பெரிய அளவில் வெற்றியை கொடுக்காவிட்டாலும் ஸ்ரீகாந்த் பலருக்கு பரீட்சையமானவரானார். இதையடுத்து தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்து பிரபலமானார்.
இயக்குனர் செல்வராகன் இயக்கத்தில் தெலுங்கு வெர்சனான "யாரடி நீ மோகினி" (ஆடவரி மாதலகு அர்த்தலே வெருலே) 2வது ஹீரோவாக ஸ்ரீகாந்த் நடித்தார். இதையடுத்து தமிழில் வாய்ப்பு குறைய ஆரம்பித்தது. இந்த நிலையில் 2007ஆம் ஆண்டு எம்பிஏ பட்டதாரியான வந்தனா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றியதாக காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டு தொடர் பரபரப்பு செய்தியானது.
பிரசாத்துடன் பழக்கம்
இதன் பிறகு வந்தனாவையே திருமணம் செய்து கொண்டார். 2 குழந்தைகள். திருமண சர்ச்சையால் அவருக்கு படவாய்ப்புகள் வெகுவாக குறைந்தது. இந்த நிலையில் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் "நண்பன்" படத்தில் நடித்தார் ஸ்ரீகாந்த். ஆனால் அதன் பிறகும் வாய்ப்புகள் இல்லை. அதனால் தெலுங்கு படங்களிலும் வெப் சீரிஸ்லும் நடித்து வருகிறார்.
18 ஆண்டுகளுக்கு முன்பே சர்ச்சையில் சிக்கிய ஸ்ரீகாந்த் தற்போது போதைப்பொருள் வழக்கில் வசமாக சிக்கி சிறைக்குள் சென்று விட்டார். தமிழ் திரை உலகில் மீண்டும் ஒரு ரவுண்ட் வர வேண்டும் என்ற நோக்கில் ஸ்ரீகாந்த் புது கதைகளை தேர்வு செய்து நடித்து விடலாம் என்ற சமயத்தில் தான் முன்னாள் அதிமுக பிரமுகர் பிரசாத்துடன் பழக்கம் ஏற்பட்டதாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.
தீக்கிரை படத்தால் வந்த வினை
தான் இணை தயாரிப்பாளர் என அறிமுகப்படுத்திக் கொண்டு ஸ்ரீகாந்திடம் பிரசாத் நட்பை வைத்து கொண்டதாக தெரிகிறது. பிறகு தான் "தீங்கிரை" என்ற படத்தை தயாரிக்க உள்ளதாகவும் ஹீரோவாக நடிக்க வேண்டும் எனவும் ஸ்ரீகாந்த்திடம் சம்மதிக்க வைத்ததாக தெரிகிறது. படத்தின் வேலைகளை தொடங்குவதற்கு முன்பாக சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் பண்ணை வீட்டில் "தீங்கிரை" படம் தொடங்குவதற்கான மது விருந்து நிகழ்ச்சி நடந்ததாக கூறப்படுகிறது.
அதில் கலந்து கொண்ட நடிகர் ஸ்ரீகாந்த்திற்கு பிரசாத் அங்கு தான் முதல் முறையாக போதைப்பொருள் கொடுத்ததாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. இதன் பிறகே அடிக்கடி கொகைன் போதைப்பொருளை ஸ்ரீகாந்திற்கு கொடுத்து அவரை சிக்க வைத்தது பிரசாத் என்பது போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.
ஒரு நாள் பழக்கத்தால் இந்த நிலைமை
இந்த போதைப்பொருளுக்கு அடிமையான தன்னை கொகைனை காட்டியே பிரசாத் காரியம் சாதித்து கொண்டதாகவும் ஒரு நாள் பழக்கத்தால் தான் இந்த நிலைமைக்கு தள்ளப்பட்டு விட்டதாகவும் போலீஸ் விசாரணையின் போது வேதனையோடு நடிகர் ஸ்ரீகாந்த் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. "தீங்கிரை" படத்தால் தற்போது போதைக்கு இரையாகி சிறைக்குள் சென்றுள்ளார் நடிகர் ஸ்ரீகாந்த் என்று திரையுலகினர் சிலர் வேதனையோடு சொல்கின்றனர்.
பெண்ணை ஏமாற்றியதாக சர்ச்சை
அந்த படத்தின் மூலம் தமிழக அரசின் சிறந்த அறிமுக நடிகருக்கான விருதை பெற்றவர் தான் இந்த ஸ்ரீகாந்த். இதற்கு அடுத்து வெளியான படங்கள் பெரிய அளவில் வெற்றியை கொடுக்காவிட்டாலும் ஸ்ரீகாந்த் பலருக்கு பரீட்சையமானவரானார். இதையடுத்து தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்து பிரபலமானார்.
இயக்குனர் செல்வராகன் இயக்கத்தில் தெலுங்கு வெர்சனான "யாரடி நீ மோகினி" (ஆடவரி மாதலகு அர்த்தலே வெருலே) 2வது ஹீரோவாக ஸ்ரீகாந்த் நடித்தார். இதையடுத்து தமிழில் வாய்ப்பு குறைய ஆரம்பித்தது. இந்த நிலையில் 2007ஆம் ஆண்டு எம்பிஏ பட்டதாரியான வந்தனா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றியதாக காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டு தொடர் பரபரப்பு செய்தியானது.
பிரசாத்துடன் பழக்கம்
இதன் பிறகு வந்தனாவையே திருமணம் செய்து கொண்டார். 2 குழந்தைகள். திருமண சர்ச்சையால் அவருக்கு படவாய்ப்புகள் வெகுவாக குறைந்தது. இந்த நிலையில் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் "நண்பன்" படத்தில் நடித்தார் ஸ்ரீகாந்த். ஆனால் அதன் பிறகும் வாய்ப்புகள் இல்லை. அதனால் தெலுங்கு படங்களிலும் வெப் சீரிஸ்லும் நடித்து வருகிறார்.
18 ஆண்டுகளுக்கு முன்பே சர்ச்சையில் சிக்கிய ஸ்ரீகாந்த் தற்போது போதைப்பொருள் வழக்கில் வசமாக சிக்கி சிறைக்குள் சென்று விட்டார். தமிழ் திரை உலகில் மீண்டும் ஒரு ரவுண்ட் வர வேண்டும் என்ற நோக்கில் ஸ்ரீகாந்த் புது கதைகளை தேர்வு செய்து நடித்து விடலாம் என்ற சமயத்தில் தான் முன்னாள் அதிமுக பிரமுகர் பிரசாத்துடன் பழக்கம் ஏற்பட்டதாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.
தீக்கிரை படத்தால் வந்த வினை
தான் இணை தயாரிப்பாளர் என அறிமுகப்படுத்திக் கொண்டு ஸ்ரீகாந்திடம் பிரசாத் நட்பை வைத்து கொண்டதாக தெரிகிறது. பிறகு தான் "தீங்கிரை" என்ற படத்தை தயாரிக்க உள்ளதாகவும் ஹீரோவாக நடிக்க வேண்டும் எனவும் ஸ்ரீகாந்த்திடம் சம்மதிக்க வைத்ததாக தெரிகிறது. படத்தின் வேலைகளை தொடங்குவதற்கு முன்பாக சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் பண்ணை வீட்டில் "தீங்கிரை" படம் தொடங்குவதற்கான மது விருந்து நிகழ்ச்சி நடந்ததாக கூறப்படுகிறது.
அதில் கலந்து கொண்ட நடிகர் ஸ்ரீகாந்த்திற்கு பிரசாத் அங்கு தான் முதல் முறையாக போதைப்பொருள் கொடுத்ததாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. இதன் பிறகே அடிக்கடி கொகைன் போதைப்பொருளை ஸ்ரீகாந்திற்கு கொடுத்து அவரை சிக்க வைத்தது பிரசாத் என்பது போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.
ஒரு நாள் பழக்கத்தால் இந்த நிலைமை
இந்த போதைப்பொருளுக்கு அடிமையான தன்னை கொகைனை காட்டியே பிரசாத் காரியம் சாதித்து கொண்டதாகவும் ஒரு நாள் பழக்கத்தால் தான் இந்த நிலைமைக்கு தள்ளப்பட்டு விட்டதாகவும் போலீஸ் விசாரணையின் போது வேதனையோடு நடிகர் ஸ்ரீகாந்த் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. "தீங்கிரை" படத்தால் தற்போது போதைக்கு இரையாகி சிறைக்குள் சென்றுள்ளார் நடிகர் ஸ்ரீகாந்த் என்று திரையுலகினர் சிலர் வேதனையோடு சொல்கின்றனர்.