திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த விக்னேஷ் என்பவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் அமேசான் செயலியில் பிரைம் மெம்பர்ஷிப் வாடிக்கையாளராக இருந்து வருகிறார்.
இந்த நிலையில், அவர் கடந்த 11 ஆம் தேதி ரூ.35,150க்கு விவோ செல்போன் ஒன்றை ஆர்டர் செய்துள்ளார். இந்த செல்போனை கடந்த 16ஆம் தேதி மோகன் என்பர் டெலிவரி செய்ய வந்துள்ளார். அந்த பார்சலை ஊழியர் முன்பு விக்னேஷ் திறந்து பார்த்த போது செல்போனுக்கு பதிலாக சென்ட் பாட்டில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இது குறித்து ஊழியரிடம் விக்னேஷ் முறையிட்ட போது, நாங்கள் மாற்றமுடியாது அமேசான் மேலதிகாரியிடம் விசாரித்துக் கொள்ளுங்கள் என கூறி ஊழியர் ஒருவரின் செல்போன் நபரை கொடுத்துவிட்டு சென்றதாக தெரிகிறது. இதையடுத்து, அமேசான் நிறுவனத்தில் விக்னேஷ் புகார் அளித்துள்ளார். மேலும், அந்நிறுவனத்தின் மேல் அதிகாரியான சரவணன் என்பவரிடம் விக்னேஷ் பேசிய போது 21ஆம் தேதி செல்போன் டெலிவரி செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.
பின்னர் கடந்த 20 ஆம் தேதி விக்னேஷ் போன் செய்து விசாரித்த போது, தங்களால் மாற்ற முடியாது என அமேசான் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், செல்போன் வரவில்லை என்றால் போலீசாரிடம் புகார் அளிப்பேன் என விக்னேஷ் கூறியதற்கு அந்த அதிகாரி ஆபாசமாக பேசி எதை வேண்டுமானாலும் பார்த்து கொள்ளுங்கள் என மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதனால், தான் ஆர்டர் செய்த செல்போனுக்கு உண்டான 35,150 பணத்தை பெற்று கொடுக்குமாறு டிஜிபி அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட விக்னேஷ் சிசிடிவி ஆதாரங்களுடன் புகார் அளித்துள்ளார். தன்னை ஏமாற்றிய அமேசான் நிறுவனம் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை பெற்றுக்கொடுக்க வேண்டும் என விக்னேஷ் கோரிக்கை வைத்துள்ளார். மேலும், பார்சல் செய்த டெலிவரி ஊழியர் உட்பட அனைவர் மீதும் சந்தேகம் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், அவர் கடந்த 11 ஆம் தேதி ரூ.35,150க்கு விவோ செல்போன் ஒன்றை ஆர்டர் செய்துள்ளார். இந்த செல்போனை கடந்த 16ஆம் தேதி மோகன் என்பர் டெலிவரி செய்ய வந்துள்ளார். அந்த பார்சலை ஊழியர் முன்பு விக்னேஷ் திறந்து பார்த்த போது செல்போனுக்கு பதிலாக சென்ட் பாட்டில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இது குறித்து ஊழியரிடம் விக்னேஷ் முறையிட்ட போது, நாங்கள் மாற்றமுடியாது அமேசான் மேலதிகாரியிடம் விசாரித்துக் கொள்ளுங்கள் என கூறி ஊழியர் ஒருவரின் செல்போன் நபரை கொடுத்துவிட்டு சென்றதாக தெரிகிறது. இதையடுத்து, அமேசான் நிறுவனத்தில் விக்னேஷ் புகார் அளித்துள்ளார். மேலும், அந்நிறுவனத்தின் மேல் அதிகாரியான சரவணன் என்பவரிடம் விக்னேஷ் பேசிய போது 21ஆம் தேதி செல்போன் டெலிவரி செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.
பின்னர் கடந்த 20 ஆம் தேதி விக்னேஷ் போன் செய்து விசாரித்த போது, தங்களால் மாற்ற முடியாது என அமேசான் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், செல்போன் வரவில்லை என்றால் போலீசாரிடம் புகார் அளிப்பேன் என விக்னேஷ் கூறியதற்கு அந்த அதிகாரி ஆபாசமாக பேசி எதை வேண்டுமானாலும் பார்த்து கொள்ளுங்கள் என மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதனால், தான் ஆர்டர் செய்த செல்போனுக்கு உண்டான 35,150 பணத்தை பெற்று கொடுக்குமாறு டிஜிபி அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட விக்னேஷ் சிசிடிவி ஆதாரங்களுடன் புகார் அளித்துள்ளார். தன்னை ஏமாற்றிய அமேசான் நிறுவனம் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை பெற்றுக்கொடுக்க வேண்டும் என விக்னேஷ் கோரிக்கை வைத்துள்ளார். மேலும், பார்சல் செய்த டெலிவரி ஊழியர் உட்பட அனைவர் மீதும் சந்தேகம் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.