K U M U D A M   N E W S

Complaint

அடுத்தடுத்த புகார்களில் சிக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்.. திருமண மோசடி வரிசையில் டெண்டர் முறைகேடு!

திருமண மோசடி புகாரில் சிக்கி உள்ள நடிகரும், பிரபல சமையல் கலைஞருமான மாதம்பட்டி ரங்கராஜ் மீது முதல்வர் தனிப்பிரிவில் புதிய ஒன்று அளிக்கப்பட்டுள்ளது.

27 சவரன் நகை கொள்ளை.. போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் குற்றச்சாட்டு!

திருப்பத்தூர் மாவட்டம் தோரணம்பதியில், கூலித் தொழிலாளி மோகன் வீட்டில் வைத்திருந்த 27 சவரன் நகை மற்றும் ரூ. 50 ஆயிரம் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. வீட்டின் சாவியை வெளியே மறைத்து வைப்பதை நோட்டமிட்டு மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.

சீமான் - விஜயலட்சுமி வழக்கு: இருவரும் பரஸ்பரம் மன்னிப்புக் கோரிய நிலையில் வழக்கை முடித்து வைத்த உச்ச நீதிமன்றம்!

நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி தொடர்ந்த திருமண மோசடி வழக்கில், இரு தரப்பினரும் பரஸ்பரம் மன்னிப்புக் கோரி சமரசம் செய்துகொண்டனர். இதையடுத்து, உச்ச நீதிமன்றம் வழக்கை இன்று (அக். 8) முடித்து வைத்து உத்தரவிட்டது.

Chennai | இந்தியன் வங்கி நிர்வாகம் மீது முதியவர் போலீஸில் புகார் | Kumudam News

Chennai | இந்தியன் வங்கி நிர்வாகம் மீது முதியவர் போலீஸில் புகார் | Kumudam News

கோவைப் பெரிய கடை வீதியில் நடுரோட்டில் தள்ளுவண்டி கடை: போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி!

கோவைப் பெரிய கடை வீதியில், சாலையின் நடுவே தள்ளுவண்டிக் கடை ஆக்கிரமிப்பால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. 'நோ பார்க்கிங்' விதிமீறலுக்கு அபராதம் விதிக்கும் காவல்துறை, சாலையை மறித்துக் கடை அமைப்பவருக்கு மட்டும் எப்படி அனுமதி எனக் பொதுமக்கள் சிசிடிவி காட்சிகளுடன் புகார் அளித்துள்ளனர்.

விஜய்க்கு எதிராகப் போஸ்டர் ஒட்டிய இளைஞர் தற்கொலை: த.வெ.க. நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு!

கரூர் கூட்ட நெரிசலைக் கண்டித்து போஸ்டர் ஒட்டிய நாகப்பட்டினத்தைச் சேர்ந்த பரத்வாஜ் என்பவர் தற்கொலை செய்துகொண்டார். தன்னை மிரட்டிய திவாகர் உள்ளிட்ட 4 தவெக நிர்வாகிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கோவையில் பாலியல் வன்கொடுமை புகார்: நடவடிக்கை எடுக்காமல் அலைக்கழிப்பு எனப் பெண் வேதனை!

கோவையில் உடற்பயிற்சிக் கூடத்தில் பழக்கமான கிஷோர் என்பவர் திருமணம் செய்வதாகக் கூறிப் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்கக் காவல்துறை அலைக்கழிப்பதாகவும் கூறிப் பாதிக்கப்பட்ட பெண் ஆணையாளர் அலுவலகத்தில் மனு அளித்தார்.

திருமண மோசடி புகார்: மாதம்பட்டி ரங்கராஜ் ஆஜராக அவகாசம்?

திருமண மோசடி புகாரில் மாதம்பட்டி ரங்கராஜ் விசாரணைக்கு ஆஜராக அவகாசம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது

ஆன்லைன் டிரேடிங்: மூதாட்டியிடம் ரூ.2.49 கோடி மோசடி...2 பேர் கைது

ஆன்லைன் டிரேடிங் மூலம் மூதாட்டியிடம் ரூ.2.49 கோடி மோசடி செய்த வழக்கில் 2 பேர் கைது

காவலாளி வங்கி கணக்கில் பல கோடி பணம் பரிவர்த்தனை – அமலாக்கத்துறை 10 மணி நேரம் சோதனை

ஆம்பூரில் காவலாளியாக இருந்து ஓய்வு பெற்றவரின் வங்கி கணக்கில் பலகோடி ரூபாய் பண பரிவர்த்தனை செய்யப்பட்டது தொடர்பாக அவரது வீட்டில் சுமார் 10 மணி நேரத்திற்கும் மேலாக சோதனை நடத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள்

டெல்லி சாமியார் பாலியல் சீண்டல்: "என் அறைக்கு வா, உன்னை வெளிநாட்டுக்கு அழைத்து செல்கிறேன்!"

சாமியார் சைதன்யானந்தா பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களை குறிவைத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.

மாதம்பட்டி ரங்கராஜுக்கு போலீசார் சம்மன்

வருகிற 26ஆம் தேதி நீலாங்கரை காவல் நிலையத்தில் மாதம்பட்டி ரங்கராஜு விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பட்டுள்ளதாக தகவல்

விருத்தாசலத்தில் அதிகாரிகள் முறைகேடு புகார் – 3 லட்சத்தை ஏமாந்து நிற்கு மூட்டை தூக்கும் தொழிலாளி

அதிகாரிகள் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர் புகார்

ஜிஎஸ்டி குறைப்பு: வரிக்குறைப்பு சலுகையைத் தராத நிறுவனங்கள் மீது புகார் அளிக்கச் சிறப்பு ஏற்பாடு!

மத்திய அரசின் ஜிஎஸ்டி வரிக்குறைப்பின் பலனை நுகர்வோருக்கு அளிக்காத நிறுவனங்கள் மீது, 1915 என்ற இலவச எண் மற்றும் தேசிய நுகர்வோர் குறைதீர் போர்ட்டல் மூலம் புகார் அளிக்க மத்திய அரசு சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது.

மேட்ரிமோனியால் மூலம் பழக்கம் – பெண்ணிடம் நகை திருடிய நபர் கைது

மேட்ரிமோனி மூலமாக பழக்கமான நபர் 2 சவரன் தங்கச் செயினை திருடி கொண்டு தப்பிச்சென்ற வழக்கில் போலீசார் கைது செய்து விசாரணை

யூடியூப்பர் சவுக்கு சங்கர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்- டிஜிபி அலுவலகத்தில் புகார்

நடிகை விஜயலட்சுமி- சீமான் விவகாரத்தில் தன் மீது அவதூறு பரப்பும் யூடியூப்பர் சவுக்கு சங்கர் மீது நடவடிக்கை எடுக்ககோரி தமிழர் முன்னேற்றப் படை தலைவர் வீரலட்சுமி டிஜிபி அலுவலகத்தில் புகார்

சாலையை ஆக்கிரமித்து நெல் பயிரிட்ட விசிக பிரமுகர்கள்: பொதுமக்கள் ஆத்திரம் - மாவட்ட ஆட்சியரிடம் பரபரப்புப் புகார்!

60 ஆண்டுகளாகப் பயன்படுத்திய சாலையை மூடியதால் கிராம மக்கள் அவதியடைந்துள்ளனர். நடவடிக்கை எடுக்காவிட்டால் ஆதார் அட்டைகளை ஒப்படைப்போம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஓய்வு பெற்ற அரசு அதிகாரியிடம் கோடிக்கணக்கில் மோசடி செய்த கும்பல்- இறந்தது போன்று வீடியோ எடுத்து நாடகமாடியது அம்பலம்

திருமண நாடகமாடி இரண்டரை கோடி மதிப்புள்ள சொத்துக்களை அபகரித்ததாக ஓய்வு பெற்ற அரசு அதிகாரி குற்றச்சாட்டு

சென்னையில் நகைக்கடையில் வருமானவரித்துறை சோதனை

சென்னையில் நகைக்கடை உள்ளிட்ட இடங்களில் வருமானவரித்துறை சோதனை நடத்தி வருகின்றனர்

பிரதமர் குறித்த காட்சியால் சிக்கல்- நடிகர் KPY பாலா மீது பரபரப்பு புகார்

நடிகர் கேபிஒய் பாலா, இயக்குனர் மீது நடவடிக்கை எடுக்க சிவசேனா கட்சியினர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்

நாஞ்சில் விஜயன் மீது அளித்த புகார் வாபஸ்: சமரசமான திருநங்கை நடிகை!

சின்னத்திரை நடிகர் நாஞ்சில் விஜயன் மீது கொடுத்த புகாரை திருநங்கை நடிகை வாபஸ் பெற்றுள்ளார்.

அண்ணாமலை மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.. சமூக ஆர்வலர் புகார்!

அண்ணாமலை தனது வருமானத்திற்கு மீறி சொத்து சேர்த்து வைத்திருப்பதோடு, நிதி மோசடியிலும் ஈடுபட்டிருக்கிறார்" என்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் சமூக ஆர்வலர் ஒருவர் புகார் அளித்துள்ளார்.

மேயர் பிரியா, அமைச்சர் சேகர்பாபு அவதூறு வீடியோ: பாஜக, தவெக ரசிகர்கள் மீது வழக்கு!

சென்னை மேயர் பிரியா மற்றும் அமைச்சர் சேகர்பாபு குறித்து அவதூறாகச் சித்தரித்து வீடியோ வெளியிட்ட விவகாரத்தில், புகார் அளித்த தமிழர் முன்னேற்றப் படை கட்சியின் தலைவர் வீரலட்சுமி போலீசாரிடம் சாட்சியங்களை அளித்தார்.

கோவை அரசு மருத்துவமனை மீது சிகிச்சை அலட்சியம் புகார்: முதல்வர் தனிப்பிரிவுக்கு நோட்டீஸ் - மருத்துவமனை முதல்வர் விளக்கம்!

கோவை அரசு மருத்துவமனையில் தனது தந்தைக்கு உரிய சிகிச்சை அளிக்கவில்லை எனவும் கிரிஸ்டல் ஊழியர்கள் லஞ்சம் கேட்பதாக முதலமைச்சரின் தனிப்பிரிவில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மேயர் பிரியாவுக்கு எதிராக ஆபாச வீடியோக்கள்: போலீசில் பரபரப்பு புகார்!

சென்னை மேயர் பிரியாவுக்கு எதிராக அவதூறு வீடியோக்களுக்குப் பின் பாஜக, நாம் தமிழர், தமிழக வெற்றிக் கழகத்தினர் என குற்றச்சாட்டு; காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் வீரலட்சுமி புகார் அளித்துள்ளார்.