K U M U D A M   N E W S

போலீசார்

ஆளுநர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல்

கிண்டி போலீசார் வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள், மோப்பநாய் பிரிவினர் உதவியுடன் ஆளுநர் மாளிகைக்கு உள்ளே சென்று சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னையில் நகை வியாபாரி கடத்தல்.. ரூ.31 லட்சம் நகைகள் மற்றும் பணம் கொள்ளை!

சென்னையில் நகை வியாபாரியை கடத்திச் சென்று ரூ. 31 லட்சம், தங்க, வெள்ளி நகைகளை கொள்ளையடித்துச் சென்ற கும்பல் கைது செய்யப்பட்டுள்ளனர். நம்பர் ப்ளேட்டை மாற்றி, வாகனத்தில் HEALTH டிப்பார்ட்மண்ட் ஸ்டிக்கர் வைத்து கொள்ளையடிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளதாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

விஷ்ணு மற்றும் அஸ்மிதா மீது பங்குச்சந்தை மோசடி வழக்கு – மத்திய குற்றப்பிரிவு நடவடிக்கை!

பிரபல இன்ஸ்டாகிராம் பிரபலம் விஷ்ணு மற்றும் அவரது மனைவி, மேக்கப் ஆர்ட்டிஸ்ட் அஸ்மிதா ஆகியோர் ஆன்லைன் பங்குச்சந்தை மோசடியில் ஈடுபட்டதாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கு.. நடிகர் கிருஷ்ணாவை பிடிக்க 5 தனிப்படைகள் அமைப்பு

கிருஷ்ணாவின் செல்போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ள நிலையில் தனிப்படைகள் அமைத்து தேடிவந்த காவல்துறையினர் சைபர் கிரைம் நிபுணர்களுடன் அவரது இருப்பிடத்தை கண்டறியும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பூ செடிகளுக்கு நடுவே கஞ்சா செடி வளர்த்த விவசாயி கைது!

கொடைரோடு அருகே மாவூத்தான் பட்டியில், வீட்டு தோட்டத்தில் உள்ள பூச்செடிகளுக்கிடையே மறைவாக கஞ்சா செடி வளர்த்து வந்த விவசாயியை குற்றப்பிரிவு தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தொண்டர் பலி.. ஜெகன்மோகன் ரெட்டி மீது வழக்கு பதிவு

ஜெகன் மோகன் ரெட்டி சென்ற காருக்கு அடியில் சிக்கிய நபர் உயிரிழந்தது தொடர்பாக ஆந்திரப் பிரதேச முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி உள்ளிட்ட 6 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மோசடி கும்பலிடம் சிக்கிய மேற்கு வங்க நபர்.. காப்பாற்றிய தமிழக சைபர் கிரைம் போலீசார்!

சீனர்கள் கட்டுப்பாட்டில் உள்ள வங்கி கணக்குகளை ஆய்வு செய்த போது, மோசடி கும்பலிடம் சிக்கிய மேற்கு வங்கத்தை சேர்ந்தவரை தமிழக சைபர் கிரைம் போலீசார் காப்பாற்றியுள்ளனர்.

வாகன விபத்து: சிறுமி மீது ஏறி இறங்கிய லாரி.. தாய் கண்முன்னே உயிரிழந்த மகள்!

தாயுடன் இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு சென்ற 10 வயது சிறுமி மீது, தண்ணீர் லாரி மோதியதில் சம்பவ இடத்திலேய பரிதாமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மதிமுக அலுவலத்தில் தாக்குதல்.. மர்ம நபரை பிடித்து போலீசார் விசாரணை

தீயணைப்புத்துறை வீரர் என்று கூறி மதிமுக அலுவலகத்திற்குள் சென்று பொருட்களை சேதப்படுத்திய மர்ம நபரை பிடித்து எழும்பூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பிரபல தனியார் வங்கியில் ரூ. 4.36 கோடி மோசடி: நிர்வாக இயக்குனர், மேலாளர் மீதுவழக்குப்பதிவு..!

பிரபல தனியார் வங்கியில், வைப்பு நிதியாக வைக்கப்பட்ட ரூ. 4.36 கோடி அமெரிக்க வாழ் இந்தியர்கள் பணத்தை மோசடி செய்த விவகாரம் தொடர்பாக, வங்கி நிர்வாக இயக்குனர் மற்றும் வங்கி மேலாளர் மீது மோசடி வழக்குப்பதிவு செய்து, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.