தற்கொலைக்கு முயன்ற இளம்பெண்
சென்னை மதுரவாயல் ஜானகி நகர் 4வது தெருவை சேர்ந்தவர் மைக்கேல் ராஜ். இவரது மகள் ஏஞ்சல்கெல்சியா(23), அம்பத்தூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு வேலை முடித்து விட்டு வீட்டிற்கு வந்தவர் அறையில் மயங்கிய நிலையில் இருந்ததாகவும், இவரது சகோதரர் கல்லூரி முடித்து விட்டு வீட்டிற்கு வந்து பார்த்தபோது ஏஞ்சல்கெல்சியா மயங்கிய நிலையில் உள்ளார். மேலும் பாத்ரூம் கழுவும் ஆசிட் பாட்டில் திறந்து இருப்பதை பார்த்து கேட்டபோது, ஆசிட்டை குடித்து விட்டதாக கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்து சகோதரி ஏஞ்சல் கெல்சியாவை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர்.
அங்கு அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து மதுரவாயல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஏஞ்சல் கெல்சியாவிடம் விசாரணை மேற்கொண்டனர்.
போலீஸ் விசாரணை
விசாரணையில் வேலைக்கு சென்ற ஏஞ்சல்கெல்சியா ஆவடி அருகே சென்றபோது அவரது இரு சக்கர வாகனத்தை போக்குவரத்து போலீசார் மடக்கி சோதனை செய்துள்ளனர்.அப்போது உரிய ஆவணங்கள் இல்லாததால் வாகனத்தை வாங்கி வைத்துக்கொண்டதாகவும், உரிய ஆவணங்களை காண்பித்து விட்டு இரு சக்கர வாகனத்தை வாங்கி செல்லுமாறு சொன்னதாக கூறப்படுகிறது.
இதையடுத்து அங்கிருந்து அரசு பேருந்தில் வீட்டிற்கு வந்த ஏஞ்சல்கெல்சியா பாத்ரூம் கழுவும் ஆசிட்டை குடித்து தற்கொலைக்கு முயன்றது தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது. இளம்பெண் தற்கொலைக்கு முயன்ற விவகாரத்தில் வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை மதுரவாயல் ஜானகி நகர் 4வது தெருவை சேர்ந்தவர் மைக்கேல் ராஜ். இவரது மகள் ஏஞ்சல்கெல்சியா(23), அம்பத்தூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு வேலை முடித்து விட்டு வீட்டிற்கு வந்தவர் அறையில் மயங்கிய நிலையில் இருந்ததாகவும், இவரது சகோதரர் கல்லூரி முடித்து விட்டு வீட்டிற்கு வந்து பார்த்தபோது ஏஞ்சல்கெல்சியா மயங்கிய நிலையில் உள்ளார். மேலும் பாத்ரூம் கழுவும் ஆசிட் பாட்டில் திறந்து இருப்பதை பார்த்து கேட்டபோது, ஆசிட்டை குடித்து விட்டதாக கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்து சகோதரி ஏஞ்சல் கெல்சியாவை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர்.
அங்கு அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து மதுரவாயல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஏஞ்சல் கெல்சியாவிடம் விசாரணை மேற்கொண்டனர்.
போலீஸ் விசாரணை
விசாரணையில் வேலைக்கு சென்ற ஏஞ்சல்கெல்சியா ஆவடி அருகே சென்றபோது அவரது இரு சக்கர வாகனத்தை போக்குவரத்து போலீசார் மடக்கி சோதனை செய்துள்ளனர்.அப்போது உரிய ஆவணங்கள் இல்லாததால் வாகனத்தை வாங்கி வைத்துக்கொண்டதாகவும், உரிய ஆவணங்களை காண்பித்து விட்டு இரு சக்கர வாகனத்தை வாங்கி செல்லுமாறு சொன்னதாக கூறப்படுகிறது.
இதையடுத்து அங்கிருந்து அரசு பேருந்தில் வீட்டிற்கு வந்த ஏஞ்சல்கெல்சியா பாத்ரூம் கழுவும் ஆசிட்டை குடித்து தற்கொலைக்கு முயன்றது தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது. இளம்பெண் தற்கொலைக்கு முயன்ற விவகாரத்தில் வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.