தமிழக வெற்றி கழக தலைவர் விஜய், கோவையில் 2 நாட்கள் நடைபெறும் வாக்குச்சாவடி முகவர்களுக்கான மாநாட்டில் பங்கேற்பதற்காக நேற்று (ஏப்.26) சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் நேற்று கோவை வந்தடைந்தார்.. கோவை விமான நிலையத்தில் அவரை வரவேற்க ஏராளமான தொண்டர்கள் திரண்டிருந்தனர். இதனால் விமான நிலையத்திற்கு வந்த பயணிகளுக்கு இடையூறு ஏற்பட்டது. மேலும் விமான நிலைய வளாகத்தில் இருந்த பொருட்கள் சேதப்படுத்தப்பட்டது.
சாலையில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக விஜயை பார்க்க வந்த வாகன ஓட்டிகள் சென்றதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தாறுமாறாக வாகனங்கள் சென்றதால், பொதுமக்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கோவை பீளமேடு காவல் நிலையத்தில் தமிழக வெற்றி கழக கட்சியினர் மீது 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோவை மாநகர் மாவட்ட செயலாளர் சம்பத் உள்ளிட்ட சிலர் மீது வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், மொத்தம் 133 வாகனங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகையினை முன்னிட்டு அந்தப் பகுதியில் திமுகவினர் வைத்திருந்த இருந்த திமுக கொடியினை சேதப்படுத்தியதாகவும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக கோவைகாளப்பட்டி பகுதியை சேர்ந்த விக்னேஷ் என்பவர் பீளமேடு போலீஸ் நிலையத்தில் புகார் செய்திருந்தார். அதன் பேரில், தவெக கட்சி நிர்வாகிகளான திண்டுக்கல் செல்லமுத்து மற்றும் ஒட்டன்சத்திரம் மனோஜ்குமார் மீது 2 பிரிவுகளில் பீளமேடு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
சாலையில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக விஜயை பார்க்க வந்த வாகன ஓட்டிகள் சென்றதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தாறுமாறாக வாகனங்கள் சென்றதால், பொதுமக்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கோவை பீளமேடு காவல் நிலையத்தில் தமிழக வெற்றி கழக கட்சியினர் மீது 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோவை மாநகர் மாவட்ட செயலாளர் சம்பத் உள்ளிட்ட சிலர் மீது வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், மொத்தம் 133 வாகனங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகையினை முன்னிட்டு அந்தப் பகுதியில் திமுகவினர் வைத்திருந்த இருந்த திமுக கொடியினை சேதப்படுத்தியதாகவும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக கோவைகாளப்பட்டி பகுதியை சேர்ந்த விக்னேஷ் என்பவர் பீளமேடு போலீஸ் நிலையத்தில் புகார் செய்திருந்தார். அதன் பேரில், தவெக கட்சி நிர்வாகிகளான திண்டுக்கல் செல்லமுத்து மற்றும் ஒட்டன்சத்திரம் மனோஜ்குமார் மீது 2 பிரிவுகளில் பீளமேடு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.