K U M U D A M   N E W S

கோவை

பட்டீசுவரர் கோவிலில் நாற்று நடவு திருவிழா கோலாகலம்.. பக்தர்கள் பங்கேற்பு!

பேரூரில் அமைந்துள்ள பட்டீசுவரர் கோவிலில் நாற்று நடவு திருவிழா நடைபெற்ற நிலையில், இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கோவிலில் இருந்த சிவலிங்கம் சிலை உடைப்பு..இந்து அமைப்பினர் கூடியதால் பரபரப்பு

இது குறித்து தகவல் அறிந்து துடியலூர் காவல் துறையினர் சம்பவ இடத்தில் தற்பொழுது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

லஞ்சம் கேட்டு மிரட்டும் உணவு பாதுகாப்பு அதிகாரி.. ஆடியோவுடன் வெளியான சி.சி.டி.வி காட்சிகள்..!

கோவையில் சிறு கடைகளில் லஞ்சம் கேட்டு மிரட்டும் உணவு பாதுகாப்பு அதிகாரிகளின் சி.சி.டி.வி காட்சிகள், பணம் கேட்கும் ஆடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வணிகர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தம்பியை கொலை செய்ய முயன்ற அண்ணன்... 7 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்த நீதிமன்றம்!

தம்பியை கொலை செய்ய முயன்ற அண்ணனுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டணையுடன், 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கபட்டுள்ளது. கொலை வெறித் தாக்குதலில் ஈடுபட்டது நீதிமன்றத்தில் நிரூபணமானதால், குற்றவாளிக்கு கடுங்காவல் தண்டணை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

கோவையில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்...விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டலால் பதற்றம்

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜநாத் சிங் கோவை வருகை தந்துள்ள நிலையில் விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை பேரூர் மடத்தில் ஆர்.எஸ்.எஸ் நூற்றாண்டு விழா.. மோகன் பகவத் பங்கேற்பு

கோவை பேரூர் மடத்தில் ஆர்.எஸ்.எஸ் நூற்றாண்டு விழா விழாவில் பேசிய ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத், நீரை சேமிக்க வேண்டும் பிளாஸ்டிக் பயன்பாட்டை முடிந்தவரை தவிர்க்க வேண்டும் அழிவிற்கு முன்பு நாம் பல்வேறு முன்னெடுப்புகளை நாம் முன்னெடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

கோவை கார் வெடிப்பு வழக்கு: அரபிக் கல்லூரி மாணவர்கள் குறியாக தீவிரவாத திட்டம்!

கோவை கார் குண்டுவெடிப்பில் வழக்கில், அரபிக் கல்லூரிக்கு வரும் மாணவர்களை குறி வைத்து தீவிரவாத செயலுக்கு பயன்படுத்த முயன்றது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

போதை மருந்து விற்பனை.. பணத்தில் கார், நகைகள் வாங்கி குவித்த பைனான்ஸ் அதிபர் கைது!

கோவையில் போதை மருந்து விற்பனை செய்த பணத்தில் கார், நகைகள் வாங்கி குவித்த பைனான்ஸ் அதிபர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோவைக்கு 30 மினி பஸ்கள்.. டிக்கெட் எவ்வளவு தெரியுமா?

கோவை மாவட்டத்தில் உள்ள 30 வழித் தடங்களில் 30 மினி பஸ்கள் சேவையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.

ஆர்ப்பரிக்கும் கோவை குற்றாலம்.. அருவியில் குளிக்க 23 வது நாளாகத் தொடரும் தடை..!

தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், கோவை குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனைத்தொடர்ந்து அருவியில் குளிக்க தொடர்ந்து 23வது நாளாக தடைவிதிக்கப்பட்டுள்ளது.

பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு....கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

பில்லூர் அணையின் பாதுகாப்பு கருதி வினாடிக்கு 14 ஆயிரம் கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுவதால் பவானியாற்றில் வெள்ளப்பெருக்கு; கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

ஷூவுக்குள் துப்பாக்கி தோட்டா...கோவை விமான நிலையத்தில் பரபரப்பு

ஷூவுக்குள் மறைத்து வைத்து கொண்டு எடுத்து வந்த துப்பாக்கி தோட்டாவை கோவை விமான நிலையத்தில் பறிமுதல் செய்து போலீஸ் விசாரணை

செல்போன் வாங்கி தர மறுத்த பெற்றோர்.. 11 ஆம் வகுப்பு மாணவனின் விபரீத முடிவு

செல்போன் வாங்கி தர பெற்றோர் மறுத்ததால், 11 ஆம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“கன்னட மொழி விரோதி கமல்ஹாசன்” –கோவையில் போஸ்டர் ஒட்டிய பாஜக

தமிழ் எங்கள் உயிர், கன்னடம் எங்கள் தாய்மொழி; கன்னட மொழி விரோதி கமல்ஹாசன் என கோவையில் பாஜக சார்பில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

விவசாயிகளுடன் வெங்காயம் நடவு செய்த கோவை கலெக்டர்!

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர் விவசாயிகளுடன் இணைந்து வெங்காயம் நடவு செய்தது அப்பகுதியில் பலரது கவனத்தையும், பாராட்டையும் பெற்றுள்ளது.

சிக்கன் குழம்பில் பல்லி.. உணவகத்தில் நாடகமாடிய 4 பேருக்கு போலீசார் வலை

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் இயங்கிவரும் உணவகத்தில் பரிமாறப்பட்ட சிக்கன் குழம்பில் பல்லி கிடந்ததாக நாடகமாடிய 4 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

டி.என்.பி.எல் கிரிக்கெட் போட்டி இன்று தொடக்கம்.. முதல் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் - கோவை கிங்ஸ் மோதல்

8 அணிகள் பங்கேற்கும் டி.என்.பி.எல் கிரிக்கெட் போட்டி கோவையில் இன்று தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான திண்டுக்கல் டிராகன்ஸ் மற்றும் கோவை கிங்ஸ் அணிகள் மோதுவதால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

வெள்ளிங்கிரி மலை ஏற இனி அனுமதி கிடையாது.. வனத்துறை அறிவிப்பு!

கோவை, வெள்ளியங்கிரி மலை ஏறி ஈசனை தரிசிக்க பக்தர்கள் இந்தாண்டு வனத் துறை வழங்கி இருந்த அனுமதி நேற்றுடன் நிறைவு பெற்றதை தொடர்ந்து, மலை ஏறுவதற்கு இனி அனுமதி வழங்கப்படாது என வனத்துறை அறிவித்துள்ளது.

கோவையில் கொரோனா பரவல் இல்லை - கல்லூரி முதல்வர் நிர்மலா விளக்கம்

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனோ பரவல் இல்லை என்றும், கட்டாய முக கவசம் என தவறான செய்தி குறித்து விசாரணை நடத்தப்படும் என முதல்வர் நிர்மலா விளக்கம் அளித்துள்ளார்.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு.. கோவை முன்னாள் ஆட்சியருக்கு அபராதம்!

கோவை மாவட்ட முன்னாள் ஆட்சியர் கிராந்தி குமார் பாடிக்கு நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ரூ.10,000 அபராதமும், கோவை வடக்கு தாலுகா தாசில்தார் மணிவேலுக்கு ஒரு மாதம் சிறை தண்டனையும் விதித்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக உரிமை விவகாரத்தில் முதலமைச்சர் சமரசம் செய்யமட்டார்- அமைச்சர் மனோ தங்கராஜ்

எப்போதும் நிரந்தரமான விலையை தரும் ஆவினுக்கு அனைத்து விவசாயிகளும் வர வேண்டும் என அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டியளித்துள்ளார்.

கோவையில் பாஜக நடத்திய தேசியக்கொடி பேரணி- அதிமுகவினர் பங்கேற்பு

ஆப்ரேஷன் சிந்து வெற்றியை கொண்டாடும் விதமாக கோவையில் பா.ஜ.க வினர் நடத்திய மூவர்ண கொடி பேரணியில் பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., அ.தி.மு.க ஜெயராமன் எம்.எல்.ஏ உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஐ.பி.எல் சூதாட்டம்: ஒருவர் கைது - ரூ.96 லட்சம் மதிப்புள்ள சொத்துகள் முடக்கம்!

கோவையில் ஐ.பி.எல் சூதாட்டத்தில் ஈடுபட்ட ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில், ரூ. 50 லட்சம் சொத்து, 46 லட்சம் வங்கி கணக்குகளை முடக்கி காவல் துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

காதலியிடம் வீடியோ காலில் பேசி வந்த நண்பன்.. போதை ஊசி செலுத்தி கொலை

தன் காதலியிடம் நண்பன் வீடியோ காலில் பேசி வந்ததால் ஆத்திரம் அடைந்த காதலன், நண்பனை மதுப்போதையில் போதை ஊசி செலுத்தி கொலை செய்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Pollachi Judgement: பொள்ளாச்சி வழக்கில் குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு விவரம்!

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகளான 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்கி, கோவை கூடுதல் மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினி தேவி தீர்ப்பளித்துள்ளார்.