K U M U D A M   N E W S

இந்தியா

கொல்கத்தாவில் கல்லூரி மாணவிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை..!

கொல்கத்தாவில் கல்லூரி மாணவி ஒருவர், கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாத்ரூமில் அமர்ந்தவாறு நீதிமன்ற விசாரணையில் ஆஜராகிய நபர்.. வைரலாகும் வீடியோ

காணொலி வாயிலான நீதிமன்ற விசாரணையின் போது, ஒருவர் கழிப்பறையில் இருந்தபடியே பங்கேற்ற சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அகமதாபாத் விமான விபத்து: ஐ.நா-வின் உதவியை நிராகரித்தது இந்தியா..!

அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்து தொடர்பான விசாரணையில் ஐ.நா. உதவ முன்வந்த நிலையில், இந்தியா அதனை நிராகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

'சோசலிஸ்ட்' & 'மதச்சார்பற்ற' வார்த்தைகள் நீக்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும்.. தத்தாத்ரேய ஹோசபலே

அரசியலமைப்பு முகப்புரையில் இருந்து 'சோசலிஸ்ட்', 'மதச்சார்பற்ற' என்ற வார்த்தைகளை நீக்குவது குறித்து விவாதிக்கப்பட வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். பொதுச் செயலாளர் தத்தாத்ரேய ஹோசபலே தெரிவித்துள்ளார்.

இருசக்கர வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம்? மத்திய அமைச்சர் விளக்கம்

இருசக்கர வாகனங்களுக்கு சுங்க வரி விதிக்கப்போவதாக வெளியான செய்திகள் தவறானவை என்று மத்தியஅமைச்சர் நிதின் கட்கரி விளக்கமளித்துள்ளார்.

ஏர் இந்தியா விமான விபத்து கருப்புப் பெட்டியில் இருந்து தரவுகள் மீட்பு.. விசாரணை தீவிரம்!

ஏர் இந்தியா விமானத்தில் 275 பேர் உயிரிழந்த நிலையில், அவ்விமானத்தின், கருப்புப் பெட்டியில் இருந்த தரவுகள் மீட்கப்பட்டதாகவும், தகவல்களை பிரித்தெடுத்து விசாரிக்கும் பணிகள் நடப்பதாகவும் தகவல் பதிவிறக்கம் செய்யப்பட்ட தரவுகள் மூலம் விபத்துக்கான காரணத்தை கண்டுபிடிக்க ஆய்வு நடக்கிறது - விமான போக்குவரத்து துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இருசக்கர வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் – NHAI மறுப்பு விளக்கம்

தேசிய நெடுஞ்சாலைகளில் இருசக்கர வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கும் திட்டம் இல்லை என மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலை ஆணையமான (NHAI) இன்று விளக்கம் அளித்துள்ளது.

டெல்லி PWD உலக சாதனை: ஒரே நாளில் 3,433 சாலைப் பள்ளங்கள் சீரமைப்பு!

ஒரே நாளில் 3,433 சாலைப் பள்ளங்களை சீரமைத்து டெல்லி மாநில பொதுப்பணித்துறை உலக சாதனை படைத்துள்ளது.

நடுவானில் பயணிக்கு நேர்ந்த சிக்கல்.. அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்

மும்பையில் இருந்து சென்னைக்கு 162 பயணிகளுடன் வந்து கொண்டு இருந்த விமானமானது, நடுவானில் பயணிக்கு ஏற்பட்ட உடல் நல பாதிப்பால் ஐதராபாத் விமான நிலையத்தில் அவசரமாக தரை இறங்கியுள்ளது. உடல் நலம் பாதித்த பயணி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் ஒன்றரை மணி நேரம் தாமதமாக சென்னை வந்து சேர்ந்தது விமானம்.

வயநாட்டில் மீண்டும் நிலச்சரிவா? புன்னப்புழா நதியில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம்!

வயநாட்டில் பெய்த கனமழையால் முண்டகை பகுதியில் நிலச்சரிவு, முண்டகையில் மீண்டும் நிலச்சரிவு மற்றும் பலத்த வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பெய்லி பாலம் அருகே வெள்ளம் பாயும் நிலையில், அப்பகுதியில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

வரதட்சணை கொலை வழக்கு: பிளாக் கேட் கமாண்டோவிற்கு சலுகை இல்லை.. உச்சநீதிமன்றம் அதிரடி

வரதட்சணை வழக்கில் மனைவியை கொலை செய்த பிளாக் கேட் கமாண்டோவுக்கு சலுகை வழங்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. ஆபரேஷன் சிந்தூரில் பங்கேற்றவர் என்ற வாதத்தை ஏற்க முடியாது என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

நேருவின் தனிப்பட்ட கடிதங்கள்: சோனியா காந்தியிடம் இருந்து திரும்ப பெற மத்திய அரசு சட்ட நடவடிக்கை!

நேரு அருங்காட்சியத்தில் இருந்து சோனியா காந்தி பெற்று சென்ற நேருவின் கடிதங்களை அவரிடம் இருந்து திரும்ப பெற சட்ட நடவடிக்கை எடுக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

‘செருப்பு தைக்கும் தொழிலை செய்’.. சாதிய கொடுமைக்கு ஆளான பயிற்சி விமானி

இண்டிகோ விமான நிறுவனத்தில் பயிற்சி விமானியாக பணிபுரிந்த இளைஞர் ஒருவர், தான் சாதி அடிப்படையிலான துன்புறுத்தலுக்கு ஆளானதாகப் புகார் அளித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நீட் தேர்வு: மதிப்பெண் குறைந்ததால் மகளை அடித்து கொன்ற தந்தை!

மகாராஷ்டிர மாநிலத்தில் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவி, நீட் பயிற்சி தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதால், கோபமடைந்த அவரது தந்தை கடுமையாக தாக்கியதில் உயிரிழந்தார்.

யாரு சாமி நீ.. ரூ.1 லட்சம் மதிப்புள்ள ஸ்கூட்டியின் பேன்சி நம்பருக்கு ரூ14 லட்சமா?

இமாச்சல பிரதேசத்தில் ரூ.1 லட்சம் மதிப்புள்ள ஸ்கூட்டருக்கு ரூ.14 லட்சம் கொடுத்து HP21C-0001 என்ற ஃபேன்சி எண்ணை சஞ்சீவ் என்ற நபர் வாங்கியுள்ள சம்பவம் அரங்கேறியுள்ள நிலையில், சமூக வலைதளத்தில் யாரு சாமி நீ , ரொம்ப வசதியா இருப்பாரோ? என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

சீட்டை விட்டுத் தர மறுத்த பயணியை ஆள் வைத்து அடித்த பாஜக எம்.எல்.ஏ.. ரயில்வே போலீசார் விசாரணை

உத்தரப்பிரதேசத்தில் வந்தே பாரத் ரயிலில் சீட் மாறி அமர மறுத்த சக பயணியை, பாஜக எம்.எல்.ஏ. ராஜீவ் சிங் ஆட்களை வைத்து அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மனைவியின் இன்ஸ்டா ரீல்ஸ் மோகம்.. கணவன் செய்த கொடூரம்!

கர்நாடகாவில் மனைவி தொடர்ச்சியாக இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பார்த்ததால் ஆத்திரம் அடைந்த கணவன், மனைவின் கழுத்தில் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.

வேறு சாதியில் திருமணம்.. 40 பேருக்கு மொட்டை அடித்த கொடூரம்

ஒடிசாவில் பெண் ஒருவர் வேறு சாதியைச் சேர்ந்தவரை திருமணம் செய்ததால், அவரது குடும்பத்தினர் 40 பேருக்கு சடங்கு என்ற பெயரில் மொட்டை அடித்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.

ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தொண்டர் பலி.. ஜெகன்மோகன் ரெட்டி மீது வழக்கு பதிவு

ஜெகன் மோகன் ரெட்டி சென்ற காருக்கு அடியில் சிக்கிய நபர் உயிரிழந்தது தொடர்பாக ஆந்திரப் பிரதேச முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி உள்ளிட்ட 6 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Yoga Day 2025: அரசியல் பிரபலங்களின் யோகா தின க்ளிக்ஸ்!

உலகம் முழுவதும் சர்வதேச யோகா தினம் இன்று கொண்டாடப்படும் சூழ்நிலையில், இந்தியாவின் ஜனாதிபதி, பிரதமர் உட்பட பல்வேறு அரசியல் மற்றும் திரையுலக பிரபலங்கள் இன்று யோகா பயிற்சியில் ஈடுபட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

விமான விபத்து எதிரொலி.. ஏர் இந்தியாவின் முன்பதிவு சரிவு

அகமதாபாத் விமான விபத்துக்கு பிறகு, ஏர் இந்தியா விமானத்தின் முன்பதிவு 20 சதவீதம் வரை குறைந்துள்ளதாக இந்திய சுற்றுலா ஆபரேட்டர்களின் சங்க தலைவர் ரவி கோசைன் தெரிவித்துள்ளார்.

மகனுக்கு நிச்சயித்த பெண்ணை மணந்த தந்தை.. குடும்பத்தினர் அதிர்ச்சி

உத்தரப் பிரதேசத்தில் தனது 17 வயது மகனுக்கு நிச்சயம் செய்த பெண்ணை 55 வயது தந்தை திருமணம் செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேள்வி கேட்பதை பாஜக விரும்பவில்லை.. ராகுல் காந்தி விமர்சனம்

"இந்தியாவின் ஏழைக் குழந்தைகள் ஆங்கிலம் கற்பதை பாஜக - ஆர்எஸ்எஸ் விரும்பவில்லை" என்று ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

பீகாரிலிருந்து கினி நாட்டுக்கு ரயில் என்ஜின் ஏற்றுமதி – தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி

பீகாரில் இருந்து கினி நாட்டுக்கு ரயில் என்ஜின் ஏற்றுமதியை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைக்கிறார். ஒடிசாவில் 18,600 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டப் பணிகளும் இன்று தொடங்குகிறது.

கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த தவறினால் 3 ஆண்டுகள் சிறை!

கர்நாடக அரசு விழாக்கள், நிகழ்ச்சிகளில் கூட்ட நெரிசல் ஏற்பட்டால் சம்மந்தப்பட்ட விழாவின் ஏற்பாட்டாளருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கும் புதிய சட்டத்தை கொண்டு வரவுள்ளது. பெங்களூருவில் ஆர்சிபி அணி வெற்றிக் கொண்டாட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து மாநில அரசு நடவடிக்கை எடுக்கக்கப்பட்டுள்ளதாகவும், அரசியல் மற்றும் மத கூட்டங்களுக்கும் இந்த தண்டனை பொருந்தும் என சட்ட முன்வடிவில் கூறப்பட்டுள்ளது.