K U M U D A M   N E W S

இந்தியா

உச்சநீதிமன்றம் வரை சென்ற திருப்பதி லட்டு.. சுப்பிரமணியன் சுவாமி பொதுநல வழக்கு!

''திருப்பதி கோயிலில் பிரசாதாமாக வழங்கப்படும் லட்டுகளில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்ட விவகாரம் பொது சுகாதாரம் மற்றும் கோயிலில் புனிதத்தை அவமதிப்பதுபோல் உள்ளது'' என்று சுப்பிரமணியன் சுவாமி பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

”குழந்தை ஆபாச படம் பார்த்தால்....” சென்னை உயர்நீதிமன்றத்துக்கு குட்டு வைத்த உச்சநீதிமன்றம்..வழக்கின் பின்னணி இதோ!

குழந்தைகளின் ஆபாச படங்களை பரப்பும் நோக்கமின்றி அவற்றை சேமித்து வைத்து னிப்பட்ட முறையில் பார்ப்பது குற்றமல்ல எனக் கூறி ஆபாச படங்கள் பார்த்ததாக இளைஞர் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் வழங்கிய தீர்ப்பை தவறு என கூறி ரத்து செய்துள்ளது  உச்ச நீதிமன்றம்.

அடுத்த 24 மணி நேரத்தில்..வானிலை ஆய்வு மையம் கொடுத்துள்ள எச்சரிக்கை

மத்திய மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணிக்கப்பட்டுள்ளது.

தலைவிரித்தாடும் நிபா வைரஸ் தொற்று.. கேரளாவில் மீண்டும் 2 பேர் பாதிப்பு!

கேரளாவில் மீண்டும் 2 பேர் நிபா வைரஸால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருவதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

'பெருமாளே என்னை மன்னியுங்கள்’.. 11 நாள் விரதத்தை தொடங்கிய பவன் கல்யாண்!

Deputy CM Pawan Kalyan on Tirupati Laddu : ''கடவுளே... கடந்த ஆட்சியாளர்கள் உமக்கு எதிராக செய்த பாவங்களைக் கழுவும் சக்தியை எனக்கு வழங்குங்கள் என்று பெருமாளிடம் கேட்க போகிறேன். கடவுள் நம்பிக்கையும், பாவ பயமும் இல்லாதவர்களே இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுகிறார்கள்'' என்று பவன் கல்யாண் கூறியுள்ளார்.

ஏடிஎம்-ஐ உடைத்து சுமார் ரூ.1 கோடி அபேஸ்

ஆந்திரா: விஸ்வேசரய்யா சர்க்கிள் பகுதியில் உள்ள ஏடிஎம் இயந்திரத்தை உடைத்தபோது எச்சரிக்கை ஒலி அடித்ததால் கொள்ளையர்கள் ஓட்டம். இன்று காலை வாடிக்கையாளர்கள் பணம் எடுக்க ஏடிஎம் சென்றபோது கொள்ளை போனது தெரியவந்துள்ளது

Atishi: டெல்லியின் புதிய முதலமைச்சரானார் அதிஷி... அரவிந்த் கெஜ்ரிவால் முன்னிலையில் பதவிப் பிரமாணம்!

டெல்லியின் இளம் முதலமைச்சராக ஆம் ஆத்மி கட்சியின் அதிஷி பதவியேற்றார். அவருடன் 5 அமைச்சர்களும் பதவியேற்றுக்கொண்டனர்.

'பக்தர்களின் மனது காயம்பட்டுள்ளது’.. ராகுல் காந்தி வேதனை!

இந்த ஆய்வறிக்கை உண்மை என்றால் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியில் தவறிழைத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. இந்த விவகாரம் குறித்து திருமலை-திருப்பதி தேவஸ்தானம் சார்பிலும் விளக்கம் அளிக்கப்பட்டு இருந்தது

அமெரிக்கா புறப்பட்டார் பிரதமர் மோடி.. குவாட் உச்சி மாநாட்டில் பங்கேற்பு!

இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் ஆகிய 4 நாடுகளை உறுப்பினர்களாக கொண்டது குவாட் அமைப்பு. இன்று நடக்கும் குவாட் மாநாட்டுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தலைமை தாங்குகிறார்.

உச்சநீதிமன்றத்தின் Youtube பக்கம் ஹேக்..

உச்சநீதிமன்றத்தின் அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கம் மர்ம நபர்களால் ஹேக் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

“YRS காங். மீது பொய் வழக்கு போடுவதே சந்திரபாபு நாயுடுவின் வேலை..” லட்டு விவகாரத்தில் ஜெகன்மோகன் பதிலடி!

திருப்பதி லட்டு விவகாரம் குறித்து செய்தியாளர்களை சந்தித்த ஜெகன்மோகன் ரெட்டி, YRS காங். மீது பொய் வழக்கு போடுவதே சந்திரபாபு நாயுடுவின் வேலை, அவர் முன்வைத்த குற்றச்சாட்டுகளை முழுமையாக மறுக்கிறேன் எனக் கூறியுள்ளார்.

முகேஷ் அம்பானியின் காஸ்ட்லி பிரைவெட் ஜெட்..... மாளிகை தோற்றுவிடுமாம்.. அவ்வளவு பிரமாண்டம்!

சுமார் ரூ. 9 லட்சம் கோடி சொத்துக்கு அதிபதியான முகேஷ் அம்பானி தற்போது இந்தியாவிலேயே விலை உயர்ந்த பிரைவெட் ஜெட்டுக்கு உரிமையாளர் என்ற பெருமையை பெற்றிருக்கிறார்.

இந்தியாவில் களைகட்டும் IPhone 16 வியாபாரம்... மீன் வாங்கக் கூட இவ்வளவு கூட்டம் இருந்தது இல்லை!

இந்தியாவில் ஆப்பிள் iphone 16 சீரிஸ் போன்களின் விற்பனை தொடங்கிய நிலையில், டெல்லி மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் அதிகாலை முதலே மக்கள் வரிசையில் நின்றபடி காத்திருந்து iphone 16 போன்களை ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர்.

’ராகுல் காந்தி நம்பர் ஒன் பயங்கரவாதி’.. மத்திய அமைச்சர் சர்ச்சை பேச்சு.. பாய்ந்தது வழக்கு!

''ராகுல் காந்தியின் கருத்தை காலிஸ்தான் பயங்கரவாதிகள் வரவேற்றுள்ளனர். எப்போது இதுபோன்ற நபர்கள் ராகுல் காந்திக்கு ஆதரவு கொடுக்க ஆரம்பித்தனரோ, அப்போதே அவர் (ராகுல் காந்தி) நம்பர் ஒன் பயங்கரவாதியாக விட்டார்'' என்று மத்திய அமைச்சர் தெரிவித்திருந்தார்.

ஒருவழியாக மமதாவின் வேண்டுகோளை ஏற்ற மருத்துவர்கள்.. 41 நாட்கள் நடந்த போராட்டம் வாபஸ்!

போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்களை சந்தித்து மமதா பானர்ஜி பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது மருத்துவர்கள் அவரிடம் , கொல்கத்தா போலீஸ் கமிஷனர் வினீத் குமார் கோயலை பதவி நீக்கம் செய்ய வேண்டும்; சுகாதார செயலாளரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தினார்கள்.

’இந்த விஷயத்தில் நாங்களும், காங்கிரசும் ஒன்றுதான்’.. பாகிஸ்தான் அமைச்சர் பேச்சு!

பாகிஸ்தான் ராணுவ அமைச்சரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்த தேசிய மாநாட்டு கட்சியின் துணைத் தலைவர் உமர் அப்துல்லா, ’’பாகிஸ்தானுக்கும் எங்களுக்கும் என்ன தொடர்பு உள்ளது? ஜம்மு-காஷ்மீர் பாகிஸ்தானின் பகுதி அல்ல; அவர்கள் (பாகிஸ்தான்) முதலில் தங்கள் நாட்டின் ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டும்’’ என்றார்.

திருப்பதி லட்டில் விலங்குகளின் கொழுப்புகள்... வெளியான ஆய்வு முடிவுகள்... அதிர்ச்சியில் பக்தர்கள்!

திருப்பதி லட்டில் விலங்குகளின் கொழுப்புகள், மீன் எண்ணெய் கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இந்தியாவில் இரண்டாவது குரங்கம்மை பாதிப்பு... அச்சத்தில் பொதுமக்கள்!

துபாயில் இருந்து கேரளாவிற்கு வந்த 38 வயதுடைய நபர் ஒருவருக்கு குரங்கம்மை இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

New Liquor Policy : எந்த பிராண்ட் மதுவாக இருந்தாலும் குவாட்டர் 99 ரூபாய்தான் - ஆந்திர அரசு அதிரடி 

Andhra Pradesh New Liquor Policy 2024 : ஆந்திர அரசு புதிய மதுக்கொள்கை மூலம் எந்த பிராண்ட் மதுவாக இருந்தாலும் 99 ரூபாய்க்கு விற்க முடிவு செய்திருக்கிறது

ஆந்திரா மழை வெள்ளம்.... ரூ. 25 கோடியை அள்ளிக் கொடுத்த அதானி குழுமம்!

Adani Group Funds To Andhra Flood Relief : ஆந்திராவில் ஏற்பட்ட மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெள்ள நிவாரண நிதியாக ரூ. 25 கோடியை அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவிடம் அதானி குழுமம் வழங்கியுள்ளது.

PM Modi : ’ஜம்மு-காஷ்மீரில் பாஜக ஆட்சிக்கு வந்தால்..’ வாக்குறுதிகளை அள்ளிவீசிய பிரதமர் மோடி!

PM Modi Campaign in Jammu and Kashmir : ''முன்னர் ஜம்மு-காஷ்மீரில் சிலர் பாதுகாப்பு படையினர் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினார்கள். ஆனால் இப்போது அவர்களின் கைகளில் புத்தகங்களும், பேனாக்களும் கொடுக்கப்பட்டுள்ளன. ஏனெனில் அந்த 3 கட்சிகளின் சுயநல அரசியலை இளைஞர்கள் புரிந்து கொண்டுள்ளனர்'' என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தை - 16 மணி நேரப் போராட்டத்துக்குப் பின் மீட்பு

Child Rescued From Borewell in Jaipur : ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த இரண்டரை வயது பெண் குழந்தையைத் தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டுள்ளனர்.

காஷ்மீர் தேர்தல்... மோடி ஸ்ரீநகரில் பரப்புரை

ஜம்மு காஷ்மீரில் மூன்று கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. முதல்கட்ட தேர்தல் நடந்து முடிந்த நிலையில் இரண்டாம் கட்டமாக செப்டம்பர் 25ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையெட்டி பிரதமர் மோடி ஸ்ரீநகரில் 2ம் கட்ட தேர்தல் பரப்புரையை இன்று தொடங்கினார்

ஒரே நாடு ஒரே தேர்தல் - காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் சாடல்

ஒரே நாடு ஒரே தேர்தல் - காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் சாடல். வேலை இல்லா திண்டாட்டத்தை மறைக்க முயற்சி என அஜய்குமார்

Flipkart Big Billion Days 2024 Sale : செப்டம்பர் 27 வரை வேற ஸ்மார்ட் போன் வாங்காதீங்க!

Flipkart Big Billion Days 2024 Sale-ல் உங்களது பட்கெட்டுக்கு ஏற்ற லேட்டஸ் டெக்னாலஜி ஸ்மார்ட் போன்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.