K U M U D A M   N E W S
Kumudam Ad

போலீஸ்

செந்தில்பாலாஜி மீது விஜய் அரசு குறி... கரூரில் தீவிரமாகும் Horse Trading விசாரணை!

த.வெ.க. எம்.எல்.ஏ.க்கள் குதிரைப் பேர வழக்கில் செந்தில்பாலாஜி, அசோக்குமார் பெயர் அடிபட்டதால் போலீஸ் விசாரணை தீவிரமடைந்துள்ளது. தி.மு.க. இதை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என குற்றம்சாட்டியுள்ளது.

தலைமறைவான செந்தில் பாலாஜி....லுக் அவுட் விட்ட போலீஸ்...

தவெக ஆட்சியை கவிழ்க்க முயன்ற வழக்கில் விசாரணைக்கு ஜுலை 6 ஆம் தேதி ஆஜராக கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரருக்கு சென்னை போலீசார் சம்மன் அனுப்பியுள்ளது.

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் வெறிச்செயல்: ரவுடியுடன் சேர்ந்து மனைவியை கத்தியால் வெட்ட முயன்ற கணவன் கைது!

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில், கணவன் தினகரன், பிரபல ரவுடி 'காக்கா தீனா' மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோருடன் சேர்ந்து தனது மனைவி துர்காவைத் தாக்கிக் கத்தியால் வெட்ட முயன்ற வழக்கில், சிஎம்பிடி போலீசார் மூவரையும் கைது செய்தனர்.

பெண்ணின் காதை கடித்த 4 பாக்ஸர் நாய்கள்.. அலட்சியத்தில் உரிமையாளர்.. பாதிக்கப்பட்ட பெண் போலீசில் புகார்!

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில், வீட்டு வேலை செய்யும் பெண்ணை நான்கு 'பாக்ஸர்' வகை நாய்கள் கடித்ததில், அவரது காது கிழிந்ததுடன், பலத்த காயங்களும் ஏற்பட்டன. நாய்களை அதன் உரிமையாளர் கண்டுகொள்ளவில்லை என உஷா வேதனையுடன் புகார் அளித்த நிலையில், அபிராமபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம்; 50 சவரன் வரதட்சணை கேட்டு மிரட்டல்; திருமங்கலம் போலீசார் நடவடிக்கை!

இன்ஸ்டாகிராம் மூலம் பழகி, திருமணம் செய்ய உறுதியளித்த இளைஞர் ஆதித்யன், நிச்சயத்திற்குப் பிறகு 50 சவரன் தங்க நகைகள் வரதட்சணையாகக் கேட்டுத் திருமணம் செய்ய மறுத்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில், திருமங்கலம் அனைத்து மகளிர் போலீசார் ஆதித்யனைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ரோகிணி திரையரங்கில் நடந்த சலசலப்பு.. யூடியூபருக்குக் கொலை மிரட்டல் விடுத்த தவெக தொண்டர் கைது!

ரோஹிணி திரையரங்கில், கரூர் விபத்து குறித்துப் பேசிய யூடியூப்பருக்குக் கொலை மிரட்டல் விடுத்த தவெக தொண்டரான கோகுல் என்பவரைச் சிஎம்பிடி போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னையில் சோகம்: வீட்டு உரிமையாளர் இறுதிச் சடங்கின்போது மின்சாரம் தாக்கி ஆந்திரத் தொழிலாளி உயிரிழப்பு!

சென்னை முகப்பேரில், வீட்டு உரிமையாளர் இறுதிச் சடங்கின்போது, மின்சார இணைப்புப் பணியில் இருந்த ஆந்திர மாநிலத் தொழிலாளி நாராயணன் (40), மதுபோதையில் மின்சார ஜங்ஷன் பாக்சை தொட்டதால் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

கள்ளக்காதல் விவகாரம்: ஓனரின் மனைவியுடன் பழகிய இளைஞர் கத்தியால் குத்திக் கொலை!

பெங்களூரு மிச்சர் கம்பெனி ஓனர் அல்போன்ஸின் மனைவியுடன் கள்ளக்காதல் வைத்திருந்த 19 வயது இளைஞர் பவன்குமார், திருப்பத்தூரில் உள்ள அவரது பாட்டி வீட்டில், ஓனர் அல்போன்ஸ் மற்றும் 3 நண்பர்களால் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கொலையாளிகளைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

மகன் மீது பொய் வழக்கு- டிஜிபி அலுவலகம் முன்பு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தீக்குளிக்க முயற்சி; பரபரப்பு!

திருவல்லிக்கேணி போலீஸ் தனது மகன் மீது பொய் வழக்குப் பதிவு செய்ததாகக் குற்றம்சாட்டி, சென்னை டிஜிபி அலுவலகம் முன் ராணி, மணி மற்றும் மணிமாறன் ஆகிய மூவர் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றித் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

கரூர் துயரம்: ஆதவ் அர்ஜூனா அலுவலகத்திற்குச் சென்று வீடியோ கேட்ட போலீஸ்!

கரூரில் 41 பேர் உயிரிழந்த நெரிசல் சம்பவம் தொடர்பாக, தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா அலுவலகத்திற்கு வந்த கரூர் போலீசார், பரப்புரையின்போது எடுக்கப்பட்ட வீடியோ மற்றும் சிசிடிவி காட்சிகளைக் கேட்டு கடிதம் கொடுத்துள்ளனர். சர்ச்சைக்குரிய புரட்சி பதிவுக்காகச் சைபர் கிரைம் போலீசும் வழக்குப்பதிவு செய்துள்ளதால், ஆதவ் அர்ஜுனாவுக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது.