K U M U D A M   N E W S
Advertisement

தமிழ்நாடு

சீமான் - விஜயலட்சுமி வழக்கு: இருவரும் பரஸ்பரம் மன்னிப்புக் கோரிய நிலையில் வழக்கை முடித்து வைத்த உச்ச நீதிமன்றம்!

நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி தொடர்ந்த திருமண மோசடி வழக்கில், இரு தரப்பினரும் பரஸ்பரம் மன்னிப்புக் கோரி சமரசம் செய்துகொண்டனர். இதையடுத்து, உச்ச நீதிமன்றம் வழக்கை இன்று (அக். 8) முடித்து வைத்து உத்தரவிட்டது.

"லக்கி பாஸ்கர்" unlucky பாஸ்கர் ஆன கதை: சொகுசு கார் மோசடியில் அமலாக்கத்துறை வளையத்தில் துல்கர் சல்மான்!

சொகுசுக் கார்களைப் போலி ஆவணங்கள் மூலம் இறக்குமதி செய்து, ஹவாலா மற்றும் சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் செய்த வழக்கில், நடிகர் துல்கர் சல்மான் தொடர்புடைய கேரளா, தமிழ்நாடு உட்பட 17 இடங்களில் அமலாக்கத்துறை (ED) தீவிரச் சோதனை நடத்துகிறது.

கரூர் துயரச் சம்பவம்: கூட்ட நெரிசல் நடந்த இடத்தில் துப்புரவுப் பணிகள் நிறைவு; வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட வணிகர்கள் நிவாரணம் கோரிக்கை!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் நடந்த வேலுச்சாமிபுரம் பகுதியில் 10 நாட்களுக்குப் பின் துப்புரவுப் பணிகள் இன்று நிறைவடைந்தன. இதைத் தொடர்ந்து, 12 நாட்களாகப் பூட்டப்பட்டிருந்த கடைகள் திறக்கப்பட்டன.

10-க்கும் மேற்பட்ட பெண்களைத் திருமண மோசடி செய்த மாதம்பட்டி ரங்கராஜ் - மகளிர் ஆணையத்தில் பரபரப்புப் புகார்!

பிரபல சமையற்கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் மீது, திருமணம் செய்வதாக ஏமாற்றி, கர்ப்பமாக்கி மோசடி செய்ததாக ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா இன்று மாநில மகளிர் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்.

91 ஆயிரத்தை கடந்த தங்கம் விலை.. ஒரே நாளில் இரண்டாவது முறையாக உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டதால் பொதுமக்கள் கலக்கம்!

சர்வதேசப் பொருளாதார மாற்றங்களால், தங்கத்தின் விலை இன்று (அக். 8) இரண்டாவது முறையாக உயர்ந்து, ஒரு சவரன் ரூ. 91,080 என்ற வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது.

கள்ளக்குறிச்சிக்கு வழி தெரியாதவர்கள் காசாவைப் பற்றிக் கவலைப்படுவது ஏன்? - முதல்வர் ஸ்டாலினை விமர்சித்த அண்ணாமலை!

காசா இனப்படுகொலையைக் கண்டித்துப் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலினின் கருத்தை டேக் செய்து, பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார்.

காவல் உதவி ஆய்வாளர் இறுதிப் பட்டியல்: 30 நாட்களில் வெளியிட உயர் நீதிமன்றம் உத்தரவு!

621 காவல் உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கான இறுதித் தேர்வுப் பட்டியலை 30 நாட்களுக்குள் வெளியிடச் சென்னை உயர் நீதிமன்றம், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்துக்கு உத்தரவிட்டுள்ளது.

வரதட்சணைக் கொடுமைப் புகார்: ஐஆர்எஸ் அதிகாரி கொடுத்த புகாரின் பேரில் மனநல மருத்துவர் மீது வழக்குப் பதிவு!

ஐஆர்எஸ் அதிகாரி திவ்யா, தனது கணவர் மனநல மருத்துவர் ஆறுமுகம் மற்றும் அவரது தாய் மீது கூடுதல் வரதட்சணையாக ₹80 லட்சம் பணம் மற்றும் 20 சவரன் நகைகள் கேட்டுத் தொல்லை கொடுத்ததாகப் புகார் அளித்துள்ளார்.

ஆசிரியர் காலிப்பணியிடங்கள் நடைமுறைப்படி நிரப்பப்படும்: சபாநாயகர் அப்பாவு!

திருநெல்வேலியில் பேசிய சபாநாயகர் அப்பாவு, நதிநீர் இணைப்புத் திட்டத்தின் அடிப்படை விவரங்களைப் படிக்காமல் அதிமுக எம்.பி.க்கள் விமர்சிப்பதாக ஆவேசமாகக் குற்றம் சாட்டினார்.

போரூர் சிறுமி பாலியல் வன்கொடுமை - கொலை வழக்கு: தஷ்வந்தின் மரண தண்டனையை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவு!

சென்னை போரூர் சிறுமி ஹாசினி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், குற்றம் உறுதியாக நிரூபிக்கப்படாததால், குற்றவாளி தஷ்வந்துக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.