K U M U D A M   N E W S
Advertisement

தமிழ்நாடு

ஏறுமுகத்தில் தங்கம் விலை.. சவரனுக்கு ரூ.320 அதிகரிப்பு!

தங்கம் விலை இன்று ஒரே நாளில் ரூ.320 உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

கிருஷ்ணகிரி ஊத்தங்கரை அருகே கல்லூரி வாகனம் கவிழ்ந்து விபத்து - 15 மாணவர்கள் படுகாயம்!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே, யூனிக் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களை ஏற்றிச் சென்ற வாகனம் பைபாஸ் வளைவில் நிலைதடுமாறிக் கவிழ்ந்ததில் 15க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படுகாயமடைந்தனர்.

நீலகிரிக்கு ஆரஞ் அலர்ட்.. 10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளார்.

எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை அவலம்: எக்ஸ்ரே ஃபிலிம் இல்லாததால் முடிவுகள் எழுத்துவடிவில் தாமதம் - பெற்றோர் கடும் அவதி!

சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில், எக்ஸ்ரே ஃபிலிம் இல்லாததால் நோயாளிகளுக்கு முடிவுகள் வெறும் எழுத்து வடிவிலும், தாமதமாகவும் வழங்கப்படுகின்றன.

தி மியூசிக் அகாடமி விழா.. இளம் பரதக் கலைஞர் மிருதிகாவுக்கு 'நிருத்ய மயூரி' விருது!

சென்னையில் உள்ள தி மியூசிக் அகாடமியில் நடந்த பரத விழாவில், இளம் பரதக் கலைஞர் மிருதிகாவின் நடனம் பெரும் வரவேற்பைப் பெற்றது. அவரது கலைத்திறமையைப் பாராட்டி, பிரபலங்கள் முன்னிலையில் அவருக்கு 'நிருத்ய மயூரி' என்ற சிறப்பு விருது வழங்கப்பட்டது.அண்மையில் சென்னையில் உள்ள 'தி மியூசிக் அகாதமி'யில் நடைபெற்ற பரத விழாவில், இளம் பரதக் கலைஞர் மிருதிகாவின் நடனம் சபையோரின் பெரும் வரவேற்பைப் பெற்றது. அவரது கலைத்திறமையைப் பாராட்டி அவருக்கு 'நிருத்ய மயூரி' என்ற சிறப்பு விருது வழங்கப்பட்டது. இந்த விருது வழங்கும் நிகழ்வில் கலையுலகம் மற்றும் நிர்வாகத் துறையின் பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டு மிருதிகாவைப் பாராட்டினர். விழாவில் கலந்துகொண்ட முக்கியப் பிரமுகர்கள் கலைமாமணி எம்.வி.என். முருகி, கவிதா ராமன் IAS, சி.ஆர். பாஸ்கர், கார்த்திக் (வெள்ளம்மல் குழு), பரமேஸ்வரி (வரி கழகம்), லட்சுமி ஜெயபிரியா, காயத்ரி பாலசுப்ரமணியம் (தாய்), 'சௌபாக்யா' பாலசுப்ரமணியம் (தந்தை)உள்ளிட்டோர் மிருதிகாவுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

கரூர் சம்பவத்தால் ஆத்திரம்: விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது!

நடிகரும் தவெக தலைவருமான விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு விடுத்த நபர் கைது செய்யப்பட்டார்.

தவெக கூட்டணி கனவில் எடப்பாடி பழனிசாமி.. பகல் கனவு பலிக்காது என செல்வப்பெருந்தகை அதிரடி!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜகவை விட்டுவிட்டுத் தமிழக வெற்றிக் கழகத்துடன் (தவெக) கூட்டணி அமைக்க முயற்சிப்பதாகக் கூறப்படும் நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை அது பலிக்காத பகல் கனவு என்று காட்டமாகக் கூறியுள்ளார்.

உலகின் தலைசிறந்த புத்தாக்க மையமாகத் தமிழகத்தைக் கட்டமைப்பதே திராவிட மாடல் கனவு.. கோவை புத்தொழில் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு!

கோவையில் நடந்த புத்தொழில் மாநாட்டில் பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின், 2030-க்குள் ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை அடைவதில் புத்தொழில் நிறுவனங்களின் பங்கை வலியுறுத்தினார். TANSIM மூலம் ஸ்டார்ட்அப்கள் ஆறு மடங்கு வளர்ந்திருப்பதாகவும், பாதியளவு நிறுவனங்களுக்குப் பெண்களே தலைமை தாங்குவதாகவும் பெருமிதம் தெரிவித்தார்.

வடசென்னையை ஆட்டிப் படைத்த தாதா.. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் A1 குற்றவாளி நாகேந்திரன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

வடசென்னையின் பிரபல தாதாவாக அறியப்பட்ட நாகேந்திரன், உடல்நலக் குறைவால் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் இன்று (அக். 8) உயிரிழந்தார்.

கரூர் சம்பவம்: வதந்திகளை நம்பாதீங்க, கல்லடிகளை நான் தாங்க வேண்டும் - ராஜ்மோகன் உருக்கம்!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தால் தனிப்பட்ட முறையில் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்த தவெக செய்தித் தொடர்பாளர் ராஜ்மோகன், யாரும் வதந்திகளை நம்ப வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.