K U M U D A M   N E W S

மாநிலங்களவை தேர்தல்: அதிமுக, திமுக வேட்பாளர்கள் இன்று வேட்புமனு தாக்கல்!

மாநிலங்களவை உறுப்பினா் பதவிக்கான தோ்தலில் அதிமுக, திமுக வேட்பாளா்கள் மற்றும் மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசன் ஆகியோா் இன்று வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளனா்.

பாஞ்சாலங்குறிச்சியில் துரை வைகோ கெத்து.. செண்டிமெண்ட் சிக்கலில் மதிமுக?

கட்டபொம்மன் கோட்டைக்குப் போனால் பதவிக்கு ஆபத்து என்கிற சென்டிமென்டை உடைத்து கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்து கெத்து காட்டிய மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோவுக்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியிருப்பது தான் பாஞ்சாலங்குறிச்சியின் பஞ்சாயத்தாக உள்ளது.

மாநிலங்களவை தேர்தல்: அதிமுக-திமுக வேட்பாளர்கள் நாளை வேட்பு மனு தாக்கல்!

தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் நாளை வேட்பு மனு தாக்கல் செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதே நேரத்தில், திமுக வேட்பாளர்களும் நாளை வேட்புமனுத்தாக்கல் செய்வார்கள என்று தகவல் வெளியாகியுள்ளது.

மக்கள்தொகைக் கணக்கெடுப்பை ஒத்திவைத்து பாஜக சதி - முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சனம்

மக்கள்தொகைக் கணக்கெடுப்பை ஒத்திவைத்து சதித்திட்டத்தை பா.ஜ.க. வெளிப்படையாக அறிவித்துள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தவெகவில் அதிருப்தி..? அறிவாலயத்தில் ஆனந்தம்..? திமுகவின் அடுத்த மூவ்!

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் அதிருப்தி நிர்வாகிகளில் எண்ணிக்கை சற்று உயர்ந்து வருவது அறிவாலய வட்டாரத்தில் ஆனந்தத்தை பொங்கச் செய்திருப்பதாக கூறப்படுகிறது இதனால் அந்த அதிருப்தி நிர்வாகிகளில் பட்டியல திமுக கையில் எடுத்திருப்பதாக கூறப்படுகிறது

நீதிமன்றத்திற்கு பயந்து ஆளுநர் மசோதாவுக்கு ஒப்புதல் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

ஜனநாயகம், சமூகநீதி, சமத்துவம், சகோதரத்துவம் , மதசார்பின்மைக்காக போராடியவர் கருணாநிதி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

கருணாநிதி பிறந்தநாள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

அண்ணா பல்கலை வழக்கில் தீர்ப்பு: SIRஐ காப்பாற்றியது யார் ?- இபிஎஸ் கேள்வி

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் தனது தொடர் போராட்டத்தால் குற்றவாளிகளில் ஒருவனான திமுக அனுதாபி ஞானசேகரனுக்கு தண்டனையை சாத்தியப்படுத்தியுள்ளது அதிமுக என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சின்ன புத்தி கொண்ட சிலரின் எண்ணம் தவிடுபொடியாகியுள்ளது- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

பெண்கள் பாதுகாப்பு பற்றி வேடம் போடுபவர்களுக்குச் செயலால் பதில் அளித்திருக்கிறது தமிழ்நாடு காவல்துறை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டியுள்ளார்.

தி.மு.க பொதுக் குழு கூட்டத்தில் முப்படைக்கு தீர்மானம் நிறைவேற்றி இருக்கலாம் - தமிழிசை சௌந்தரராஜன் ஆதங்கம்

நாட்டின் முப்படை தளபதிகள் வீரர்கள் ஆகியோர் உயிரை பணயம் வைத்து ஆபரேஷன் சிந்தூரை நடத்திக் காண்பித்துள்ள நிலையில் மதுரை தி.மு.க பொதுக் குழு கூட்டத்தில் முப்படையை பாராட்டி ஒரு தீர்மானமாவது நிறைவேற்றி இருக்கலாம் என்று பா.ஜ.க மூத்த தலைவரும், முன்னாள் ஆளுநரமான தமிழிசை சௌந்தரராஜன் ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.

சீட் கொடுக்காத அதிமுக..! க்ரீன் சிக்னல் கொடுத்த திமுக..! கூட்டணியை மாற்றும் தேமுதிக?

மாநிலங்களவை சீட் கொடுக்காத நிலையில், அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறி, திமுகவுடன் கூட்டணி வைக்க தேமுதிக முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

தேமுதிக-விற்கு சீட் இல்லை..! 2 சீட்டையும் தூக்கிய அதிமுக..! எடப்பாடி போடும் கணக்கு என்ன?

அதிமுக வசமுள்ள இரண்டு ராஜ்யசபா சீட் யாருக்கு என்பதில் இழுபறி நீடித்த நிலையில், இரண்டையும் நாங்களே எடுத்துக் கொள்கிறோம் என்று கூறி கூட்டணிக்கு கல்தா கொடுத்துள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி. இரண்டு ராஜ்யசபா சீட்டும் அதிமுக எடுத்துக் கொண்டுள்ளதால், தேமுதிகவின் நிலை என்ன? விரைவில் தெரியவரும்.

இபிஎஸ் குறித்த பேச்சு – வருத்தம் தெரிவித்த ஆதவ் அர்ஜூனா

ஜனநாயகப்பூர்வ பொது வாழ்வில் எதிர்கொள்ளும் ஒவ்வொரு நிகழ்வையும் எனது அரசியல் வாழ்வில் ஒரு கற்றலாகவே நான் எடுத்துக்கொள்கிறேன்.

தேமுதிகவுக்கு சீட்டு கொடுக்காத அதிமுக... திமுகவுக்கு நன்றி சொன்ன பிரேமலதா

திமுக பொதுக்குழுவில் விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்

கருணாநிதி பிறந்தநாள் செம்மொழி நாளாக கொண்டாடுவோம்-திமுக பொதுக்குழுவில் தீர்மானம்

சாதிவாரிக் கணக்கெடுப்பை விரைவாகவும் முறையாகவும் நடத்திட வேண்டும் என உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் திமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதிமுக மாநிலங்களவை வேட்பாளர்கள் அறிவிப்பு... தேமுதிகவுக்கு 2026ல் சீட் என உறுதி

அதிமுகவின் வேட்பாளர்களாக இன்பதுரை, தனபால் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர். தேமுதிகவிற்கு 2026ல் ஒரு ராஜ்ய சபா சீட் வழங்கப்படும் எனவும் உறுதி

மதுரையில் தொடங்கியது திமுக பொதுக்குழு – உதயநிதிக்கு முக்கிய பொறுப்பு?

இன்றைய பொதுக்குழு வரவிருக்கும் சட்டமன்றத்தேர்தலை நோக்கி திமுகவின் நகர்வை வலுப்படுத்தும் ஒரு முக்கியமான கட்டமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கோவையில் கொரோனா பரவல் இல்லை - கல்லூரி முதல்வர் நிர்மலா விளக்கம்

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனோ பரவல் இல்லை என்றும், கட்டாய முக கவசம் என தவறான செய்தி குறித்து விசாரணை நடத்தப்படும் என முதல்வர் நிர்மலா விளக்கம் அளித்துள்ளார்.

பதற்றம் வேண்டாம்.. முககவசம் கட்டாயமில்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள், வயதானவர்கள் முகக்கவசம் அணிவது நல்லது. வெவ்வேறு பெயர்களால் வரக்கூடிய கொரோனா பாதிப்புகளால் பெரிய அளவிலான பாதிப்புகள் ஏற்படுவதில்லை, தற்போது பரவி வரும் கொரோனாவால் பொதுமக்கள் யாரும் பதற்றப்பட வேண்டியதில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டியளித்துள்ளார்.

கோலடி திட்டத்தை மாற்றம் செய்ய முதலமைச்சரால் மட்டுமே முடியும் - திருமாவளவன்

திருவேற்காடு கோளடி கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் திட்டத்தை மாற்றம் செய்வதற்காக முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்து இடமாற்றம் செய்யப்படும் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.

திருப்பதி போறீங்களா? இந்த செய்தி உங்களுக்குத்தான்.. தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

திருப்பதி அலிபிரி நடைபாதையில் சிறுத்தை மற்றும் கரடிகளின் நடமாட்டம் இருப்பதால் இரவு 9.30 மணி முதல் காலை 5 மணி வரை அப்பகுதி வழியாக நடந்து செல்ல பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பெண்கள் ஆதரவை குறைக்கவே விஜய் திமுக அரசை விமர்சிக்கிறார் - அமைச்சர் ரகுபதி

திமுகவிற்கு பெண்கள் மத்தியில் இருக்கும் ஆதரவை குறைக்கவே திமுக அரசை பா.ஜ.க C- டீமான விஜய் குறை கூறுகிறார் என்று திருச்சியில் அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

பூஞ்ச் மக்கள் மறுவாழ்வு.. பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கடிதம்!

"பாகிஸ்தான் தாக்குதலால் பாதிக்கப்பட்ட பூஞ்ச், ஜம்மு காஷ்மீருக்கு மறுவாழ்வு தொகுப்பு வழங்க வேண்டும் பிரதமர் மோடிக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார்.

தேமுதிகவிற்கு ராஜ்யசபா கொடுக்க வேண்டியது அதிமுகவின் கடமை - பிரேமலதா விஜயகாந்த்

தே.மு.தி.க-விற்கு ஏற்கனவே 2 முறை எம்.பி. பதவி வந்த போது அன்புமணிக்கும், ஜி.கே.வாசனுக்கும் கொடுத்தார்கள். தேமுதிகவிற்கு ராஜ்யசபா கொடுக்க வேண்டியது அதிமுகவின் கடமை. இ.பி.எஸ் சொன்ன வார்த்தையை காப்பாற்ற வேண்டும் என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

பொள்ளாச்சி வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தலா ரூ.25 லட்சம் நிவாரணம்

பொள்ளாச்சி வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தலா ரூ.25 லட்சத்தை வங்கி கணக்கில் தமிழக அரசு வரவு வைத்துள்ளது.