K U M U D A M   N E W S
Promotional Banner

தமிழ்நாடு

ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணி பெண்.. கருணைத் தொகை வழங்கிய அதிகாரிகள்

ஓடும் ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணி பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு ரயில்வே அதிகாரிகள் கருணைத் தொகை 50 ஆயிரத்தை வழங்கினர்.

ரூ.2000 நோட்டுகளை மாற்றி தருவதாக கூறி மோசடி.. விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்

பழைய இரண்டாயிரம் ரூபாய் கருப்பு பணத்தை மாற்றி தருவதாக கூறி மோசடியில் ஈடுபட முயன்றவர்களை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின.

கோவை மத்திய சிறை கைதி வெளியிட்ட வீடியோவால் அதிர்ச்சி..  தனது உயிருக்கு ஆபத்து என புகார் 

கோவை மத்திய சிறையில் உள்ள கைதி ஒருவர் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறி வீடியோ வெளியிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

டி.என்.பி.எஸ்.சி :  தமிழகம் முழுவதும் இன்று குரூப் 2, குரூப் 2ஏ முதன்மைத் தேர்வு 

தமிழகம் முழுவதும் இன்று குரூப் 2, குரூப் 2ஏ பணியிடக்களுக்கான முதன்மைத் தேர்வு நடைபெறும் நிலையில் 82 தேர்வு மையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மேம்பாலத்தின் கீழ் குவியல் குவியலாக கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகள்..  நகராட்சி நிர்வாகம் அதிரடி 

நாமக்கல் மாவட்டத்தில் மேம்பாலத்தின் கீழ் காலாவதியான மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒழுங்குமுறை விற்பனை கூடம்... பயிர்களுக்கு விலை நிர்ணயம் செய்யாத நிர்வாகத்தை கண்டித்து சாலை மறியலில்

ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் உளுந்து பயிருக்கு முறையான விலை நிர்ணயம் செய்யாத விற்பனை கூட நிர்வாகத்தை கண்டித்து நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சிறுமிக்கு பாலியல் தொல்லை: பள்ளியை சூறையாடிய உறவினர்கள்..!

மணப்பாறையில் தனியார் பள்ளியில் 4ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுமிக்கு நடந்த கொடுமையை தட்டிக்கேட்கச் சென்ற உறவினர்கள் பள்ளியை அடித்து நொறுக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஓடும் ரயிலில் பெண்ணுக்கு கொடூரம் கேள்விக்குறியாகிறதா பெண்கள் பாதுகாப்பு....? ரயில் எண் - 22616-ல் நடந்தது என்ன?

சாலையில் நடந்து சென்ற பெண்ணை ஆட்டோவில் வைத்து கடத்தி பாலியல் தொல்லை கொடுத்ததாக ஏற்பட்ட பரபரப்பு அடங்குவதற்குள், ஓடும் ரயிலில் பெண் ஒருவர் தாக்கப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பது நெஞ்சை பதற வைக்கிறது. ஏன் இந்த நிலை? பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிறதா?

சிறுமியை கர்ப்பமாக்கிய டிரைவர் ஆசை வார்த்தை கூறி அத்துமீறல் கோவையில் நடந்த கொடுமை!

யில் சிறுமியை ஆட்டோ டிரைவர் ஒருவர் கர்ப்பமாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆசை வார்த்தை கூறி சிறுமியை ஒன்றரை ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்த நபர் சிக்கியது எப்படி? பார்க்கலாம் இந்த தொகுப்பில்..

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு... கைது செய்யப்பட்ட நாகேந்திரனின் உடல் நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய சிறை துறைக்கு உத்தரவு...!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நாகேந்திரனின் உடல் நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய சிறைத் துறைக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் சோகம்.. நடுவானில் மலேசிய பெண்ணிற்கு ஏற்பட்ட நெஞ்சுவலி..!

மஸ்கட்டில் இருந்து கோலாலம்பூருக்கு விமானம் சென்று கொண்டிருந்த போது நடுவானில் மலேசிய பெண்ணிற்கு திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டதால், சென்னையில் அவசரமாக தரையிறங்கியும் காப்பாற்ற முடியாமல் உயிரிழ்ந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

"முதல்வர் எங்கள சந்திக்கல" மாஞ்சோலை மக்களிடம் ஓரவஞ்சனை? நெல்லையில் பரபரப்பு!

நெல்லையில் கடந்த 8 மாதங்களாக போராடி வரும் மாஞ்சோலை தொழிலாளர்களை சந்திப்பதாக இருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவர்களை சந்திக்காமல் சென்றுள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான மக்கள் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் வெடித்த பரபரப்பு ஏற்பட்டது.

ஆமைகள் இனப்பெருக்க காலம்... விசைப்படகுகளை இயக்க தடை விதிக்க தமிழக அரசுக்கு பசுமை தீர்ப்பாயம் உத்தரவு..!

தமிழகத்தில் ஆமைகள் இனப்பெருக்க காலத்தில் அதிவேக விசைப்படகுகளை குறிப்பிட்ட பகுதியில் இயக்க தடை விதிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. 

பறிமுதல் செய்த 10 தங்க வளையல்களை திருப்பி ஒப்படைக்க வேண்டும் - சுங்கத்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு..!

இந்தியாவில் திருமண நிகழ்வின் போது பத்து தங்க வளையல்கள் அணிவது வழக்கம் என தெரிவித்த சென்னை உயர்நீதிமன்றம், சுங்கத்துறையால் பறிமுதல் செய்யப்பட்ட 135 கிராம் எடையுள்ள 10 தங்க வளையல்களை திருப்பி ஒப்படைக்க சுங்கத்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.

வயதான தம்பதிகளிடம் 10 லட்ச ரூபாய் எடுத்து மோசடி.. கல்லூரி மாணவி கைவரிசை..!

வயதான தம்பதியினரை கவனிப்பதற்காக பணியமர்த்தப்பட்ட கல்லூரி மாணவி, அவர்களிடம் இருந்து 10 லட்ச ரூபாயை எடுத்து மோசடி செய்துள்ளது அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சிறுவனுக்கு பாலியல் தொல்லை செல்போனில் இருந்த ரகசியம்? துணை நடிகர் போக்சோவில் கைது!

பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவனுக்கு துணை நடிகர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செல்போனில் இருந்த புகைப்படங்களை காட்டி, சிறுவர்களிடம் சில்மிஷம் செய்த துணை நடிகர் யார்..? இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்

ஓடும் ரயிலில் கர்ப்பிணி பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. கீழே தள்ளிவிட்டதால் பரபரப்பு

ஓடும் ரயிலில் கர்ப்பிணி பெண்ணிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டு கீழே தள்ளிவிட்ட நபரை ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் கைது செய்தனர்.

உரிய ஆவணமின்றி கொண்டுவரப்பட்ட பணம்.. இளைஞர்கள் இருவரிடம் விசாரணை

உரிய ஆவணமின்றி 75 லட்சம் ரூபாயை ஆந்திராவில் இருந்து காரில் கொண்டு வந்த இளைஞர்கள் இருவரிடம் வருமான வரித்துறை அதிகாரி விசாரணை மேற்கொண்டுள்ளார்.

தமிழகத்தில் நிலவும் கடும் பனிமூட்டம்.. சிரமத்திற்குள்ளான பொதுமக்கள்

தமிழகத்தில் நிலவும் அதிகப்படியான பனிமூட்டம் காரணமாக பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். மேலும், விமானங்கள் வருகைப்பாடு, புறப்பாடு தாமதமாகியுள்ளது.

முகத்தில் கொப்பளங்களுடன் வந்த பயணி.. குரங்கு அம்மை என்ற சந்தேகத்தால் பரபரப்பு

இலங்கையிலிருந்து வந்த திரிபுரா மாநில பயணி ஒருவருக்கு முகத்தில் கொப்பளங்கள் இருந்த நிலையில் குரங்கு அம்மனாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் அடிப்படையில் அதிகாரிகள் அவரை தனி ஆம்புலன்ஸ் மூலம் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பியதால்  விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

சட்டவிரோதமாக வீட்டை இடித்த வழக்கு: நடிகை கவுதமிக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு

சட்டவிரோதமாக தனது வீட்டை இடித்ததற்காக இரண்டு கோடி ரூபாய் இழப்பீடுக்கோரி வழக்கு தொடர அனுமதிக்கோரி நாச்சாள் என்பவர் தாக்கல் செய்த மனு குறித்து அதிமுக நிர்வாகியும் நடிகையுமான கவுதமி பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நம்மால் காவல்துறை இழுக்கு ஏற்படக்கூடாது எண்ணத்தோடு பணியாற்ற வேண்டும் - சென்னை காவல் ஆணையர் அருண் வேண்டுகோள்

சென்னையில் நடைபெற்ற காவலர்களின் நற்பணிக்காக முதலமைச்சர் காவலர் பதக்கம் வழங்கும் நிகழ்ச்சியில் நம்மால் காவல்துறை இழுக்கு ஏற்படக்கூடாது எண்ணத்தோடு பணியாற்ற வேண்டும் என்று சென்னை காவல் ஆணையர் அருண் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மத்திய அரசுக்கு எதிராக போராட்டம்... பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்திய வழக்கில்  பிப்ரவரி 20 தேதி தீர்ப்பு

மத்திய அரசுக்கு எதிராக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்திய வழக்கில்  விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பாலாஜிக்கு எதிரான வழக்கில் பிப்ரவரி 20 தேதி தீர்ப்பு அளிக்கபடும் என  சென்னை சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

"தேர்தல் ஆணையம் உள்கட்சி விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த முடியாது" - எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் வாதம்

இல்லாத அதிகாரத்தை எடுத்துக் கொண்டு தேர்தல் ஆணையம் உள்கட்சி விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த முடியாது என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.

அரசு வேலைக்காக கணவன் கொலை? மனைவி மீது சந்தேகம் வெளியான அதிர்ச்சி தகவல்!

அரசு வேலைக்காக, மனைவியே அவரது கணவனை கொலை செய்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டு பகீர் கிளப்பியுள்ளது. உயிரிழந்தவரின் உடலில் காயங்கள் வந்தது எப்படி..? இது திட்டமிட்ட கொலையா..? என்ன தான் நடந்தது..? விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு...