சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வானிலை ஆய்வு மையத்தில் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் அமுதா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக திருத்தணியில் ஆறு சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. தென்மேற்கு பருவமழை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் தீவிரமாக உள்ளது.
நீலகிரி கோவை தென்காசி திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்துள்ளது தேனி மற்றும் விருதுநகர் மாவட்டத்தில் அநேக இடங்களில் மழை பெய்துள்ளது அடுத்த ஐந்து நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை எதுவும் இல்லை என்றார்.
மார்ச் ஏப்ரல் மே ஆகிய மூன்று மாத காலத்தை கோடை மழை தமிழகத்தில் 25 சென்டிமீட்டர் இயல்பான மழையின் அளவு 13 சென்டிமீட்டர் இயல்பை விட 97 விழுக்காடு அதிகமாக மழை பதிவாகியுள்ளது.
கோடை மழை சென்னையில் 12 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது இயல்பான மலையின் அளவு 5 cm இது இயல்பை விட 129 சதவீதம் அதிகமாக பதிவாகியுள்ளது. கோடை மழை 29 மாவட்டங்களில் இயல்பை விட மிக அதிகமாக மழை பதிவாகியுள்ளது. 11 மாவட்டங்களில் இயல்பை விட அதிகமாக மழை பதிவாகியுள்ளது.
கடந்த 8 நாட்களில் 23ஆம் தேதியிலிருந்து 31ஆம் தேதி வரை அதிகபட்சமாக அவிலாஞ்சியில் 141 செண்டிமீட்டர் மழையும், சின்னக்கல்லாரில் 101 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. மார்ச், ஏப்ரல், மே மாத காலத்தில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் யை தாண்டிய நாட்கள் மற்றும் மாவட்டங்கள் விவரம்
இந்த மூன்று மாத காலகட்டத்தில் வேலூர் மாவட்டத்தில் 16 நாட்கள் 40 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது. கரூரில் பத்து நாட்கள் 40 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. ஈரோட்டில் - மே 15 ஆம் தேதி அதிகபட்சமான வெப்பநிலை 41.2. டிகிரி செல்சியஸ், வேலூர் - மே 4,7 ஆம் தேதி 41 டிகிரி செல்சியஸ், மதுரையில் - மே 13, 14 ஆம் தேதி 41 டிகிரி செல்சியஸ் வெயில் பதிவாகியுள்ளது.
சென்னையில் இந்த மூன்று மாத கால இடைவெளியில் ஒரு நாள் கூட 40 டிகிரி வெயில் தொடவில்லை... மே 4 5 ஆகிய தேதியில் 39.6 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் ஒரே நாள் 40 அடி 41 டிகிரி வெயில் பதிவாகி இருந்தது சென்னையில் ஆனால் இந்த ஆண்டு ஒரு நாள் கூட 40 டிகிரி வெயில் தொடவில்லை என்றார்.
தென்மேற்கு பருவமழை 26, 27ஆம் தேதி தமிழகத்தில் தொடங்கி பல்வேறு மாவட்டங்களில் பரவியது... தென்மேற்கு பருவ மழையின் காலகட்டம் பொதுவாக ஜூன் ஒன்றாம் தேதி முதல் செப்டம்பர் 30ம் தேதி வரையில்தான் தான்.
இந்தியாவில் 106 விழுக்காடு இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை இயல்பை விட அதிகமாக இருக்கும். 87 சென்டிமீட்டர் தான் இயல்பாக மென்மேற்கு பருவமழை கால கட்டத்தில் இந்தியாவில் பதிவாக கூடிய மழையின் அளவாக உள்ளது.
தென்மேற்கு பருவ மழை தமிழ்நாட்டில் இயல்பான மழையின் அளவு 33 சென்டிமீட்டர்.. ஆனால் இந்த ஆண்டு 110 விழுக்காடை விட அதிகமாக எதிர்பார்க்கப்படுகிறது. 36 சென்டி மீட்டருக்கு மேல் பதிவாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
ஜூன் மாதத்தில் வட உள் மாவட்டங்களில் இயல்பை விட குறைவாக மழை பதிவாக வாய்ப்புள்ளது மற்ற மாவட்டங்களில் இயல்பையும் இயல்பை விட அதிகமாகவும் மழைக்கு வாய்ப்புள்ளது.
அடுத்து இரண்டு நாட்களுக்கு தமிழக கடலோரப் பகுதிகள் மன்னர்வலை கூட குமரி கடல் பகுதிகளுக்கு சூறாவளி காற்று 45 லிருந்து 65 கிலோ மீட்டர் வேகத்தில் வீச வாய்ப்பு. வங்க கடல் மற்றும் அரபிக்கடல் பகுதியில் ஜூன் நான்காம் தேதி வரை மத்திய கடல் பகுதிகளுக்கு செல்லக்கூடாது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இன்று 36லிருந்து 37 டிகிரி செல்சியஸ் இன்று பதிவாக வாய்ப்புள்ளது வானம் பொருளும் மிக மூட்டத்துடன் காணப்படும் லேசான மழை எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று நுங்கம்பாக்கத்தில் மூன்று சென்டிமீட்டர் மழையும் மீனம்பாக்கத்தில் இரண்டு சென்டிமீட்டர் மழையும் பதிவாகியது என கூறினார்.