தமிழ்நாடு

7வது மாநில நிதி ஆணையம் அமைப்பு.. அரசாணை வெளியீடு!

தமிழ்நாட்டின் நிதிப் பகிர்வு குறித்துப் பரிந்துரைகளை வழங்குவதற்காக 7-வது மாநில நிதி ஆணையத்தை அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

7வது மாநில நிதி ஆணையம் அமைப்பு.. அரசாணை வெளியீடு!
7வது மாநில நிதி ஆணையம் அமைப்பு.. அரசாணை வெளியீடு!
நகர்ப்புர மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் நிதி நிலைமை குறித்து ஆய்வு செய்து மாநில அரசு வழங்கிட வேண்டிய நிதிப்பகிர்வு குறித்து உரிய பரிந்துரைகளை வழங்கிடும் இந்த ஆணையம், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி அமைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு, உள்ளாட்சி அமைப்புகளின் நிதி நிலையை மேம்படுத்தும் நோக்கில் 7-வது மாநில நிதி ஆணையத்தை அமைக்க உத்தரவு பிறப்பித்துள்ளது. ஓய்வு பெற்ற மூத்த ஐஏஎஸ் அதிகாரி திரு. அலாவுதீன் தலைமையில் இந்த ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் மொத்தம் 6 பேர் கொண்ட குழு இடம் பெற்றுள்ளனர்.

இந்த ஆணையத்தின் முக்கிய பணி, மாநிலத்தின் நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் தற்போதைய நிதி நிலையை விரிவாக ஆய்வு செய்தல் மற்றும் எதிர்கால நிதி தேவைகளை கணக்கிட்டு, நிதி பகிர்வுக்கான பரிந்துரைகளை வழங்குவதாகும். உள்ளாட்சி அமைப்புகளுக்கு மாநில அரசால் வழங்கப்படும் நிதி, ஆதாயப் பகிர்வு, செலவின ஒதுக்கீடு உள்ளிட்ட விஷயங்களில் வெளிப்படைத்தன்மை மற்றும் சமநிலையை ஏற்படுத்தும் வகையில் பரிந்துரைகள் அளிக்கப்படவுள்ளது.

இக்குழு, உள்ளாட்சி நிறுவனங்களின் வருமானம், செலவுகள், வருவாய்ப்படும் திறன், திட்டநிதி பயன்பாடு, நிர்வாக திறன் ஆகியவற்றை முழுமையாக மதிப்பீடு செய்யும். இதில் மக்கள் சேவைகளின் தரம், அடிப்படை வசதிகள் வழங்கும் நிலை, மற்றும் ஊழியர்களின் நிர்வாக திறன் உள்ளிட்ட அம்சங்களும் சேர்க்கப்படுகின்றன.

அத்துடன், நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகள் என உள்ளாட்சி அமைப்புகளின் அனைத்து நிலைகளிலும் நிதி தேவைகள் எப்படி மாறுபடுகின்றன என்பதையும் குழு ஆராயும் என்று தெளிவுப்படுத்தியுள்ளது.

இந்த 7வது மாநில நிதி ஆணையம், தனது பரிந்துரைகளை தமிழ்நாடு அரசிற்கு தகுந்த காலக்கெடுவில் அளிக்க எதிர்பார்க்கப்படுகிறது. அதன் அடிப்படையில், உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதி ஒதுக்கீடு மற்றும் நிர்வாக முன்னேற்றங்கள் மேற்கொள்ளப்படும். இந்த நடவடிக்கை, மாநிலத்தில் உள்ளாட்சி நிதி மேலாண்மையில் புதிய பரிமாணங்களை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.