தமிழ்நாடு

அருணாச்சலேஸ்வரர் கோயிலில் பரபரப்பு.. கொளுத்தும் வெயிலில் தரிசனத்திற்காக காத்திருக்கும் பக்தர்கள்!

கொளுத்தும் வெயிலில் நீண்ட வரிசையில் அருணாச்சலேஸ்வரரை தரிசிக்க காத்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காத்திருக்கின்றனர். நீண்ட வரிசையில் காத்திருந்த ஆந்திர மாநில பக்தர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ளும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அருணாச்சலேஸ்வரர் கோயிலில் பரபரப்பு.. கொளுத்தும் வெயிலில் தரிசனத்திற்காக காத்திருக்கும் பக்தர்கள்!
கொளுத்தும் வெயிலில் தரிசனத்திற்காக காத்திருக்கும் பக்தர்கள்!
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாகவும் விளங்கக்கூடிய திருவண்ணாமலை மாநகரில் அமைந்துள்ள அருணாச்சலேஸ்வரர் கோவிலில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும் பௌர்ணமி உள்ளிட்ட நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்களும் திருவண்ணாமலைக்கு வருகை தந்து அண்ணாமலையார் உண்ணாமலை அம்மனை வழிபட்டு கோவில் பின்புறம் உள்ள 2668 அடி உயரம் கொண்ட மலையை சிவனாக எண்ணி 14 கிலோ மீட்டர் கொண்ட கிரிவலப் பாதையில் கிரிவலம் வந்து அண்ணாமலையாரை வழிபட்டு செல்கின்றனர்.

கடந்த சில மாதங்களாக திருவண்ணாமலைக்கு ஆந்திரா கர்நாடகா தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு வெளி மாநில பக்தர்களும் திரை பிரபலங்களும் அதிக அளவில் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர், தற்பொழுது கோடை விடுமுறை மற்றும் ஞாயிறு விடுமுறை தினம் என்பதால் அருணாசலேஸ்வரர் கோவிலில் அதிகாலை நடை திறக்கப்பட்டு அண்ணாமலையார் உண்ணாமலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது, அதனை தொடர்ந்து காலை 4 மணி முதல் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர், காலை முதலே பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

குறிப்பாக அருணாசலேஸ்வரர் கோவிலின் வடக்கு திசையில் அமைந்துள்ள அம்மணி அம்மன் கோபுரம் அருகே நீண்ட வரிசையில் கொளுத்தும் வேலையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் அருணாசலேஸ்வரர் தரிசிக்க காத்திருக்கும் நிலையும், பக்தர்கள் வெயிலின் தாக்கத்தை தாங்க முடியாமல் தரையில் அமர்ந்து காத்திருக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது, அதோடு மட்டுமில்லாமல் கோவிலில் உள்ளே சென்ற ஆந்திர மாநில பக்தர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ளும் நிலை உருவாகியுள்ளது.

அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு ஆந்திரா தெலுங்கானா கேரளா கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் கூட்டம் அதிகரித்து அலைமோதி வருகிறது.