தமிழ்நாடு

பொள்ளாச்சி வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தலா ரூ.25 லட்சம் நிவாரணம்

பொள்ளாச்சி வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தலா ரூ.25 லட்சத்தை வங்கி கணக்கில் தமிழக அரசு வரவு வைத்துள்ளது.

பொள்ளாச்சி வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தலா ரூ.25 லட்சம் நிவாரணம்
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள்
கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் கடந்த 2019ம் ஆண்டு இளம் பெண்களை மிரட்டி ஆபாசமாக வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை, கூட்டு பாலியல் செய்தாக 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்து சி.பி.ஐ போலீசார் விசாரணை நடத்தி முடித்து உள்ளனர்.

ரூ.25 லட்சம் நிவாரணம்

இந்த வழக்கில் கோவை மகளிர் நீதிமன்றத்தில் கடந்த 13ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டு, 9 பேர் குற்றவாளிகள் சாகும் வரை ஆயுள் தண்டனை எனவும் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு 85 லட்சம் நிவாரணம் அறிவித்து நீதிபதி நந்தினி தேவி தீர்ப்பு வழங்கினார்.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண் A-க்கு ரூ.2 லட்சம், B-க்கு ரூ.15 லட்சம், C-க்கு ரூ.10 லட்சம், D-க்கு ரூ.10 லட்சம், E-க்கு ரூ.8 லட்சம், Gக்கு ரூ.15 லட்சம், H-க்கு ரூ.25 லட்சம் இழப்பீடு என மகளிர் நீதிமன்றம் இழப்பீடு அறிவித்தது. ( F பாதிக்கப்பட்ட பெண் இறுதி சாட்சியத்திற்கு வரவில்லை ) மேலும் பாதிக்கப்பட்ட பெண்கள் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.25 லட்சம் என நிவாரணத்தொகையை உயர்த்தி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

தமிழக அரசு நடவடிக்கை

இந்நிலையில் தீர்ப்பு வழங்கி 15 நாட்களில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தமிழ்நாடு அரசு அறிவித்த நிவாரணத்தொகை தலா ரூ.25 லட்சம் நிவாரணம் தொகையை பாதிக்கப்பட்ட பெண்களின் வங்கி கணக்கில் வரவு வைத்து உள்ளனர். நீதிமன்றம் அறிவித்த 85 லட்சம் இழப்பீடு விரைவில் பாதிக்கப்பட்ட பெண்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.