சிவகங்கையில் நடைபெறவிருக்கும் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
மாணவிக்கு வழங்கும் நீதி
அப்போது, அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் குறைந்தபட்ச தண்டனை கொடுக்குமாறு கேட்கப்பட்டுள்ளது குறித்த கேள்விக்கு, தீர்ப்பை முன்கூட்டியே கணிக்க முடியாது.குற்றம் சாட்டப்பட்டவர்கள் எல்லாரும் தண்டனையை குறைக்க சொல்லி கேட்பது இயல்புதான். குற்றம் சாட்டப்பட்டவர் தனது குடும்பத்தினரை பாதுகாக்க வேண்டும். அப்பா,தங்கை உள்ளதாக தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட மாணவிக்கும் குடும்பம் உள்ளது என்பதை பார்க்க வேண்டும். பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதிபதி வழங்கக்கூடிய தீர்ப்பு என்பது அவருக்கான நீதியாக இருக்க வேண்டும் தீர்ப்பாக இருக்கக் கூடாது என பேசினார்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் அரசு போக்குவரத்துக் கழகமாக பெயர் மாற்றம் செய்யப்படுவதாக வெளிவந்த செய்தி குறித்து கேள்விக்கு, தமிழ்நாடு அரசு என்று சொல்வதற்கு அவ்வளவு அமாவாணமாக உள்ளது.தமிழ்நாடு அரசு என்று சொல்வதற்கு பதிலாக அரசு என்று சொல்கிறார்கள் அது எந்த அரசு என்றால் கர்நாடக அரசா? கேரளா அரசா? என கேள்வி எழுப்பிய சீமான் வரவேற்பு பலகைககளில் ஆங்கிலத்தில் பெயர் வைக்கிறார்கள். அதை ஏன் தமிழில் எழுதக்கூடாது. எதில் அக்கறை செலுத்துகிறார்கள். பசும்பொன் தேவர் நினைவிடத்திற்கு ஆண்டுதோறும் செல்கிறோம், அந்தப் பாதைகளில் மரக்கன்றுகள் ஏதும் வைத்துள்ளார்களா? கொடி கம்பங்களை தான் நட்டு வைக்கிறார்கள் என்றார்.
தவெகவினர் என்ன குற்றம் செய்தார்கள்?
சென்னை அருகே நடந்த தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கிய தமிழக வெற்றிக்கழகத்தினர் இந்த விவகாரத்தில் அரசியல் செய்கிறார்கள் என காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப் பெருந்தகை கூறியது குறித்த கேள்விக்கு , பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதில் என்ன அரசியல் செய்யப் போகிறார்கள்.
தமிழக வெற்றிக்கழகத்தின் பெண் பிள்ளைகள் நிர்வாகிகள் உதவும்போது அதைத்தடுத்து நிறுத்தி வயிற்றில் மிதிக்கும் அளவுக்கு என்ன குற்றம் செய்தார்கள். அது தேச துரோகம் ஆகிவிட்டதா? அரசியல் பேசும் தலைவர்கள் எது அரசியல் என்று ஒரு பட்டியலை வெளியிட்டால் நாங்கள் அதை மட்டும் பேசி விட்டு செல்கிறோம். எதுதான் அரசியல் இலங்கைத் தமிழர்கள் கொல்லப்படுவது, மீனவர்கள் கொல்லப்பபடுவது குறித்து பேசினால் அரசியல் என்கிறார்கள். பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கியது அரசியல் அல்ல உதவி என்றார். எல்லாவற்றிலும் தர்மத்தை கடைபிடிப்பவர்கள் கூட்டணியில் மட்டும் தர்மம் வாழ்கிறது.
எதற்காக வரி கட்டுகிறீர்கள்
கூட்டணி தர்மத்திற்காக இதுபோன்று பேசுவதை விடுத்து மனசாட்சியுடன் செல்வப்பெருந்தகை பேசுகிறாரா? காங்கிரஸ் -தவெக உடன் கூட்டணி வைத்திருந்தால் இப்படி பேசுவாரா? கல்விக்கு நிதி கொடுக்கவில்லை என தமிழக முதலமைச்சர் குற்றம் சாட்டு குறித்து கேள்விக்கு, மோடியை சந்தித்து மாட்டு வியாபாரி போல் கைகுலுக்கி பேசியபோது நிதி பற்றி பேச வேண்டியதுதானே.மூன்று நிதி ஆயோக் கூட்டங்களை புறக்கணித்துவிட்டு, இப்போதுசெல்கிறார்.
நிதி கொடுக்கவில்லை என்றால் எதற்காக வரி செலுத்துகிறீர்கள். வரி செலுத்தாமல் நிறுத்தினால் மறுபடியும் ed வரும். நூலகம், நினைவிடம், சிலைகள் கட்டுவதற்கு மட்டும் நிதி எங்கிருந்து வருகிறது. அவர்களது சொத்தை விற்று கட்டுகிறார்களா என சீமான் கேள்வி எழுப்பினார். ஜூன் 22 ஆம் தேதி மதுரை நடைபெறும் முருக பக்தர்கள் மாநாட்டில் கலந்து கொள்வீர்களா?அழைப்பு கொடுத்திருக்கிறார்களா? என்ற கேள்விக்கு, அழைப்பு கொடுப்பார்கள். இந்த நேரத்தில் எனக்கு வேறு போராட்டம் உள்ளது. ஆடு மாடுகளின் மாநாடு மதுரையில் வைத்திருக்கிறேன். அதில் கலந்து கொள்வேன் என்றார்.
வெட்கமாக இல்லையா?
ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண் தமிழக வருகையை எப்படி பார்க்கிறீர்கள் என்ற கேள்விக்கு, பிஜேபியுடன் கூட்டணி வைத்திருப்பதால் அவரை பாஜகவினர் தமிழகத்திற்கு அழைத்திருக்கலாம். அதை நான் பேச வேண்டியது இல்லை என்ற சீமானிடம் தமிழகத்தில் நிறைய பிரச்சனைகள் இருக்கிறது. அதை ஜன சேனா தீர்த்து வைக்கும் என பவன் கல்யாண் கூறியது குறித்த கேள்விக்கு, என்ன பிரச்னையை தீர்த்து வைக்கப் போகிறார் என கேள்வி எழுப்பினார்.
தமிழகத்தில் உள்ள பிரச்சனைகளை தற்போது ஆட்சியில் இருக்கும் திமுக எத்தனை பிரச்சனைகளை தீர்த்து வைத்துள்ளது. தமிழகத்தில் ஒரு லட்சம் போராட்டங்களுக்கு அனுமதி அளித்துள்ளோம் என தமிழக முதல்வர் கூறியுள்ளார். ஒரு லட்சம் பிரச்சனைகளை தீர்த்து வைத்தேன் என்று கூறியிருந்தால் பரவாயில்லை. ஒரு லட்சம் போராட்டத்திற்கு அனுமதி அளித்துள்ளோம் என்று கூறினால், அது நல்லாட்சி என்று சொன்னால் வெட்கமாக இல்லையா? என்றார்.
நல்லாட்சி என்று எப்படி ஏற்றுக்கொள்வது?
10 லட்சம் கோடி கடன் வைத்துவிட்டு நல்லாட்சி, வளர்ச்சி என்று சொன்னால் எப்படி ஏற்றுக்கொள்வது.தமிழகத்தில் பல்வேறு பிரச்னைகள் உள்ளது என்று கூறுகிறீர்கள். ஆனால் 2026 ல் மீண்டும் திமுக ஆட்சியமைக்கும் என இந்தியா டுடே கருத்துக்கணிப்பு குறித்து கேள்வி, விரும்புகிறார்கள் உங்களுக்கு தெரிகிறது .இவ்வளவு பிரச்சினைகள் உள்ளது என்று திமுக மீண்டும் ஆட்சிக்கு வர விரும்பினால், ஓட்டை அவர்களுக்கு போடுங்கள், வர வேண்டாம் என்றால் வேறொருவருக்கு போடுங்கள் என்றார்.