K U M U D A M   N E W S

விஜய்

விஜய் எங்கள் பிடியில் எப்படி இருக்க முடியும்? - கரூர் விபத்து குறித்து நயினார் நாகேந்திரன் சரமாரி கேள்வி!

கரூர் விபத்து குறித்து பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார். விஜய் எங்களின் பிடியில் எப்படி இருக்க முடியும்? எனக் கேள்வி எழுப்பிய அவர், திருவண்ணாமலை சம்பவம் குறித்து, காவல்துறை முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் இல்லை என்றும் கடுமையாக விமர்சித்தார்.

கரூரில் பாதுகாப்புக் குறைபாடு இருந்ததா? விஜய்-யின் 'ஒய் பிரிவு' அதிகாரிகளிடம் உள்துறை அமைச்சகம் விசாரணை!

கரூரில் 41 பேர் உயிரிழந்த நெரிசல் சம்பவம் தொடர்பாக, தவெக தலைவர் விஜய்-க்கு வழங்கப்பட்ட 'ஒய் பிரிவு' பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் விசாரணை நடத்தி வருகிறது. பாதுகாப்பில் குறைபாடு இருந்ததா மற்றும் கமாண்டோக்களின் செயல்பாடு குறித்து அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.

கரூர் துயர சம்பவம்: தவெக தலைவர் விஜய்யின் அடுத்த இரண்டு மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் ஒத்திவைப்பு!

கரூரில் 41 பேர் உயிரிழந்த சோகத்தைத் தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் அடுத்த இரண்டு வார மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாகத் தவெக தலைமைக்கழகம் அறிவித்துள்ளது.

அரசு மீது பழிபோடுவது விஜயின் கோழைத்தனம் - கரூர் துயரம் குறித்து எஸ்.வி. சேகர் கடும் தாக்கு!

நடிகர் விஜய் கூட்டத்தில் ஏற்பட்ட கரூர் நெரிசல் விபத்துக் குறித்துக் கடுமையாகப் பேசிய எஸ்.வி. சேகர், 10,000 பேர் மட்டுமே வருவார்கள் என்று அனுமதி பெற்றுவிட்டு, அரசு மீது பழிபோடுவது விஜயின் கோழைத்தனம் எனச் சாடியுள்ளார்

கரூர் துயரம்: ஆதவ் அர்ஜூனா அலுவலகத்திற்குச் சென்று வீடியோ கேட்ட போலீஸ்!

கரூரில் 41 பேர் உயிரிழந்த நெரிசல் சம்பவம் தொடர்பாக, தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா அலுவலகத்திற்கு வந்த கரூர் போலீசார், பரப்புரையின்போது எடுக்கப்பட்ட வீடியோ மற்றும் சிசிடிவி காட்சிகளைக் கேட்டு கடிதம் கொடுத்துள்ளனர். சர்ச்சைக்குரிய புரட்சி பதிவுக்காகச் சைபர் கிரைம் போலீசும் வழக்குப்பதிவு செய்துள்ளதால், ஆதவ் அர்ஜுனாவுக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது.

கரூர் நெரிசல் விவகாரம்: தவெக நிர்வாகிகள் குளறுபடியே காரணம் - ஐஏஎஸ் அமுதா விளக்கம்!

கரூர் விபத்துக் குறித்து அரசுத் தரப்பில் விளக்கம் அளித்த ஐஏஎஸ் அமுதா, தவெக நிர்வாகிகள் 10,000 பேர் வருவார்கள் எனக் கேட்டுவிட்டு, அதிகக் கூட்டத்தைக் கூட்டியதே துயரத்திற்குக் காரணம் என்று தமிழக அரசு சார்பில் ஊடகத்துறைச் செயலாளர் அமுதா ஐஏஎஸ் அளித்துள்ளார்.

தனுஷின் 'இட்லி கடை' படம் நாளை ரிலீஸ்: விறுவிறுப்பாக டிக்கெட் முன்பதிவு!

நடிகர் தனுஷ் இயக்கி நடித்துள்ள 'இட்லி கடை' திரைப்படம் நாளை (அக். 1, 2025) வெளியாகிறது. ராஜ்கிரண், அருண் விஜய், நித்யா மேனன் ஆகியோர் நடித்துள்ள இந்தப் ஃபேமிலி சென்டிமென்ட் படத்திற்கு டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

கரூர் துயரம்: விஜய் காலதாமதமும், தவெக குளறுபடிகளுமே காரணம் - திருமுருகன் காந்தி கடும் குற்றச்சாட்டு!

கரூரில் விஜய் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்ததற்கு, விஜய் குறித்த நேரத்துக்கு வராததும், தவெக நிர்வாகிகளின் ஒழுங்குபடுத்தத் தவறிய அலட்சியமுமே காரணம் என்று மே 17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.

என் வாழ்வில் வலி மிகுந்த தருணம்; அனைத்து உண்மைகளும் வெளியே வரும் - கரூர் சோகம் குறித்து விஜய் வேதனை!

கரூர் பரப்புரைக் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த துயரம் குறித்துத் தவெக தலைவர் விஜய் உருக்கமான அறிக்கை வெளியிட்டுள்ளார். 5 மாவட்டங்களுக்குச் செல்லாதது கரூரில் மட்டும் நடந்தது ஏன்? என்று காவல்துறையை மறைமுகமாகக் கேள்வி எழுப்பியுள்ள அவர், அனைத்து உண்மைகளும் வெளியே வரும் என்றும் தெரிவித்துள்ளார்.

கரூர் சோகத்துக்கு தவெக நிர்வாகிகள் குளறுபடியே காரணம் - வைகோ குற்றச்சாட்டு!

கரூரில் விஜய் கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்ததற்கு, தவெக நிர்வாகிகளின் முறையற்ற திட்டமிடலே காரணம் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கடுமையாகச் சாடினார். உயிரிழப்பு குறித்து வேதனை தெரிவித்த அவர், அரசு மற்றும் போலீசார் எடுத்த நடவடிக்கைகள் சரியே என்றார்.

TVK தலைவர் விஜய் தேர்தல் சுற்றுப்பயணம்: இன்று நாமக்கல், கரூர் மாவட்டங்களில் 3ஆம் கட்ட தேர்தல் பிரசாரம்!

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், தனது கட்சியின் 3ஆம் கட்ட தேர்தல் பரப்புரையை இன்று (செப்டம்பர் 27, 2025) நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் மேற்கொள்கிறார்.

நடிகர் விஜய்க்காகப் பால் விநியோகத்தை தடுத்த போலீஸ் - நடவடிக்கை எடுக்கக் கோரி பால் முகவர்கள் சங்கம் புகார்!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் நடிகர் விஜயின் நாமக்கல் வருகையையொட்டி, பால் விநியோகம் செய்யச் சென்ற பால் முகவர் சங்க நிர்வாகியைத் தடுத்து நிறுத்தி, மிரட்டிய போக்குவரத்து காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளது.

நல்லவர்கள் யாரும் காங்கிரசை விமர்சிக்க மாட்டார்கள்- செல்வப்பெருந்தகை

அரசியலைப் பற்றி தெரிந்து கொள்ள இபிஎஸ் காங்கிரஸ் தலைவர்களிடம் வந்தால் சொல்லிக்கொடுப்போம் என செல்வப்பெருந்தகை கருத்து

திமுகவை வீட்டுக்கு அனுப்புவோம்: “தமிழிசை கருத்து சரிதான்” – நயினார் நாகேந்திரன்

திமுகவை பாஜகவும், விஜய்யும் தான் வீட்டுக்கு அனுப்புவோம் என்ற தமிழிசை கருத்து சரிதான் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

‘96’ திரைப்படத்தின் 2ம் பாகத்திற்கான கதை தயார் - இயக்குநர் பிரேம்குமார்

'96' திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான கதை தயாராக உள்ளதாக இயக்குநர் பிரேம்குமார் தெரிவித்துள்ளார்.

எடப்பாடி மக்களுக்குக் கவலைப்பட்டிருந்தால் ஏன் வீட்டில் இருக்கிறார்? அமைச்சர் கே.என்.நேரு காட்டமான கேள்வி!

எடப்பாடி மக்கள் மீது கவலைப்பட்டிருந்தால் ஏன் வீட்டில் இருக்கிறார் என்று அமைச்சர் கே.என்.நேரு காட்டமான கேள்வி எழுப்பியுள்ளார்.

விஜய்க்கு கூடும் கூட்டம் வாக்குகளாக மாறும் – நடிகர் தாடி பாலாஜி நம்பிக்கை

தமிழ்நாட்டில் நிச்சயம் ஆட்சி மாற்றம் நிகழும் என நடிகர் தாடி பாலாஜி பேட்டி

“சிலர் எழுதிக்கொடுப்பதை தவறாக பேசுகிறார்கள்” – விஜய்க்கு அமைச்சர் ராஜகண்ணப்பன் பதிலடி

தமிழகத்தில் அலையாத்தி காடுகள் குறைவாக இல்லை என அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

இபிஎஸ் தவறுதலால் தவெக எதிர்க்கட்சியாக உருவெடுத்து வருகிறது- காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர்

அமித்ஷாவும், நிர்மலா சீதாராமனும் சொந்தக் கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு சிபிஐ, அமலாக்கத்துறையை பயன்படுத்தி வருகிறார்கள் என மாணிக்கம் தாகூர் எம்.பி குற்றச்சாட்டு

ஆள் வைத்து பொய் கதை பரப்புகிறார்கள் – விஜய் குற்றச்சாட்டு

ஒவ்வொரு நாளும் மக்களிடையே தவெகவுக்கு பெருகும் ஆதரவைக்கண்டு அஞ்சி நடுங்குகின்றனர் என விஜய் தெரிவித்துள்ளார்

“திமுக நேற்று முளைத்த காளான் அல்ல” –அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன்

கருப்பு ,சிவப்பு வேஷ்டி கட்டிக்கொண்ட சென்றாலே நம்மை அறியாமல் ஒரு கம்பீரம் வரும் என அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் பேச்சு

விஜய் செல்லும் இடங்களில் இதுபோன்ற செயல் சரியல்ல – நயினார் நாகேந்திரன்

விஜய் மற்ற தலைவர்களை ஒப்பிட்டு பேசுவதும் சரியானதாக இருக்காது என நயினார் நாகேந்திரன் கருத்து

நாகை, திருவாரூரில் விஜய் இன்று பரப்புரை- உற்சாக வரவேற்பளிக்க தவெகவினர் ஏற்பாடு

நாகை புத்தூர் அண்ணா சிலை சந்திப்பில் காலை 11 மணிக்கும், திருவாரூர் நகராட்சி அலுவலகம் அருகே தெற்கு வீதியில் பிற்பகல் 3 மணிக்கும் மக்கள் மத்தியில் விஜய் பேச உள்ளார்.

விஜய்யின் உயிருக்கு அச்சுறுத்தலா?-கூடுதல் பாதுகாப்பை கேட்கும் தவெக

சென்னை காவல் ஆணையரிடம் புகார் கொடுக்க தவெக முடிவு

விஜய் மக்கள் சந்திப்பு – தவெகவினருக்கு கட்சி தலைமை அறிவுறுத்தல்

விஜய் மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் நிலையில், தவெக தொண்டர்கள் பல்வேறு கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்க வேண்டும் என கட்சி தலைமை அறிவுறுத்தியுள்ளது.