K U M U D A M   N E W S
Advertisement

தமிழ்நாடு

TVK தலைவர் விஜய் தேர்தல் சுற்றுப்பயணம்: இன்று நாமக்கல், கரூர் மாவட்டங்களில் 3ஆம் கட்ட தேர்தல் பிரசாரம்!

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், தனது கட்சியின் 3ஆம் கட்ட தேர்தல் பரப்புரையை இன்று (செப்டம்பர் 27, 2025) நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் மேற்கொள்கிறார்.

நடிகர் விஜய்க்காகப் பால் விநியோகத்தை தடுத்த போலீஸ் - நடவடிக்கை எடுக்கக் கோரி பால் முகவர்கள் சங்கம் புகார்!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் நடிகர் விஜயின் நாமக்கல் வருகையையொட்டி, பால் விநியோகம் செய்யச் சென்ற பால் முகவர் சங்க நிர்வாகியைத் தடுத்து நிறுத்தி, மிரட்டிய போக்குவரத்து காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளது.

அமராவதி உணவகத்தில் 2-வது நாளாக ED சோதனை: சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் குறித்து தீவிர ஆய்வு!

சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் தொடர்பாக எழுந்த புகார்களின் அடிப்படையில், சென்னை டிடிகே சாலையில் உள்ள பிரபலமான அமராவதி உணவகம் மற்றும் அதன் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை (ED) அதிகாரிகள் இன்றும் இரண்டாவது நாளாக அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை ஐஐடி-யும், ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனமும் ஒப்பந்தம்.. மின்சார வாகனத் தொழில்நுட்பத்தில் ஊழியர்களுக்குச் சிறப்புப் பயிற்சி!

மின்சார வாகனத் தொழில்நுட்பம், ஆராய்ச்சி மற்றும் ஊழியர் திறன் மேம்பாட்டை ஊக்குவிக்க, சென்னை ஐஐடி மற்றும் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.

நாய் கடித்த தகராறு: உணவு டெலிவரி பாயும், வங்கி ஊழியரும் மோதல் - செருப்பால் பதிலடி!

சென்னையில் நாய் கடித்த விவகாரத்தில், வாடிக்கையாளரின் உணவு டெலிவரியை வாசலில் வைத்த கல்லூரி மாணவர் ஃபைசலுக்கும், வங்கி ஊழியர் சண்முகநாதனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு, செருப்பால் தாக்குதல் நடந்தது.

ஜெபத்திற்கு சென்றவர்கள் மீது தாக்குதல்: நெற்றியில் குங்குமம் பூசி மிரட்டல் - பா.ஜ.க, இந்து முன்னணி நிர்வாகிகள் மீது வழக்கு!

திருநெல்வேலி அருகே ஜெபத்திற்கு சென்றவர்களை வழிமறித்து, குங்குமம் பூசி, கொலை மிரட்டல் விடுத்த இந்து முன்னணி மற்றும் பா.ஜ.க நிர்வாகிகள் 3 பேர் மீது இந்திய நியாய சன்ஹிதா (INS) சட்டப் பிரிவுகளின் கீழ் சுத்தமல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

சென்னை விமான நிலையக் கோவிலில் அதிர்ச்சி.. சாமி தரிசனம் செய்ய வந்த பெண் பலி!

சென்னை விமான நிலைய வளாகத்தில் உள்ள சக்தி சந்தியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்த கோமதி (49), திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். இவர் இதய நோய்க்குச் சிகிச்சை பெற்று வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

விஜயதசமி அன்று அரசுப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு மாணவர் சேர்க்கை: விரைந்து செயல்பட உத்தரவு!

விஜயதசமி நாளில் அரசுப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு மாணவர்களைச் சேர்க்க நடவடிக்கை எடுக்கவும், சேர்க்கை விவரங்களை EMIS இணையதளத்தில் உள்ளீடு செய்யவும் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வி இயக்குனர் கடிதம் அனுப்பியுள்ளார்.

வாடிக்கையாளரைத் தாக்கி கத்தியைக் காட்டி மிரட்டிய வங்கி மேலாளர்.. பீளமேட்டில் செல்போன் வீடியோவால் பரபரப்பு!

கோவையில், தனது வங்கி கணக்கு முடக்கப்பட்டதற்குக் கேள்வி கேட்ட தொழிலதிபர் பிரஜித்குமார் மீது, தனியார் வங்கி மேலாளர் ஆட்களை ஏவி நடத்திய கொலைவெறித் தாக்குதல் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குரூப் 2 தேர்வு: 5.53 லட்சம் பேர் எழுத உள்ளனர் - TNPSC முக்கிய அறிவுறுத்தல்!

செப். 28 அன்று நடைபெறவுள்ள TNPSC குரூப் 2 தேர்வை 5.53 லட்சம் பேர் எழுத உள்ளனர். தேர்வர்கள் காலை 09:00 மணிக்கு மேல் தேர்வறைக்குள் நுழைய அனுமதியில்லை என TNPSC திட்டவட்டமாக அறிவித்துள்ளது.