ஒரு சில தினமாக ஓடும் ரயிலின் படியில் நின்றுக்கொண்டு ஆட்டம் ஆடி ரீல்ஸ் செய்த பெண்மணியின் வீடியோ திரும்பும் அத்தனை சமூக வலைத்தளங்களிலும் தீயாக பரவிக் கொண்டிருந்தது.
ஓடும் ரயிலின் படியில் நின்று ஆட்டம் போட்ட வீடியோவில் இருந்த பெண் கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அடுத்த தளவாய்புரத்தைச் சேர்ந்தவர் என கண்டறியப்பட்டுள்ளது. அவர் வெளியிட்டு இருந்த ரீல்ஸ் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதோடு, பெரும் சர்ச்சைக்கும் வித்திட்டது.
இந்திய ரயில்வே சட்டப்படி ஓடும் ரயில் ஆபத்தான முறையில் படியில் பயணம் செய்யக்கூடாது என இருக்கும் நிலையில், லைக்ஸ்காக இவ்வாறு ரீல்ஸ் செய்த பெண் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், இளம் பெண் தற்போது ஒரு மன்னிப்பு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், ”தான் செய்தது தவறு என்றும், இந்த சம்பவத்தால் தான் மன உளைச்சலுக்கு ஆளாகிவிட்டதாகவும்” தெரிவித்துள்ளார்.
மேலும், “தமிழ்நாடு மட்டுமின்றி மற்ற மாநிலங்களான கேரளா மற்றும் இதர பகுதிகளிலும் எனது வீடியோ அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. நான் செல்லும் இடங்களில் எல்லாம், ஏன் இப்படி செய்தாய்? என பலர் கேள்வி எழுப்புகின்றனர். வெளியில தல காட்ட முடியல, தன்னைப் போல் யாரும் ரீல்ஸ் போட வேண்டாம். நான் பண்ணது ரொம்ப தப்பு. நான் அப்படி ரீல்ஸ் எடுக்கும் போது எனக்கு ஏதாவது ஆயிருக்கலாம். கை,கால் கூட போயிருக்கலாம். தெரியாம பண்ணிட்டேன்.மன்னிச்சிடுங்க” என குறிப்பிட்டுள்ளார்.
ஓடும் ரயிலில் படியில் நின்று பயணம் செய்தவர்கள் எதிர்பாராத விபத்துகளில் சிக்கி உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்கதையாக நடைப்பெற்று வரும் சூழ்நிலையில் ஆபத்தை உணராது ஒரு சில லைக்ஸ்களுக்காக ரீல்ஸ் செய்த பெண்ணின் செயல் பலருக்கு அச்சத்தை உண்டாக்கியது. அந்த பெண் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஓடும் ரயிலின் படியில் நின்று பயணம் செய்வது, இந்திய ரயில்வே சட்டப்படி ஒரு கடுமையான குற்றமாகும். இது பயணிகளின் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும் செயல் என்பதால், ரயில்வே நிர்வாகம் இத்தகைய செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கிறது.
தண்டனை என்ன?
ரயில்வே சட்டம், குறிப்பாக பிரிவு 156 இன் படி, ஓடும் ரயிலின் படிக்கட்டில் அல்லது ஆபத்தான முறையில் பயணம் செய்வது சட்டவிரோதமானது. இந்த சட்டப் பிரிவின் கீழ், குற்றவாளிகளுக்கு ரூ.1,000 அபராதம் அல்லது 6 மாதம் வரை சிறை தண்டனை அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஓடும் ரயிலின் படியில் நின்று ஆட்டம் போட்ட வீடியோவில் இருந்த பெண் கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அடுத்த தளவாய்புரத்தைச் சேர்ந்தவர் என கண்டறியப்பட்டுள்ளது. அவர் வெளியிட்டு இருந்த ரீல்ஸ் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதோடு, பெரும் சர்ச்சைக்கும் வித்திட்டது.
இந்திய ரயில்வே சட்டப்படி ஓடும் ரயில் ஆபத்தான முறையில் படியில் பயணம் செய்யக்கூடாது என இருக்கும் நிலையில், லைக்ஸ்காக இவ்வாறு ரீல்ஸ் செய்த பெண் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், இளம் பெண் தற்போது ஒரு மன்னிப்பு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், ”தான் செய்தது தவறு என்றும், இந்த சம்பவத்தால் தான் மன உளைச்சலுக்கு ஆளாகிவிட்டதாகவும்” தெரிவித்துள்ளார்.
மேலும், “தமிழ்நாடு மட்டுமின்றி மற்ற மாநிலங்களான கேரளா மற்றும் இதர பகுதிகளிலும் எனது வீடியோ அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. நான் செல்லும் இடங்களில் எல்லாம், ஏன் இப்படி செய்தாய்? என பலர் கேள்வி எழுப்புகின்றனர். வெளியில தல காட்ட முடியல, தன்னைப் போல் யாரும் ரீல்ஸ் போட வேண்டாம். நான் பண்ணது ரொம்ப தப்பு. நான் அப்படி ரீல்ஸ் எடுக்கும் போது எனக்கு ஏதாவது ஆயிருக்கலாம். கை,கால் கூட போயிருக்கலாம். தெரியாம பண்ணிட்டேன்.மன்னிச்சிடுங்க” என குறிப்பிட்டுள்ளார்.
ஓடும் ரயிலில் படியில் நின்று பயணம் செய்தவர்கள் எதிர்பாராத விபத்துகளில் சிக்கி உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்கதையாக நடைப்பெற்று வரும் சூழ்நிலையில் ஆபத்தை உணராது ஒரு சில லைக்ஸ்களுக்காக ரீல்ஸ் செய்த பெண்ணின் செயல் பலருக்கு அச்சத்தை உண்டாக்கியது. அந்த பெண் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஓடும் ரயிலின் படியில் நின்று பயணம் செய்வது, இந்திய ரயில்வே சட்டப்படி ஒரு கடுமையான குற்றமாகும். இது பயணிகளின் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும் செயல் என்பதால், ரயில்வே நிர்வாகம் இத்தகைய செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கிறது.
தண்டனை என்ன?
ரயில்வே சட்டம், குறிப்பாக பிரிவு 156 இன் படி, ஓடும் ரயிலின் படிக்கட்டில் அல்லது ஆபத்தான முறையில் பயணம் செய்வது சட்டவிரோதமானது. இந்த சட்டப் பிரிவின் கீழ், குற்றவாளிகளுக்கு ரூ.1,000 அபராதம் அல்லது 6 மாதம் வரை சிறை தண்டனை அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.