வேளாண்மை அறிவியல் நிலையம் பாப்பாரப்பட்டி மூலம் தருமபுரி மாவட்டத்திலுள்ள 45 கிராமங்களில் தினம் 3 கிராமங்கள் வீதம் மூன்று விஞ்ஞானிகள் குழுக்களை கொண்டு வேளாண் வளர்ச்சிக்கான பிரச்சார இயக்கம் 29.05.2025 முதல் நடைப்பெற்று வருகிறது. இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக நேற்றைய தினம் திதியோபனஹள்ளி, பைரனய்கெகனஹல்லி மற்றும் கிட்ட னஹல்லி கிராமங்களில் விவசாயிகளுக்கு பிரச்சார விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டது. இதில், சுமார் 1223 விவசாயிகள் பங்கேற்று பயனடைந்தனர்.
இந்த பிரச்சாரத்தை திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் மா.அ.வெண்ணிலா துவக்கி வைத்து தலைமை உரையாற்றினார்கள். முனைவர் இரா.தங்கதுரை (கால்நடை அறிவியல் துறை விஞ்ஞானி) கால்நடை சார்ந்த அனைத்து தொழில்நுட்பங்களையும் எடுத்துரைத்தார்கள். முனைவர் மா.தெய்வமணி, பயிர்களில் நோய் கட்டுப்பாடு மற்றும் நோய் மேலாண்மைக்கான தொழில்நுட்பத்தை எடுத்துரைத்தார்கள்.
முனைவர் மா.சங்கீதா, பயிர்களுக்கான ஊட்டச்சத்து மேலாண்மை மற்றும் மண்வள பாதுகாப்பு சார்ந்த தொழில் நுட்பங்களை எடுத்துரைத்தார்கள். முனைவர் அப்புனு, முனைவர் அருண்குமார் (மத்திய கரும்பு ஆராய்ச்சி நிலையம், கோயம்புத்தூர்) அவர்கள் கலந்து கொண்டு கரும்பு வளர்ப்புக்கான புதிய தொழில்நுட்பங்களை எடுத்துரைத்தார்கள். முனைவர் சுரேஷ் குமார் (மத்திய வாழை ஆராய்ச்சி நிலையம்,திருச்சி) அவர்கள் கலந்து கொண்டு வாழை சாகுபடி தொடர்பான அனைத்து தொழில்நுட்பங்கள் குறித்து எடுத்துரைத்தார்.
வேளாண்மை துறை சார்ந்த திட்டங்களை விவசாயிகளுக்கு, முருகேசன் (உதவி வேளாண் அலுவலர்,பென்னாகரம்) எடுத்துரைத்தார். பிரசாந்த் (உதவி வேளாண் பொறியியல் அலுவலர்), சீனிவாசன் (தர்மபுரி வேளாண் பொறியியல் துறை) ஆகியோர் பிரச்சாரத்திற்கு தேவையான உதவிகளை செய்தனர்.கலை (வேளாண் உதவி தொழில் அலுவலர், ஆத்மா திட்டம் பென்னாகரம்) அவர்கள் கூட்டத்திற்கு தேவையான ஏற்பாடுகளை செய்தார்.
இந்த வேளாண் வளர்ச்சிக்கான பிரச்சார கூட்டத்தில் மத்திய மற்றும் மாநில அரசுகளின் திட்டங்கள் மக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. மேலும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக பயிர் பாதுகாப்பு, சாகுபடி முறை தொடர்பான தொழில்நுட்பங்களும் விவசாயிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது.
இந்த பிரச்சார கூட்டத்தில் 1223 விவசாயிகள் பங்கேற்ற நிலையில், விஞ்ஞானிகளுடன் நேரடியாக கலந்துரையாடி தங்களது சந்தேகங்களுக்கு விளக்கம் பெற்றனர். இந்த பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக அனைவருக்கும் தொழில்நுட்பங்கள் அடங்கிய கையேடு வழங்கப்பட்டது
இந்த பிரச்சாரத்தின் மூலம் காரீப் பருவத்திற்கேற்ற சாகுபடி தொழில்நுட்பங்கள், கால்நடை வளர்ப்பு தொழில்நுட்பங்கள், இயற்கை விவசாய நடைமுறைகள், மண் சுகாதார அட்டை அடிப்படையிலான பயிர் தேர்வு,உரங்களின் சீரான பயன்பாட்டை ஊக்குவித்தல், தகவல் தொழில்நுட்பம் மற்றும் நவீன உபகரணங்கள் பயன்பாடு மற்றும் அரசு திட்டங்கள் போன்றவற்றிற்கு முக்கியத்துவம் கொடுத்து விவசாயிகள் மத்தியில் எடுத்துரைக்க பட்டது.
வேளாண் வளர்ச்சிகான பிரச்சார இயக்கம், தர்மபுரி மாவட்டத்தில் வருகிற ஜூன் 12 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. எனவே, விவசாயிகள் அனைவரும் இந்த பிரச்சார கூட்டத்தில் தவறாமல் பங்கேற்று அரசின் திட்டங்கள் குறித்த தகவலையும், புதிய வேளாண் தொழில்நுட்பங்களையும், வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் மற்றும் மத்திய ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் மூலம் கேட்டறிந்து பயன்பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறது.
இந்த பிரச்சாரத்தை திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் மா.அ.வெண்ணிலா துவக்கி வைத்து தலைமை உரையாற்றினார்கள். முனைவர் இரா.தங்கதுரை (கால்நடை அறிவியல் துறை விஞ்ஞானி) கால்நடை சார்ந்த அனைத்து தொழில்நுட்பங்களையும் எடுத்துரைத்தார்கள். முனைவர் மா.தெய்வமணி, பயிர்களில் நோய் கட்டுப்பாடு மற்றும் நோய் மேலாண்மைக்கான தொழில்நுட்பத்தை எடுத்துரைத்தார்கள்.
முனைவர் மா.சங்கீதா, பயிர்களுக்கான ஊட்டச்சத்து மேலாண்மை மற்றும் மண்வள பாதுகாப்பு சார்ந்த தொழில் நுட்பங்களை எடுத்துரைத்தார்கள். முனைவர் அப்புனு, முனைவர் அருண்குமார் (மத்திய கரும்பு ஆராய்ச்சி நிலையம், கோயம்புத்தூர்) அவர்கள் கலந்து கொண்டு கரும்பு வளர்ப்புக்கான புதிய தொழில்நுட்பங்களை எடுத்துரைத்தார்கள். முனைவர் சுரேஷ் குமார் (மத்திய வாழை ஆராய்ச்சி நிலையம்,திருச்சி) அவர்கள் கலந்து கொண்டு வாழை சாகுபடி தொடர்பான அனைத்து தொழில்நுட்பங்கள் குறித்து எடுத்துரைத்தார்.
வேளாண்மை துறை சார்ந்த திட்டங்களை விவசாயிகளுக்கு, முருகேசன் (உதவி வேளாண் அலுவலர்,பென்னாகரம்) எடுத்துரைத்தார். பிரசாந்த் (உதவி வேளாண் பொறியியல் அலுவலர்), சீனிவாசன் (தர்மபுரி வேளாண் பொறியியல் துறை) ஆகியோர் பிரச்சாரத்திற்கு தேவையான உதவிகளை செய்தனர்.கலை (வேளாண் உதவி தொழில் அலுவலர், ஆத்மா திட்டம் பென்னாகரம்) அவர்கள் கூட்டத்திற்கு தேவையான ஏற்பாடுகளை செய்தார்.
இந்த வேளாண் வளர்ச்சிக்கான பிரச்சார கூட்டத்தில் மத்திய மற்றும் மாநில அரசுகளின் திட்டங்கள் மக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. மேலும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக பயிர் பாதுகாப்பு, சாகுபடி முறை தொடர்பான தொழில்நுட்பங்களும் விவசாயிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது.
இந்த பிரச்சார கூட்டத்தில் 1223 விவசாயிகள் பங்கேற்ற நிலையில், விஞ்ஞானிகளுடன் நேரடியாக கலந்துரையாடி தங்களது சந்தேகங்களுக்கு விளக்கம் பெற்றனர். இந்த பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக அனைவருக்கும் தொழில்நுட்பங்கள் அடங்கிய கையேடு வழங்கப்பட்டது
இந்த பிரச்சாரத்தின் மூலம் காரீப் பருவத்திற்கேற்ற சாகுபடி தொழில்நுட்பங்கள், கால்நடை வளர்ப்பு தொழில்நுட்பங்கள், இயற்கை விவசாய நடைமுறைகள், மண் சுகாதார அட்டை அடிப்படையிலான பயிர் தேர்வு,உரங்களின் சீரான பயன்பாட்டை ஊக்குவித்தல், தகவல் தொழில்நுட்பம் மற்றும் நவீன உபகரணங்கள் பயன்பாடு மற்றும் அரசு திட்டங்கள் போன்றவற்றிற்கு முக்கியத்துவம் கொடுத்து விவசாயிகள் மத்தியில் எடுத்துரைக்க பட்டது.
வேளாண் வளர்ச்சிகான பிரச்சார இயக்கம், தர்மபுரி மாவட்டத்தில் வருகிற ஜூன் 12 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. எனவே, விவசாயிகள் அனைவரும் இந்த பிரச்சார கூட்டத்தில் தவறாமல் பங்கேற்று அரசின் திட்டங்கள் குறித்த தகவலையும், புதிய வேளாண் தொழில்நுட்பங்களையும், வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் மற்றும் மத்திய ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் மூலம் கேட்டறிந்து பயன்பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறது.