தமிழகத்தில் இருந்து தேர்வான 6 மாநிலங்களவை எம்.பி.க்களின் பதவிக்காலம் வரும் ஆகஸ்ட் மாதத்துடன் நிறைவடைய உள்ளது. எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை அடிப்படையின் திமுகவுக்கு கிடைக்கும் 4 இடங்களில் மூன்றை தன்வசப்படுத்தி இருக்கிறது. மற்றொருன்றை திமுக கூட்டணி கட்சியான மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசனுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
அதிமுக வேட்பாளர்கள்
திமுக சார்பில் வழக்கறிஞர் வில்சன், கவிஞர் சல்மா, சேலம் மாவட்ட செயலாளர் சிவலிங்கம் ஆகியோரை வேட்பாளர்களாக திமுக களம் இறக்கியுள்ளது.
அதேபோல பிரதிநிதித்துவ அடிப்படையில் அதிமுகவுக்கு இரண்டு எம்.பிக்கள் சீட் கிடைக்கும். அந்த வகையில் ராதாபுரத்தை சேர்ந்தவரும், இன்றைய சபாநாயகர் அப்பாவுவை 2016ல் வென்றவரும், அதிமுகவின் வழக்கறிஞர் அணி செயலாளருமான இன்பதுரை மற்றும் அதேபோல் செங்கல்பட்டு மற்றும் மதுராந்தகத்தில் அதிமுகவில் துடிப்பாக செயல்பட்டு வந்தவரும், அதிமுக செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட அவைத்தலைவரும் வழக்கறிஞருமான தனபால் ஆகியோர் அதிமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
தேமுகவுக்கு தற்போது சீட் இல்லை
இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி வேலுமணி மற்றும் கே.பி.முனுசாமி, அதிமுக சார்பில் இன்பதுரை மற்றும் தனபால் போட்டியிடுவார்கள் என அறிவித்தனர். மேலும் 2026-ம் ஆண்டு ராஜ்யசபா தேர்தலில் தேமுதிகவிற்கு ஒரு சீட் ஒதுக்கப்படும் என அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக அதிமுக – தேமுதிக கூட்டணி உடன்பாட்டின் படி ராஜ்ய சபா தேர்தலில் தேமுதிகவிற்கு ஒரு சீட் வழங்க வேண்டும் என்றும் அதுதான் நியாயம்.
திமுக சொன்னதை போல கூட்டணி கட்சிக்கு ஒரு சீட் கொடுத்துள்ளது வரவேற்கத்தக்கது. அதிமுகவும் கூட்டணி தர்மத்தை கடைபிடிக்க வேண்டும். இல்லையென்றால் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுக்கப்படும் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் அடுத்தாண்டு நடைபெறும் ராஜ்ய சபா தேர்தலில் சீட் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திமுகவுக்கு பிரேமலதா நன்றி
இந்த நிலையில் அதிமுகவின் அறிவிப்பு குறித்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “2026ஆம் ஆண்டு தேமுதிகவிற்கு ராஜ்யசபா சீட் வழங்கப்படும் என அதிமுக வாக்குறுதி தந்தது. ஆனால் 2026-ல் ராஜ்யசபா சீட் அளிப்போம் என அதிமுக கடமையை ஆற்றியுள்ளது.கூட்டணி குறித்து ஜனவரியில் தான் அறிவிப்போம். அதேபோல் திமுக பொதுக்குழுவில் விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம்” என தெரிவித்தார்.
அதிமுக வேட்பாளர்கள்
திமுக சார்பில் வழக்கறிஞர் வில்சன், கவிஞர் சல்மா, சேலம் மாவட்ட செயலாளர் சிவலிங்கம் ஆகியோரை வேட்பாளர்களாக திமுக களம் இறக்கியுள்ளது.
அதேபோல பிரதிநிதித்துவ அடிப்படையில் அதிமுகவுக்கு இரண்டு எம்.பிக்கள் சீட் கிடைக்கும். அந்த வகையில் ராதாபுரத்தை சேர்ந்தவரும், இன்றைய சபாநாயகர் அப்பாவுவை 2016ல் வென்றவரும், அதிமுகவின் வழக்கறிஞர் அணி செயலாளருமான இன்பதுரை மற்றும் அதேபோல் செங்கல்பட்டு மற்றும் மதுராந்தகத்தில் அதிமுகவில் துடிப்பாக செயல்பட்டு வந்தவரும், அதிமுக செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட அவைத்தலைவரும் வழக்கறிஞருமான தனபால் ஆகியோர் அதிமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
தேமுகவுக்கு தற்போது சீட் இல்லை
இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி வேலுமணி மற்றும் கே.பி.முனுசாமி, அதிமுக சார்பில் இன்பதுரை மற்றும் தனபால் போட்டியிடுவார்கள் என அறிவித்தனர். மேலும் 2026-ம் ஆண்டு ராஜ்யசபா தேர்தலில் தேமுதிகவிற்கு ஒரு சீட் ஒதுக்கப்படும் என அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக அதிமுக – தேமுதிக கூட்டணி உடன்பாட்டின் படி ராஜ்ய சபா தேர்தலில் தேமுதிகவிற்கு ஒரு சீட் வழங்க வேண்டும் என்றும் அதுதான் நியாயம்.
திமுக சொன்னதை போல கூட்டணி கட்சிக்கு ஒரு சீட் கொடுத்துள்ளது வரவேற்கத்தக்கது. அதிமுகவும் கூட்டணி தர்மத்தை கடைபிடிக்க வேண்டும். இல்லையென்றால் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுக்கப்படும் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் அடுத்தாண்டு நடைபெறும் ராஜ்ய சபா தேர்தலில் சீட் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திமுகவுக்கு பிரேமலதா நன்றி
இந்த நிலையில் அதிமுகவின் அறிவிப்பு குறித்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “2026ஆம் ஆண்டு தேமுதிகவிற்கு ராஜ்யசபா சீட் வழங்கப்படும் என அதிமுக வாக்குறுதி தந்தது. ஆனால் 2026-ல் ராஜ்யசபா சீட் அளிப்போம் என அதிமுக கடமையை ஆற்றியுள்ளது.கூட்டணி குறித்து ஜனவரியில் தான் அறிவிப்போம். அதேபோல் திமுக பொதுக்குழுவில் விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம்” என தெரிவித்தார்.