மதுரையில் இன்று நடைபெறும் திமுக பொதுக்குழு கூட்டம், கட்சிக்குள் மற்றும் தமிழக அரசியல் களத்தில் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
முதல்வரின் ரோடு ஷோ
வழக்கமாக திமுக, சென்னை, திருச்சி, அல்லது கோவையை மையமாகக் கொண்டு இத்தகைய கூட்டங்களை நடத்துவது வழக்கம். ஆனால், கடந்த 1977-க்கு பிறகு முதன்முறையாக மதுரை நகரைத் தேர்வு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர்.
இந்த கூட்டம் நடக்கும் நிலையில், மதுரை மாநகரம் இன்று அரசியல் திருவிழா போல் பரபரப்பாக காணப்படுகிறது. பொதுக்குழு கூட்டத்துடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரோடு ஷோவும் கோலாகலமாக நடைபெற்றது.
கூடுதல் பதவிகள்
திமுக கூட்டணிக்கு எதிராக அதிமுக-பாஜக கூட்டணி ஒருங்கிணைந்து செயல்பட உள்ள சூழ்நிலையில், தென்மாவட்டங்களில் கட்சி ஆதரவை வலுப்படுத்தும் நோக்கத்துடன் மதுரை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. மேலும், டங்ஸ்டன் விவகாரத்தில் திமுக எடுத்த உறுதியான நிலைப்பாடு, மதுரை மக்களிடையே கட்சிக்கு மேலதிக செல்வாக்கு பெற்றுத் தந்துள்ளது.
இளைஞர்கள் மற்றும் பெண்களை கட்சியில் ஈர்க்கும் நோக்கத்தில், இந்த பொதுக்குழுவில் முக்கிய அறிவிப்புகள் வெளியாவும் என எதிர்பார்க்கப்படுகிறது.துணை பொதுச்செயலாளர் பதவிகள் அதிகரிக்கப்படலாம் என்பதும் பெண்கள், இளைஞர்களுக்கு கூடுதல் பதவிகள் வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பும் உருவாகியுள்ளது.
உதயநிதிக்கு பொறுப்பு?
புதியவா்கள், செயல்திறனுள்ளவர்களை முன்னிறுத்தும் முயற்சி மேற்கொள்ளப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. வரவிருக்கும் சட்டமன்றத்தேர்தலில் வெற்றி பெறும் வகையில், முக்கியமான அரசியல் அறிவுரைகளும் கூட்டத்தில் முன்வைக்கப்படும் என்று கூறப்படுகிறது.
மொத்தத்தில் தென்மண்டல தலைநகராக மதுரை திகழ்வதால், இன்றைய பொதுக்குழு, வரவிருக்கும் சட்டமன்றத்தேர்தலை நோக்கி திமுகவின் நகர்வை வலுப்படுத்தும் ஒரு முக்கியமான கட்டமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. திமுக பொதுக்குழுவில் கட்சியை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டுசெல்லும் நோக்கில் முக்கிய மாற்றங்கள் ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. திமுக துணை பொதுச்செயலாளர்களின் எண்ணிக்கை உயர்த்தப்படலாம் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
முதல்வரின் ரோடு ஷோ
வழக்கமாக திமுக, சென்னை, திருச்சி, அல்லது கோவையை மையமாகக் கொண்டு இத்தகைய கூட்டங்களை நடத்துவது வழக்கம். ஆனால், கடந்த 1977-க்கு பிறகு முதன்முறையாக மதுரை நகரைத் தேர்வு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர்.
இந்த கூட்டம் நடக்கும் நிலையில், மதுரை மாநகரம் இன்று அரசியல் திருவிழா போல் பரபரப்பாக காணப்படுகிறது. பொதுக்குழு கூட்டத்துடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரோடு ஷோவும் கோலாகலமாக நடைபெற்றது.
கூடுதல் பதவிகள்
திமுக கூட்டணிக்கு எதிராக அதிமுக-பாஜக கூட்டணி ஒருங்கிணைந்து செயல்பட உள்ள சூழ்நிலையில், தென்மாவட்டங்களில் கட்சி ஆதரவை வலுப்படுத்தும் நோக்கத்துடன் மதுரை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. மேலும், டங்ஸ்டன் விவகாரத்தில் திமுக எடுத்த உறுதியான நிலைப்பாடு, மதுரை மக்களிடையே கட்சிக்கு மேலதிக செல்வாக்கு பெற்றுத் தந்துள்ளது.
இளைஞர்கள் மற்றும் பெண்களை கட்சியில் ஈர்க்கும் நோக்கத்தில், இந்த பொதுக்குழுவில் முக்கிய அறிவிப்புகள் வெளியாவும் என எதிர்பார்க்கப்படுகிறது.துணை பொதுச்செயலாளர் பதவிகள் அதிகரிக்கப்படலாம் என்பதும் பெண்கள், இளைஞர்களுக்கு கூடுதல் பதவிகள் வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பும் உருவாகியுள்ளது.
உதயநிதிக்கு பொறுப்பு?
புதியவா்கள், செயல்திறனுள்ளவர்களை முன்னிறுத்தும் முயற்சி மேற்கொள்ளப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. வரவிருக்கும் சட்டமன்றத்தேர்தலில் வெற்றி பெறும் வகையில், முக்கியமான அரசியல் அறிவுரைகளும் கூட்டத்தில் முன்வைக்கப்படும் என்று கூறப்படுகிறது.
மொத்தத்தில் தென்மண்டல தலைநகராக மதுரை திகழ்வதால், இன்றைய பொதுக்குழு, வரவிருக்கும் சட்டமன்றத்தேர்தலை நோக்கி திமுகவின் நகர்வை வலுப்படுத்தும் ஒரு முக்கியமான கட்டமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. திமுக பொதுக்குழுவில் கட்சியை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டுசெல்லும் நோக்கில் முக்கிய மாற்றங்கள் ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. திமுக துணை பொதுச்செயலாளர்களின் எண்ணிக்கை உயர்த்தப்படலாம் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.