தமிழ்நாடு

Schools Reopen: கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று திறப்பு

கோடை விடுமுறை நிறைவடைந்ததை அடுத்து, தமிழகத்தில் இயங்கும் அனைத்து வகை பள்ளிகளும் இன்று திறக்கப்படுகின்றன.

 Schools Reopen: கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று திறப்பு
தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் இன்று திறப்பு
கோடை விடுமுறை நிறைவடைந்ததை அடுத்து, தமிழகத்தில் இயங்கும் அனைத்து வகை பள்ளிகளும் இன்று திறக்கப்படுகின்றன.

கோடை விடுமுறை

பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு கடந்த மார்ச் 3 முதல் ஏப். 15 வரை நடத்தப்பட்டது. அதேபோல், 1 முதல் 5-ஆம் வகுப்புகளுக்கு ஏப். 7 முதல் 17-ஆம் தேதி வரையும், 6 முதல் 9-ஆம் வகுப்புகளுக்கு ஏப். 8 முதல் 24-ஆம் தேதி வரையும் ஆண்டு இறுதித் தேர்வுகளும் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து பள்ளி மாணவர்களுக்கு ஏப். 25 முதல் கோடை விடுமுறை விடப்பட்டது.

இந்த நிலையில், கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று திறக்கப்படுகின்றன. இதற்காக பள்ளி வளாகப் பராமரிப்பு, நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு முன்னேற்பாடுகள் முடிக்கப்பட்டு பள்ளிகள் தயார் நிலையில் உள்ளன.

பள்ளிகள் இன்று திறப்பு

முதல் நாளான இன்றே அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில், மாணவர்களுக்கு விலையில்லா பாடநூல்கள், நோட்டுப் புத்தகங்கள் போன்ற நலத்திட்ட பொருள்கள் விநியோகம் செய்வதற்கான பணிகளும் தயார் நிலையில் உள்ளன.

முன்னதாக பள்ளி கட்டடத்தின் உறுதி தன்மை மற்றும் பள்ளி வளாகத்தில் தூய்மைப் பணி, மின்சார பாதிப்புகள் உள்ளிட்டவை குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் எனவும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளிகள் இன்று திறக்கப்படுவதால் மாணவ, மாணவிகளை வரவேற்க ஆசிரியர்கள் சார்பில் ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.